<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962</id><updated>2012-02-16T15:13:02.388+05:30</updated><category term='செம்மொழி இலக்கிய ஆய்வு'/><category term='புதுச்சேரி வரலாறு'/><category term='திரைப்பட ஆய்வு'/><category term='தமிழ் ஆய்வுகள்'/><category term='ஊடக ஆய்வு விளம்பரம்'/><category term='சிறுகதை'/><category term='ஊடக மொழி ஆய்வு'/><category term='ஊடக ஆய்வு : விளம்பரம்'/><category term='ஊடக ஆய்வு'/><category term='வலைப்பதிவு விளக்கம்'/><category term='திரைப்பட மொழி ஆய்வு'/><category term='திரைப்படம் -சாதனையாளர்'/><category term='வலைப்பதிவு ஆய்வு'/><category term='கவிதை'/><title type='text'>படர்க்கை</title><subtitle type='html'>பேராசிரியர் முனைவர் நா.இளங்கோவின் ஊடக வாசல்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>35</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-5145737952496874156</id><published>2011-05-04T10:44:00.000+05:30</published><updated>2011-05-04T10:44:56.838+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் ஆய்வுகள்'/><title type='text'>தமிழ் ஆராய்ச்சி வரலாறு -ஒரு சுருக்க அறிமுகம்</title><content type='html'>&lt;b&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களின் ஆய்வுத் தேட்டத்தைத் தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் இடைக்கால உரையாசிரியர்களின் உரைப்பகுதிகளிலும் பரக்கக் காணலாம். "மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதல் காரணம் நோக்கெனப் படுமே" என்று தொல்காப்பியர் குறிப்பிடும் நோக்கு தமிழரின் ஆய்வு அணுகுமுறையின் ஒரு கூறு. முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணுவதும் பாடலுள் பயின்றவை நாடுவதும் ஒருவகை ஆய்வு அணுகுமுறையே. திருவள்ளுவர் குறிப்பிடும் நவில்தொறும் நூல் நயமும், குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளலும் ஆய்வு அணுகுமுறைகளே. இடைக்கால இலக்கண இலக்கிய உரையாசிரியர்கள், அனைவரும் ஆய்வாளர்களே. ஆங்கிலக் கல்வி நம்மிடம் இயல்பாக, மரபாக அமைந்திருந்த ஆய்வு மனப் பான்மையை கூர்மைப்படுத்தியது என்பது உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் தமிழாய்வு சிறிய அளவில் நிறுவனம் சார்ந்த கல்வியாளர்களாலும் பெரும்பான்மை நிறுவனம் சாராத கல்வியாளர்களாலும் வளர்த்தெடுக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி பல்கலைக் கழகங்களின் பெருக்கத்தாலும் ஆய்வுப் படிப்புகளின் நெருக்கத்தாலும் தமிழாய்வு பெரிதும் நிறுவனம் சார்ந்த கல்வியாளர்களையே சார்ந்து நிற்கவேண்டிய கட்டாயத்திற்குள்ளானது. கல்வியாளர் ஆய்வுகளுக்கு அப்பாற்பட்டு சிறுபத்திரிக்கை வட்டங்களிலும் சில சுதந்திர ஆய்வாளர்களாலும் தமிழாய்வு குறிப்பிடத்தக்க இலக்கை எட்டியுள்ளமை நிறைவளிக்கக் கூடியதே. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பத்தாண்டுகளில் கல்விப்புலம் சார்ந்து நடத்தப்பெறும் ஆய்வரங்குகள் பெருகியுள்ளன. ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் மட்டுமில்லாமல் பல அரசு, தனியார் கல்லூரிகளும் தமிழ் கலை இலக்கிய அமைப்புகள் பலவும் சிற்றிதழ்கள் சார்ந்தும் இவ்வகை ஆய்வரங்குகள் நடத்தப்படுகின்றன. இவ் ஆய்வரங்குகளில் வாசிக்கப்படும் கட்டுரைகள் பெரும்பாலும் நூலாக்கம் பெருகின்றன. இன்னும் சிலகாலம் கழித்து இவ்வகை ஆய்வரங்குகளின் ஆய்வுகள் மதிப்பிடப்படும். தமிழாய்வுக்கு உண்மையிலேயே இவ்வகை ஆய்வரங்குகளின் பங்களிப்பு யாது? என்பது சீர்தூக்கிப் பார்க்கப்படும். அல்லன நீக்கி நல்லன பாதுகாக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மைக் காலங்களில் தமிழாய்வு மேலை இலக்கியத் திறனாய்வு அணுகுமுறைகள் பலவற்றையும் தம்முள் இணைத்துக் கொண்டுள்ளது. புதிய புதியத் துறைகள் புதிய புதிய அணுகுமுறைகள் தமிழாய்வை மேலும் செழுமைப்படுத்தும் என்பதில் நமக்கு எள் அளவும் ஐயமில்லை. அதே சமயம் தமிழின் மரபார்ந்த ஆய்வு அணுகுமுறைகளையும் நாம் மீட்டெடுத்தல் அவசியம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-5145737952496874156?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/5145737952496874156/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2011/05/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/5145737952496874156'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/5145737952496874156'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2011/05/blog-post.html' title='தமிழ் ஆராய்ச்சி வரலாறு -ஒரு சுருக்க அறிமுகம்'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-5004327277702559563</id><published>2010-11-21T18:23:00.001+05:30</published><updated>2010-11-21T18:25:03.440+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செம்மொழி இலக்கிய ஆய்வு'/><title type='text'>முத்தொள்ளாயிரம் -சில குறிப்புகள் -(பகுதி-1)</title><content type='html'>&lt;b&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்&lt;br /&gt;பட்டமேற்படிப்பு மையம்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முத்தொள்ளாயிரம் -சில குறிப்புகள் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசின் செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனம் பட்டியலிட்டுள்ள நாற்பத்தொரு செம்மொழி இலக்கண இலக்கியங்களில் முத்தொள்ளாயிரமும் ஒன்று. சங்க இலக்கியங்களோடு ஒருங்குவைத்து எண்ணப்படும் தகுதிவாய்ந்தது இந்நூல். வெண்பா யாப்பில் இயற்றப்பட்ட இந்நூல் சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்களின் புகழ்பாடும் ஓர் அரிய புதையலாகும். மூவேந்தர்களைப் பாடினாலும் குறிப்பிட்ட எந்த மன்னனையும் பெயர்சுட்டிப் பாடாமல் வேந்தர்களின் பொதுப் பெயர்களாலேயே அவர்களைச் சிறப்பித்துப் பாடும் வகையில் இந்நூலை யாத்துள்ளார் இந்நூலாசிரியர். அகம், புறம் என்ற இருவகைப் பாடுபொருளாலும் வேந்தர்களைச் சிறப்பிக்கும் இந்நூலின் ஆசிரியர் யாரென்று அறிய இயலவில்லை. நூலும் காலவெள்ளத்தில் காணாமல் போய்விட்டது. ஆயினும் புறத்திரட்டு என்னும் நூலின்வழியாக 108 பாடல்கள் முத்தொள்ளாயிரச் செய்யுள்களாக இன்றைக்குக் கிடைக்கின்றன. முத்தொள்ளாயிரம் என்ற முழுநூல் மூவேந்தர்கள் ஒவ்வொருவர் மீதும் முந்நூறு முந்நூறு பாடல்களாக மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட பேரிலக்கியமாகத் திகழ்ந்திருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் துணிபு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எண் செய்யுள் சிற்றிலக்கியம்: &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முத்தொள்ளாயிரம் என்ற நூற்பெயரில் உள்ள தொள்ளாயிரம் என்பது ஒருவகை சிற்றிலக்கியமாகும். தொள்ளாயிரம் என்ற தொகையுடைய நூல்கள் தமிழில் பல இருந்தன என்று அறிகிறோம். ‘வச்சத் தொள்ளாயிரம்’, ‘அரும்பைத் தொள்ளாயிரம்’ முதலான நூல்கள் பற்றிய குறிப்பினை இலக்கண உரையாசிரியர்களின் உரைவழி அறிய முடிகின்றது. தொள்ளாயிரம் என்ற சிற்றிலக்கிய வகை எண் செய்யுள் என்று பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் இலக்கிய வகையின் ஓர் உட்பிரிவாயிருக்கக் கூடும் என ஊகிக்க முடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஊரையும் பேரையும் உவந்தெண் ணாலே&lt;br /&gt;சீரிதிற் பாடல்எண் செய்யு ளாகும். &lt;/b&gt;   (இ.வி.பாட்டியல், நூ.88)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஏற்றிடும் பாட்டுடைத் தலைவனூர்ப் பெயரினை&lt;br /&gt;யிசைத்து மெண்ணாற் பெயர் பெற&lt;br /&gt;ஈரைந்து கவிமுதல் ஆயிரம் வரைசொலல்&lt;br /&gt;எண்செய்யு ளாகு மன்றே  &lt;/b&gt; (பிரபந்த தீபிகை, நூ.14)&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கண விளக்கப் பாட்டியல் எண் செய்யுள் நூற்பாவிற்கு எழுதியுள்ள உரையில், “பாட்டுடைத் தலைவன் ஊரினையும் பெயரினையும் உவந்து எண்ணாலே பத்து முதல் ஆயிரமளவும் பொருட்சிறப்பினாலே பாடுதல் அவ்வவ் எண்ணாற் பெயர்பெற்று நடக்கும் எண் செய்யுளாம். அவை முத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலியன” என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. இவ்விளக்கங்களை மேற்கோள் காட்டிப் பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் எண் செய்யுள் எனும் இலக்கிய வகையே முத்தொள்ளாயிரம் என விளக்கமளிக்கிறார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை. (இலக்கிய தீபம், பக். 178-79)&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் எண் செய்யுள் என்ற இலக்கிய வகையில் பல பிரிவுகள் உண்டென்பதும் பத்து பாடல்கள் முதல் ஆயிரம் பாடல்கள் வரை பாடப்படும் எண் செய்யுள்கள் பாடப்படும் பாடல்களின் எண்ணிக்கைக்கேற்பப் பெயர்பெறும் என்பதும் பெறப்படுகின்றது. அப்படிப் பாடப்படும் எண் செய்யுள்களில் தொள்ளாயிரம் எண்ணிக்கை அமைய, பாட்டுடைத் தலைவனைப் புகழ்ந்து பாடும் ஒரு மரபு உண்டென்பதும் அத்தகு மரபின் அடிப்படையின் முத்தொள்ளாயிரம் பாடப்பட்டது என்பதும் நாம் கவனத்தில் கொள்ளத்தக்க செய்தியாகும். &lt;br /&gt;&lt;br /&gt;மரபாகப் பாடப்படும் இலக்கியவகை அல்லாது புதிதாகப் புனைந்து பாடப்படும் இலக்கியவகையைத் தொல்காப்பியர் விருந்து என்று குறிப்பிடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;விருந்தே தானும் &lt;br /&gt;புதுவது கிளந்த யாப்பின் மேற்றே  &lt;/b&gt; (தொல். செய்யுளியல் நூ. 551)&lt;br /&gt;&lt;br /&gt;பேராசிரியர் இந்நூற்பா உரையில் விருந்து இலக்கியவகை குறித்து விளக்கமளிக்கையில், “புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்துவரச் செய்வது, அது முத்தொள்ளாயிரமும், பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளுமென உணர்க” என்று எழுதியுள்ளதனால் முத்தொள்ளாயிரம் விருந்து என்ற வனப்பினால் அமைந்த இலக்கியவகை என்பது பெறப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கிடைத்துள்ள முத்தொள்ளாயிரப் பாடல்களின் எண்ணிக்கை:  &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முத்தொள்ளாயிரம் கால வெள்ளத்தில் மறைந்து போன தமிழ் நூல்களில் ஒன்று என்றாலும், புறத்திரட்டு என்ற நூலின் வழியாகவும் (108 பாடல்கள்) உரையாசிரியர்களின் இலக்கண உரைகளின் வழியாகவும் நூலின் ஒரு சிறு பகுதியேனும் நமக்குக் கிடைத்திருப்பது உண்மையில் ஓர் அருமைப்பாடுடைய நிகழ்வே. இப்பொழுது முத்தொள்ளாயிரப் பாடல்கள் என்று நமக்குக் கிடைப்பன நூற்று முப்பது பாடல்களேயாகும். இதில் இருபதுக்கும் மேற்பட்ட பாடல்கள் பழைய உரைகளினிடையே கண்டெடுக்கப்பட்டு முத்தொள்ளாயிரச் செய்யுளாக இருக்கக்கூடும் என்ற யூகத்தில் சேர்க்கப்பட்டவைகளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;முத்தொள்ளாயிரத்தை முதன்முதலில் தனி நூலாகப் பதிப்பித்தவர் இரா.இராகவய்யங்கார். 1905 இல் இப்பதிப்பு வெளிவந்துள்ளது. இப்பதிப்பில் 110 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பின்வந்த பதிப்பாசிரியர்கள் பலரும் இதனையே பின்பற்றி 110 பாடல்களைப் பதிப்பித்தனர். ரசிகமணி டி.கே.சி. அவர்கள் தம் பதிப்பில் 99 பாடல்களை மட்டுமே பதிப்பித்தார். 1946 இல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாக முத்தொள்ளாயிரத்தைப் பதிப்பித்த ந.சேதுரகுநாதன் அவர்கள் 130 பாடல்களைப் பதிப்பித்துள்ளார். கூடுதலாக அவர் பதிப்பித்தப் பாடல்கள் குறித்து முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இற்றைக்கு ஐந்நூறியாண்டுகட்கு முன்னர்ப் புறத்திரட்டு என்னுந் தொகைநூல் தொகுத்த சான்றோர், அந்நூலின்கண் இடையிடையே மிளிரவைத்துப் போந்த நூற்றெட்டு முத்தொள்ளாயிரச் செய்யுட்களைப் பெற்று, அவற்றைப் பயின்று இன்பந் துய்த்துத் தன்னை மறந்து உவகை எய்தும் பேறும் கிடைத்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;கிடைக்கப்பெற்ற விழுமிய பாடல்களின் விழுமிய சுவையானது தூண்ட இனிமேலும் இத்தகைய பாடல்கள் கிடைக்கும் கொல்லோ என ஆராய்ந்து செல்வுழிப் பழைய உரைகளினிடையே பயின்று கிடந்தனவாய இருபத்திரண்டு பாடல்கள் இவற்றோடு ஒத்த இயல்பினவாய்க் காணப்பட்டமையின் அவையும் இவற்றோடு சேர்த்து உரையெழுதி வெளியிடப் பெறுவனவாயின. (சேதுரகுநாதன், முன்னுரை, ப.6)&lt;br /&gt;&lt;br /&gt;என்கிறார் முத்தொள்ளாயிர உரையாசிரியர் சேதுரகுநாதன் அவர்கள். அவர் பதிப்பின்படி கடவுள் வாழ்த்துப் பாடல்- 1, பாண்டியன் பற்றிய பாடல்கள்- 60, சோழன் பற்றிய பாடல்கள்- 46, சேரன் பற்றிய பாடல்கள்- 23 என 130 பாடல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தொள்ளாயிரமா? மூன்று தொள்ளாயிரமா? &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு முத்தொள்ளாயிரம் நூல் என்றவகையில் நமக்குக் கிடைப்பன 130 பாடல்கள் என்றாலும் முழுநூல் பாடல்களின் எண்ணிக்கை குறித்து இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. முத்தொள்ளாயிரம் என்ற நூற்பெயர் மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட நூல் என்று பொருள்படும் என்பார் சிலர். அதாவது, சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்கள் ஒவ்வொருவர் மீதும் பாடப்பட்ட மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் என இரண்டாயிரத்து எழுநூறு பாடல்களைக் கொண்ட நூல் முத்தொள்ளாயிரம் என்பது அவர்கள் கருத்து. பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்களும் தொடக்கத்தில் இக்கருத்தினராயிருந்து பின்னர் இக்கருத்தினை மறுத்துரைக்கின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;எண் செய்யுள் என்ற இலக்கியவகையை விளக்கும் பாட்டியல் உரையாசிரியரும் பிரபந்த தீபிகையும் ‘ஈரைந்து கவிமுதல் ஆயிரம் வரைசொலல் எண்செய்யுளாகும்’ என்று பேரெல்லையை வரையறுத்துச் சொல்லியிருப்பதனால் முத்தொள்ளாயிரம் என்ற எண் செய்யுள் ஆயிரம் என்ற பேரெல்லையைக் கடந்து 2,700 பாடல்களால் பாடப்பட்டது என்பது பொருந்தாது என்றும் முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் மொத்தம் தொள்ளாயிரமே என்றும் மூன்று வகைப்பட்ட தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட நூல் என்று பொருள்கொள்ளலே பொருந்துமென்றும் சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள் ஒவ்வொருவர் மீதும் முந்நூறு முந்நூறு செய்யுட்களாக முத்தொள்ளாயிரம் இயற்றப்பட்டிருக்க வேண்டுமென்றும் வையாபுரிப்பிள்ளை கருதுகின்றார். (இலக்கிய தீபம், ப.179) &lt;br /&gt;&lt;br /&gt;இக்கருத்தே வலிமையுடையது. ஏனெனில் 2,700 பாடல்களால் ஒரு சிற்றிலக்கியம் பாடப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதோடு வச்சத் தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலான நூல்களும் தொள்ளாயிரம் என்ற எண்ணால் பெயர் பெற்றிருத்தலை நோக்க முத்தொள்ளாயிரம் மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட இலக்கியமே என்பது வெளிப்படை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முத்தொள்ளாயிரத்தின் காலம்: &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முத்தொள்ளாயிரத்தை முதல் முதலில் பதிப்பித்து வெளியிட்ட இரா. இராகவய்யங்கார் இந்நூலினை ‘ஓர் அரிய பெரிய பண்டைத் தமிழ் நூல்’ என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர்வந்த பதிப்பாசிரியர்கள் பலரும் சங்க காலத்திற்குப் பிற்பட்ட பழந்தமிழ் நூல் என்ற கருத்தினைப் பதிவு செய்கின்றார்கள். தொல்காப்பிய இலக்கண உரையாசிரியர்கள் பலரும் முத்தொள்ளாயிரத்தைப் பல இடங்களில் சான்று காட்டி உரை வரைந்துள்ளமையை நோக்க இடைக்காலத்தில் முத்தொள்ளாயிரம் தமிழறிஞர் களிடையே பெருவழக்காகப் பயின்று வந்துள்ளமையை உணர முடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;முத்தொள்ளாயிர நூல் முழுமையும் வெண்பா யாப்பில் பாடப்பட்டிருப்பதனைக் கொண்டு இந்நூல் பதினெண் கீழ்க்கணக்குக் காலத்தை ஒட்டியோ அல்லது அதன்பிறகோ பாடப்பட்டிருக்க வேண்டும் என்று கருத வாய்ப்புள்ளது. தொல்காப்பிய உரையாசிரியர் இளம்ப+ரணர் தம் பொருளதிகாரப் புறத்திணையியல் உரையில் முத்தொள்ளாயிரச் செய்யுள் ஒன்றினை மேற்கோள் காட்டுகிறார். அவரது காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு என்பர். எனவே அவர் காலத்திற்கு முந்தைய நூல் முத்தொள்ளாயிரம் என்பது தெளிவாகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;‘முத்தொள்ளாயிரத்தின் காலம்’ என்ற கட்டுரையில் இந்நூலின் காலம் குறித்துத் தனிப்பட ஆய்வுசெய்யும் வையாபுரிப்பிள்ளை அவர்கள் பல்வேறு அகப்புறச் சான்றுகளின் வழியாகக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முத்தொள்ளாயிரம் இயற்றப்பட்டிருக்க வேண்டுமென நிறுவுகிறார். (இலக்கிய தீபம், பக். 183-88) இக்கருத்தே வலிமையுடையதென்றால், மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடும் இந்நூல் கி.பி. 6 முதல் 8 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் கோலோச்சிய பல்லவப் பேரரசு குறித்து ஏதும் குறிப்பிடாமல் மௌனம் சாதித்திருப்பதற்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட வேண்டியதாகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-5004327277702559563?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/5004327277702559563/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2010/11/1.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/5004327277702559563'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/5004327277702559563'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2010/11/1.html' title='முத்தொள்ளாயிரம் -சில குறிப்புகள் -(பகுதி-1)'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-1057309413002572624</id><published>2010-11-21T18:20:00.001+05:30</published><updated>2010-11-21T18:26:27.252+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செம்மொழி இலக்கிய ஆய்வு'/><title type='text'>முத்தொள்ளாயிரம் -சில குறிப்புகள் -(பகுதி-2)</title><content type='html'>&lt;b&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்&lt;br /&gt;பட்டமேற்படிப்பு மையம்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர்: &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முழுநூல் நமக்குக் கிடைக்காத காரணத்தால் முத்தொள்ளாயிர நூலின் ஆசிரியர் பற்றி ஏதும் அறியமுடியவில்லை. உரையாசிரியர்கள் பலரும் முத்தொள்ளாயிரத்தை மேற்கோள் காட்டும் சமயங்களில் கூட நூலாசிரியரின் பெயரைக் குறிப்பிடாமல், நூற்பெயரை மட்டுமே மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதை நோக்கும் பொழுது நூல் கிடைத்த காலத்திலேயே கூட நூலாசிரியர் பெயர் பற்றிய குறிப்பு கிடைக்காமல் போயிருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாக முத்தொள்ளாயிரத்தைப் பதிப்பித்த சேதுரகுநாதன் அவர்கள் தம் உரைநூலின் முன்னுரையில் முத்தொள்ளாயிரத்தின் நூலாசிரியர் யாராயிருக்கக் கூடும் என்று ஓர் ஒப்பியல் ஆய்வினை நிகழ்த்தி, முத்தொள்ளாயிர நூலுக்கும் கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி, திருஈங்கோய் மலை எழுபது ஆகிய இருநூல்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைக் கூறுகள் பலவற்றையும் எடுத்துக்காட்டி, மேற்குறிப்பிட்ட இருநூல்களின் ஆசிரியராகிய நக்கீரதேவ நாயனாரே முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியராயிருத்தல் கூடும் என்று எழுதுகின்றார். சேதுரகுநாதன் காட்டிய ஒப்புமைப் பகுதிகள் உண்மையில் மிகுந்த வியப்பளிக்கக் கூடிய விதத்தில் ஒத்து அமைகின்றன என்றாலும் இக்கருத்தினை முடிந்த முடிபாக ஏற்றுக்கொள்ளுதல் எளிதன்று.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் மூவேந்தர்களும் எந்தக் காலத்திலும் இணைந்து செயல்படாத ஒரு வரலாற்றுச் சூழலில் மூவேந்தர்களையும் ஒத்த நிலையில் இணைத்துப் பாட்டுடைத் தலைவர்களாக்கி ஓர் இலக்கியம் படைக்கவேண்டுமென்ற முத்தொள்ளாயிர ஆசிரியரின் பெருவிருப்பம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் உருவாக்கிக் காட்டிய ஒன்றுபட்ட தமிழகம் என்ற பாதையில் புதுநடை போட்ட பெருமை இந்நூலாசிரியருக்கு உண்டு. மூவேந்தர்களைக் குறிப்பிடும் போதும் அவர்களின் வெற்றியைக் குறிப்பிடும் போதும் பகைவர்கள் மற்றும் சிற்றரசர்களைக் குறிப்பிடும் போதும் வரலாற்று அடையாளங்கள் தோன்றாமல் பொதுப் பெயர்களையே கையாண்டு நூலை அமைத்துள்ள நூலாசிரியரின் திறம் அவரின் தமிழ்நிலப் பொதுநோக்கைப் புலப்படுத்துகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மூவேந்தர்களும் வலிமையிழந்து அந்நியர் ஆட்சியில் கீழ்நிலை உற்ற காலத்தில் தமிழ் வேந்தர்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கோடும் தமிழின எழுச்சியின் அடையாளமாகவும் முத்தொள்ளாயிரம் பாடப்பட்டிருக்க வேண்டும் என ஊகிக்க முடிகின்றது. முத்தொள்ளாயிரத்தில் இடம்பெற்றுள்ள, “மாறனை இன்தமிழால் யாம்பாடும் பாட்டு” (முத். பா.2), “பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ் நூல்” (முத். பா.5), “தண்படா யானை தமிழ்நர் பெருமாற்கென்” (முத். பா.32) முதலான பகுதிகள் இக்கருத்திற்கு அரண் சேர்ப்பனவாக அமைந்துமை கண்கூடு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நூலாசிரியர் சமயம்: &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முத்தொள்ளாயிர நூலாசிரியர் யார்? என்பது தெரியவில்லை என்றாலும் அவரின் சமயம் இன்னது என்று அறிவதற்கான சான்று நூலில் வெளிப்படையாகவே அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னிய நாண்மீன் மதிகனலி யென்றிவற்றை&lt;br /&gt;முன்னம் படைத்த முதல்வனைப் -பின்னரும்&lt;br /&gt;ஆதிரையா னாதிரையான் என்றென் றயருமால்&lt;br /&gt;ஊர்திரைநீர் வேலி யுலகு       (முத். பா.1)&lt;br /&gt;&lt;br /&gt;என்ற பாடல் கடவுள் வாழ்த்துச் செய்யுளாக முத்தொள்ளாயிரத்தில் அமைந்துள்ளது. இப்பாடல் ஆதிரையான் என்று சிறப்பிக்கப்படும் சிவபெருமானை வாழ்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் இக்கடவுள் வாழ்த்துப்பாடலை நூலின் காப்புச் செய்யுளாகப் பாடிய முத்தொள்ளாயிர நூலாசிரியர் சைவ சமயத்தினர் என்பது வெளிப்படையாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முத்தொள்ளாயிரத்தின் பாடுபொருள்: &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பழந்தமிழ் மரபு, பாடுபொருளை அகம், புறம் என இரண்டாகப் பகுக்கின்றது. முத்தொள்ளாயிரமும் பழந்தமிழ் மரபைப் பின்பற்றி அகம், புறம் என்ற இரண்டு பொருண்மையிலேயே அமைந்து சிறக்கின்றது. இதில் புகழ், நாடு, நகர், திறை, எயில் கோடல், குதிரை மறம், யானை மறம், களம், பகைப்புலம் பழித்தல், வெற்றி என்ற பகுதியில் அமையும் பாடல்கள் அனைத்தும் புறம் சார்ந்த நிலையிலும், கைக்கிளை சார்ந்த பாடல்கள் அனைத்தும் அகம் சார்ந்த நிலையிலும் அமைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;புறம் சார்ந்த உள்ளடக்கங்களைக் கொண்டு எழுதப்பட்ட முத்தொள்ளாயிரப் பாடல்கள் பெரிதும் பழைய புறப்பொருள் மரபினைச் சார்ந்தே அமைகின்றன. பாடல்களின் வெளிப்பாட்டுப் பாங்கு முத்தொள்ளாயிரத்திற்கே உரிய தனிச்சிறப்போடு வெளிப்படுகின்றது. திணை, துறை முதலான பகுப்புகளின்றி உரிப்பொருளையே முதன்மைப்படுத்தித் திருவள்ளுவர் அகப்பாடல்களை அமைத்த நெறி போன்று முத்தொள்ளாயிர ஆசிரியர் திணை, துறைப் பகுப்புகளின்றி உரிப்பொருளையே முதன்மைப்படுத்திப் புறப்பாடல்களை அமைத்துக் காட்டுகின்றார். இப்புதிய மரபு முத்தொள்ளாயிரப் புறப்பாடல்களுக்குப் புதிய பரிமாணத்தைத் தருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்கள்: &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது கிடைத்துள்ள 130 முத்தொள்ளாயிரப் பாடல்களில் 85 பாடல்கள் கைக்கிளைப் பொருண்மையில் அமைந்துள்ளன. இக் கைக்கிளைப் பாடல்கள் புறத்திணையில் இடம்பெறும் பெண்பாற் கைக்கிளைப் பாடல்களாகும்.  ‘அங்கதப் பாட்டவற் றளவோ டொக்கும்’ என்ற தொல்காப்பியச் செய்யுளியல் 159 ஆம் நூற்பாவிற்கான உரையில் பேராசிரியர், ‘கைக்கிளைச் செய்யுள் முத்தொள்ளாயிரத்துட் போலப் பலவாயினும்’ என்று உரை எழுதியுள்ளமையை நோக்க இரண்டு உண்மைகள் புலனாகின்றன. அவை, கிடைக்காமல் போன முழு முத்தொள்ளாயிர நூலிலும் கைக்கிளைப் பாடல்கள் மிகுதி என்பதும் இவ்வகைப் பாடல்களைக் கைக்கிளை எனப்பாகுபாடு செய்வதே மரபு என்பதுமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;காமப் பகுதி கடவுளும் வரையார்&lt;br /&gt;ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்    (தொல். புறத். 28)&lt;br /&gt;&lt;br /&gt;என்ற தொல்காப்பியப் புறத்திணையியல் பாடாண் திணை கூறும் கைக்களைப் பொருண்மை உடையது. இந்நூற்பா உரையில் நச்சினார்க்கினியர், “இக்காமப் பகுதி எழுதிணைக்குரிய காமமும், ‘காமஞ் சாலா இளமையோள் வயின்’ காமமுமன்றி இது வேறொரு காமமென்று கொள்க” என்கிறார். இவ்வுரையின் வழிப் பாடாண் திணைக் கைக்கிளை என்பது அகம் எழுதிணையின் முதலில் இடம்பெறும் கைக்கிளையோ, கைக்கிளைக் குறிப்போ அன்று என்பதும் இது வேறு ஒரு கைக்கிளை, அதாவது புறப்பொருள் கைக்கிளை என்பதும் பெறப்படும். எனவே, பெண்களின் காமப்பகுதியைக் கூறும் முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்கள் புறப்பொருள் பெண்பாற் கைக்கிளைப் பாடல்களே என்பது பெறப்படும். நூற்பாவில் இடம்பெறும் ‘ஏனோர் பாங்கினும்’ என்பதற்கு விளக்கமளிக்கும் நச்சினார்க்கினியர், “கிளவித் தலைவனல்லாத பாட்டுடைத் தலைவனைக் கிளவித் தலைவனாகக் கூறுவனவும் கொள்க” என்பார். முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்களில் சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்கள் பாட்டுடைத் தலைவர்களாக மட்டுமன்றிக் கிளவித் தலைவர்களாவும் வந்துள்ளமையைக் காணமுடியும். &lt;br /&gt;&lt;br /&gt;உலா போந்த மூவேந்தர்களைக் கண்டு, பருவப் பெண்கள் காமுற்றதாகப் புனையப்பட்டுள்ள முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்கள் இடைக்காலத்தில் எழுந்த பல அகப்பொருள் சிற்றிலக்கியங்களுக்கு வித்தாக அமைந்தமை இப்பாடல்களின் தனிச் சிறப்பாகும். பக்தி இலக்கியங்கள் புனைந்து காட்டும் நாயக நாயகி பாவத்திலமைந்த கைக்கிளைப் பாடல்களுக்கும் முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்களும் உள்ள தொடர்பு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. முத்தொள்ளாயிரத்தின் காலத்தைச் சரியாக வரையறுத்தால் மட்டுமே இக் கைக்கிளை மரபைப் பக்தி இலக்கியங்களிடமிருந்து முத்தொள்ளாயிரம் பெற்றதா? அல்லது முத்தொள்ளாயிர இலக்கியத்திலிருந்து பக்தி இலக்கியங்கள் பெற்றனவா? என்பதை உறுதிப்படுத்த முடியும். எப்படியாயினும் இரண்டிலும் செயல்படும் அகப்பொருள் படைப்பாக்க உத்தி என்பது ஒன்றே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முடிப்பாக: &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியச் சுவை மிகுந்த முத்தொள்ளாயிரப் பாடல்களின் நயத்தினை வியத்தலும், பண்பாட்டுச் செய்திகளைத் திரட்டலும், அணிநலன்களின் அழகை வெளிப்படுத்தலும் எனப் பல நிலைகளில் முத்தொள்ளாயிரப் பாடல் குறித்த திறனாய்வுகள் விரிக்கின் பெருகும் சிறப்புடையன. மாறாக, இக்கட்டுரை முத்தொள்ளாயிரம் குறித்த சில விளக்கங்களை முன்னோர் கருத்துக்களை ஒட்டியும் உறழ்ந்தும் முன்வைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. அவை வருமாறு,&lt;br /&gt;&lt;br /&gt;1. முத்தொள்ளாயிரம் எண் செய்யுள் என்று பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது&lt;br /&gt;2. தொள்ளாயிரம் என்ற எண்ணிக்கையால் பெயர் பெற்ற இலக்கிய வகைகளில் முத்தொள்ளாயிரமும் ஒன்று.&lt;br /&gt;3. இந்நூல் விருந்து என்ற வனப்பு வகையால் பாடப்பட்டது.&lt;br /&gt;4. முத்தொள்ளாயிரத்தின் பாடல் எண்ணிக்கை 2,700 அன்று.&lt;br /&gt;5. முத்தொள்ளாயிரம் என்பது மூன்று வகையினதாகிய தொள்ளாயிரம் எனப் பொருள்படும்.&lt;br /&gt;6. முத்தொள்ளாயிரம் வையாபுரிப்பிள்ளை அவர்கள் கருத்தின்படி கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாடப்பட்டிருக்கலாம்.&lt;br /&gt;7. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் நக்கீரதேவ நாயனாராக இருக்கலாம் என்ற சேதுரகுநாதன் அவர்களின் கருத்து ஆய்விற்குரியது.&lt;br /&gt;8. தமிழ் வேந்தர்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கத்தோடும் தமிழின எழுச்சியின் அடையாளமாகவும் முத்தொள்ளாயிரம் பாடப்பட்டிருக்க வேண்டும்.&lt;br /&gt;9. முத்தொள்ளாயிர ஆசிரியர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்.&lt;br /&gt;10. பழந்தமிழ் மரபினை ஒட்டி அகம், புறம் என்ற பாடுபொருளைக் கொண்டுள்ளது இந்நூல்.&lt;br /&gt;11. முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்கள் தொல்காப்பியப் பாடாண் திணை கூறும் பெண்பாற் கைக்கிளை மரபினைச் சார்ந்தது.&lt;br /&gt;12. பக்தி இலக்கிய நாயக நாயகி பாவத்திலமைந்த கைக்கிளைப் பாடல்களும்  முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்களும் ஒன்றோடொன்று தொடர்புடையன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-1057309413002572624?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/1057309413002572624/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2010/11/2.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/1057309413002572624'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/1057309413002572624'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2010/11/2.html' title='முத்தொள்ளாயிரம் -சில குறிப்புகள் -(பகுதி-2)'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-7823949824036773434</id><published>2010-07-31T10:10:00.005+05:30</published><updated>2010-08-02T07:31:59.607+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதுச்சேரி வரலாறு'/><title type='text'>போதிகாவா? பொதுகாவா? எது பழைய புதுச்சேரி?</title><content type='html'>&lt;strong&gt;போதிகாவா? பொதுகாவா? எது பழைய புதுச்சேரி?&lt;br /&gt;புதுச்சேரியில் பௌத்தம் பகுதி-7&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்&lt;br /&gt;பட்ட மேற்படிப்பு மையம்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொதுகா: &lt;/strong&gt;&lt;br /&gt;கி.பி. முதலாம் இரண்டாம் நூற்றாண்டுகளில் சிறப்புற்று விளங்கிய கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்களாக &lt;strong&gt;காமரா, பொதுகே, சோபத்மா &lt;/strong&gt;ஆகிய மூன்று துறைமுகங்களைக் குறிப்பிடுவர் பெரிபுளுசு, தாலமி என்ற அயல்நாட்டுப் பயண நூலாசிரியர்கள். இவற்றுள் காமரா காவிரிப்பூம் பட்டினத்தையும், சோபத்மா மரக்காணத்தையும் பொதுகே புதுச்சேரியையும் குறிப்பிடுகின்றது என்பது ஆய்வாளர்களின் முடிபு. (சோ.முருகேசன், ழூவோ துய்ப்ரேய் நோக்கில் புதுச்சேரி, பக். 1-11)&lt;br /&gt;&lt;br /&gt;இக்கால அருக்கன்மேடுதான் பண்டைக்காலத்தில் பொதுகே என்னும் பெயரில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்னும் உண்மையை இப்பகுதியில் அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொண்ட &lt;strong&gt;மார்டடிமர் வீலர், கசால், விமலா பெக்லி, பீட்டர் பிரான்சிஸ் &lt;/strong&gt;ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். (சு.தில்லைவனம், புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும், ப.15) &lt;br /&gt;&lt;br /&gt;அருக்கன்மேடுதான் பெரிபுளுஸ், தாலமி குறிப்பிடும் பொதுகா என்பது உறுதியாகியுள்ள நிலையில் பொதுகா என்ற சொல் குறிப்பிடும் துறைமுகப் பெயர் எது? என்பது ஆய்வுக் குரியதாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; ஏனெனில் அயல்நாட்டுப் பயணியர் நம் தமிழகத்தின் எந்த ஊர்ப்பெயரையும் சரியான உச்சரிப்போடு குறிப்பிடுவதில்லை. அவர்கள் தொண்டியைத் திண்டிஸ் என்றும் கொற்கையைக் கொல்சாய் என்றும் காவிரிப் பூம்பட்டினத்தைக் காமரா என்றும் மரக்காணத்தைச் சோபட்மா என்றும் குறிப்பிட்டுள்ளனர். புதுச்சேரி வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் புதுச்சேரி என்ற பெயர்தான் பொதுகே –பொதுகா என்று பெரிபுளுஸ், தாலமி போன்றவர்களால் குறிப்பிடப்பட்டது என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புதுச்சேரி – போதுச்சேரி – போது – பொதுக்கே &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Puducherri – Poducheri – Podu - Poduke&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று விளக்குகிறார் சோ. முருகேசன். (ழூவோ துய்ப்ரேய் நோக்கில் புதுச்சேரி, ப. 9)&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு வழக்கிலுள்ள புதுச்சேரி என்ற பெயரைத்தான் பெரிபுளுஸ், தாலமி போன்றோர் பொதுகா எனக் குறிப்பிட்டார்கள் என்பது பொருத்தமில்லை. ஏனெனில் 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் புதிதாக மக்கள் வாழத் தொடங்கிய இன்றைய புதுச்சேரி நகரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள்தாம் புதுச்சேரி என்ற பெயரால் அழைக்கப்பட்டது. கி.பி. முதல், இரண்டாம் நூற்றாண்டுகளில் அருக்கன்மேட்டுத் துறைமுகப் பகுதியை இப்பெயரால் குறிப்பிட்டிருக்க வாய்ப்பேயில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஐராவதம் மகாதேவன் &lt;/strong&gt;பொதிகை என்ற சொல்லோடு தொடர்புடையது பொதுகே என்கிறார். பொதிகை மலை, அகத்தியர் முதலான தொன்மச் செய்திகளோடு தொடர்புபடுத்தி முற்காலத்தில் இப்பகுதியில் அகத்தியர் வந்து தங்கியிருக்கலாம் என்றும் அதன்பொருட்டு இவ்வூர் பொதிகை என வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிடும் செய்திகள் வெறும் யூகங்களேயன்றி உண்மையில்லை. ஏனெனில், புதுச்சேரி ஊரின் மேற்குப்பகுதி நிலப்பரப்பு சற்று உயர்ந்து செம்மண் மேடாக உள்ளதேயன்றி மலைகளோ குன்றுகளோ இப்பகுதியில் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;முனைவர் சு. தில்லைவனம்,&lt;/strong&gt; பொதுக்கம் என்ற பெயரின் திரிபு வடிவமே பொதுகே என்கிறார். அதற்கு அவர் காட்டும் சான்று, &lt;strong&gt;“புள்ளிக் கள்வன் புனல்சேர் பொதுக்கம்” &lt;/strong&gt;என்ற கலித்தொகை (பா.88. அடி.10) பாடலடியாகும்.  பொதுக்கம் என்பது நெய்தல் நிலத்தைச் சார்ந்த கடற்கரைப் பகுதி என்று அவர் விளக்கமளிக்கிறார். (சு.தில்லைவனம், புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும், ப.19) அவர் மேற்கோள் காட்டும் பாடல் ஒரு மருதக்கலி பாடலாகும். அப்பாடலில் இடம்பெறும் சொல் பொதுக்கம் அன்று, ஒதுக்கம் என்பதாகும். ஒதுக்கம் என்பதற்கு நடை என்பது பொருள். நண்டின் நடை மணலில் ஏற்படுத்திய கீறலைப் பற்றியது அப்பாடல் குறிப்பிடும் செய்தி. எனவே பொதுக்கம் என்று கலித்தொகை குறிப்பிடும் சொல்லே பொதுகா என்பதன் மூலவடிவம் என்று தில்லைவனம் குறிப்பிடும் விளக்கம் பொருந்துமாறில்லை.&lt;br /&gt;&lt;br /&gt; பொதிகை, பொதுக்கம் என்ற இரண்டு விளக்கங்களும் பொருந்தாத நிலையில் பொதுகா, பொதுகே என்ற சொல்லால் குறிப்பிடப்படும் அருக்கன்மேட்டுத் துறைமுகப் பகுதியின் பழையபெயர் குறித்த ஆய்வு தேவைப்படுகின்றது.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;போதிகா – பொதுகா – பொதுகே &lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அருக்கன்மேடு, காக்கையன் தோப்பு என்றழைக்கப்படும் சாக்கையன் தோப்பு, மேல் சாத்தமங்கலம் முதலான ஒத்த வரலாற்றுச் சிறப்புடைய ஊர்கள் அனைத்திலும் பௌத்த மதமே செல்வாக்கு பெற்ற மதமாயிருந்தமையும், பௌத்த வழிபாடே பெருவழக்காய் இருந்தமையும் முன்னர் மெய்ப்பிக்கப்பட்ட காரணத்தால் பொதுகா என்ற துறைமுகப் பெயரும் பௌத்த அடையாளங்களோடு கூடிய ஊர்ப்பெயராய் இருந்திருக்க வாய்ப்புகள் அதிகமுண்டு. அந்த வகையில் பொதுகா என்ற சொல்லோடு ஒலி ஒப்புமையுடைய &lt;strong&gt;போதிகா (போதி+கா)&lt;/strong&gt; என்பதே அருக்கன்மேடு துறைமுகத்தின் பழைய பெயராயிருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;பௌத்தர்கள் தங்கள் பெயருடனோ அல்லது தங்கள் வழிபாட்டுத் தலங்களின் பெயர்களுடனோ போதி என்ற சொல்லை இணைத்துப் பெயரிடுவது மரபு. சான்று: இளம் போதியார், வச்சிர போதி, போதி மங்கலம். பௌத்தரை போதியார் என்று தேவாரம் குறிப்பிடுவதும் ஒப்பு நோக்கத்தக்கது.&lt;br /&gt; &lt;br /&gt; போதி +கா, பண்டைக்காலத்தில் பூந்தோட்டங்களுக்கு இடையில்தான் புத்தக் கோயில்களை அமைப்பது வழக்கம். கா என்பது தோட்டம், சேர நாட்டில் இன்றும் சாத்தன் காவு என்ற பெயர் வழங்குகிறது. புத்த வழிபாடாகிய சாத்தன் வழிபாடு இன்று சாஸ்தா வழிபாடாக மாறியுள்ளமையை நினைவுகூர்தல் வேண்டும். போதி+கா, புத்தன் வழிபாடுள்ள தோட்டம் என்ற பொருளில் போதிகா என்று வழங்கப்பட்ட பெயரே பெரிபுளுஸ், தாலமி போன்றவர்களால் பொதுகா –பொதுகே  என்று வழங்கப்பட்டிருக்க வேண்டும். E. H. Warmington வார்மிங்டன் போதிகாவை போதுஸ் என்று குறிப்பிடுவதனையும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம். (சு.தில்லைவனம், புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும், ப. 15)&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;strong&gt;போதிகா – போதுகா – பொதுகா – பொதுகே &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அருக்கன்மேடு, சாக்கையன் தோப்பு முதலான பௌத்தச் சிற்றூர்களை ஒட்டி அமைந்திருந்த மிகப்பெரிய துறைமுகப் பட்டினமே போதிகா என்பதாகும். தாலமி இவ்வூரைப் பொதுகா எம்போரியம் என்று குறிப்பிட்டுள்ளார். எம்போரியம் என்பதற்கு வணிகத்தலம் என்பது பொருள். தாலமி குறிப்பிட்டுள்ளது போல் போதிகா ஒரு மிகச்சிறந்த வணிகத்தலமாகத் திகழ்ந்திருந்தமை புதைபொருள் சான்றுகளால் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;strong&gt;முடிப்பாக: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அரிக்க மேடு அன்று அது அருக்கன் மேடு.&lt;br /&gt;&lt;br /&gt;அருக்கன் மேட்டின் விருமன் கோயிலில் உள்ள சிலை புத்தர் சிலையே.&lt;br /&gt;&lt;br /&gt;காக்காயன் தோப்பு முந்தைய சாக்கையன் தோப்பே.&lt;br /&gt;&lt;br /&gt;மேல்சாத்தமங்கலம் அகழ்வாய்வும் அருக்கன் மேட்டின் பௌத்தத் தொடர்பை உறுதி செய்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அருக்கன்மேட்டுப் பானை ஓட்டு பிராமி எழுத்து வடிவங்கள் பௌத்தர்களால் நடைமுறைப் படுத்தப்பட்டனவே.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுகா புதுச்சேரியைக் குறிப்பிடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுகாவின் பழைய சரியான பெயர் போதிகா என்பதே.&lt;/strong&gt;  &lt;br /&gt;   &lt;br /&gt;&lt;strong&gt;துணை நின்ற நூல்கள்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;strong&gt;அ. இராமசாமி &lt;/strong&gt; - &lt;br /&gt;    புதுச்சேரி வரலாறு,&lt;br /&gt;    பூங்குன்றம் பதிப்பகம்,&lt;br /&gt;    மதுரை-9&lt;br /&gt;    1992&lt;br /&gt;2. &lt;strong&gt;கல்லாடன்  &lt;/strong&gt; - &lt;br /&gt;புதுச்சேரி மரபும் மாண்பும்,&lt;br /&gt;    புதுச்சேரி வரலாற்றுச் சங்கம்,&lt;br /&gt;    புதுச்சேரி-1,&lt;br /&gt;    2002&lt;br /&gt;&lt;br /&gt;3. &lt;strong&gt;சு. தில்லைவனம் -&lt;/strong&gt;  &lt;br /&gt;புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும்,&lt;br /&gt;    சிவசக்தி பதிப்பகம்,&lt;br /&gt;    புதுச்சேரி-8,&lt;br /&gt;    2007&lt;br /&gt;4. &lt;strong&gt;சோ. முருகேசன் -&lt;/strong&gt;  &lt;br /&gt;கசாலின் பார்வையில் அரிக்கமேடு,&lt;br /&gt;    அம்மா முத்து பதிப்பகம்,&lt;br /&gt;    புதுச்சேரி -11&lt;br /&gt;    1997&lt;br /&gt;5. &lt;strong&gt;சோ. முருகேசன் - &lt;/strong&gt; &lt;br /&gt;ழுவொ துய்ப்ரேய் நோக்கில் புதுச்சேரி&lt;br /&gt;    அம்மா முத்து பதிப்பகம்,&lt;br /&gt;    புதுச்சேரி -11&lt;br /&gt;    2000&lt;br /&gt;6. &lt;strong&gt;சீனி. வேங்கடசாமி -&lt;/strong&gt; &lt;br /&gt;பௌத்தமும் தமிழும்,&lt;br /&gt;    பாவை பப்ளிகேஷன்ஸ்,&lt;br /&gt;    சேன்னை-14&lt;br /&gt;                                2007&lt;br /&gt;7. &lt;strong&gt;ந. வேங்கடேசன் -&lt;/strong&gt;  &lt;br /&gt;வரலாற்றில் அரிக்கமேடு,&lt;br /&gt;    திருமுடிப் பதிப்பகம்,&lt;br /&gt;    வில்லியனூர், (புதுச்சேரி)&lt;br /&gt;    1990&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-7823949824036773434?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/7823949824036773434/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2010/07/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/7823949824036773434'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/7823949824036773434'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2010/07/blog-post.html' title='போதிகாவா? பொதுகாவா? எது பழைய புதுச்சேரி?'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-6764089563707884179</id><published>2010-07-13T07:25:00.004+05:30</published><updated>2010-08-02T07:28:25.673+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதுச்சேரி வரலாறு'/><title type='text'>அருக்கன்மேட்டு பிராமி எழுத்துக்கள் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி -6</title><content type='html'>&lt;strong&gt;அருக்கன்மேட்டு பிராமி எழுத்துக்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்&lt;br /&gt;பட்ட மேற்படிப்பு மையம்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அருக்கன்மேட்டு பிராமி எழுத்துக்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_vmRKnj-PgVg/TDvIgZVWbpI/AAAAAAAAAK8/irnXGB7owPI/s1600/clip_image002.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 225px;" src="http://1.bp.blogspot.com/_vmRKnj-PgVg/TDvIgZVWbpI/AAAAAAAAAK8/irnXGB7owPI/s320/clip_image002.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5493204629390257810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அருக்கன்மேட்டில் கிடைத்த புதைபொருட் சின்னங்களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. பழந்தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளே. அருக்கன்மேட்டுப் பானை ஓடுகளில் சில பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. &lt;br /&gt;‘யாடு வளபூதியின் பானை’ என்ற பிராமி எழுத்துக்கள் இடப்பட்ட பானைஓடு ஒன்று அருக்கன்மேட்டில் கிடைத்துள்ளது. (அ. இராமசாமி, புதுச்சேரி வரலாறு, ப. 19) &lt;br /&gt;&lt;br /&gt;இப் பானைகளில் காணப்படும் எழுத்துக்கள் கி.மு. 2 முதல் கி.பி. 2 வரையிலான தமிழகப் பாறைக் கல்வெட்டுக்களில் காணப்படும் பிராமி எழுத்துக்களே. &lt;br /&gt;&lt;br /&gt;பிராமி எழுத்துக்களைக் கண்டுபிடித்தவர் பகவான் புத்தர் என்ற நம்பிக்கையுண்டு. மாமன்னர் அசோகர் தொடங்கி பௌத்தர்களே இந்தியா முழுவதிலும் பிராமி எழுத்தைப் பரவலாக உபயோகத்திற்குக் கொண்டுவந்தார்கள் என்பதில் ஐயமில்லை. அருக்கன்மேட்டுப் பானை ஓடுகளில் பிராமி எழுத்துக்களின் உபயோகம் பௌத்தர்களாலேயே நடைமுறைப் படுத்தப்பட்டது என்று கருதவும் வாய்ப்புள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-6764089563707884179?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/6764089563707884179/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2010/07/6.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/6764089563707884179'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/6764089563707884179'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2010/07/6.html' title='அருக்கன்மேட்டு பிராமி எழுத்துக்கள் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி -6'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_vmRKnj-PgVg/TDvIgZVWbpI/AAAAAAAAAK8/irnXGB7owPI/s72-c/clip_image002.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-4912236712451840075</id><published>2010-07-13T07:19:00.003+05:30</published><updated>2010-07-13T08:13:32.420+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதுச்சேரி வரலாறு'/><title type='text'>பௌத்தம் அழிக்கப்பட்டது -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி -5</title><content type='html'>&lt;strong&gt;பௌத்தம் அழிக்கப்பட்டது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்&lt;br /&gt;பட்ட மேற்படிப்பு மையம்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பௌத்தம் அழிக்கப்பட்டது:&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;புதுச்சேரியில் பௌத்தமதம் பெருவழக்காயிருந்த வரலாற்றுச் செய்தியை உறுதிப்படுத்தும் வகையிலும் பிற்காலத்தில் பௌத்த விகாரைகளும் பௌத்தமும் பௌத்தமத அடையாளங்களும் மத வன்முறைகளால் திட்டமிட்டுத் தாக்கி அழிக்கப்பட்டன என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் சில சான்றுகள் புதுவைப் பகுதிகளில் கிடைத்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அருக்கன்மேட்டு புத்தர் சிலையை ஒத்த, மேலும் இரண்டு புத்தர் சிலைகள் புதுவையில் கிடைத்துள்ளன. ஓன்று, புதுவை அரசின் பழைய பொதுப்பணித்துறை அலுவலகத்திலும் மற்றொன்று கருவடிக்குப்பம் பகுதியிலும் கண்டெடுக்கப்பட்டன. இரண்டு சிலைகளுமே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடைத்துள்ள கழுத்து வரையிலான கருங்கல் சிலைகளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அருக்கன்மேட்டுப் புத்தர் சிலை குறித்து P.Z. பட்டாபிராமன் தந்துள்ள வருணனைகளை முற்றிலும் ஒத்ததாக இச்சிலைகள் உள்ளன. சிலையின் இடுப்பில் ஒரு வேட்டியும் மார்பில் மடித்துப் போடப்பட்டுள்ள துண்டும் காணப்படுகின்றன. பத்மாசன முறையில் அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ள இச்சிலைகளில் பகவான் புத்தர் இரண்டு கைகளும் கோர்த்து தியான முத்திரை நிலையில் அமர்ந்துள்ளார்.&lt;br /&gt; &lt;br /&gt;இந்த இரண்டு தலையில்லாத புத்தர் சிலைகள் மட்டுமல்லாமல் கிருமாம்பாக்கத்தில் ஒரு புத்தர் சிலையின் தலைப்பகுதி மட்டும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உடைத்துத் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடைக்கும் இப்புத்தர் தலைச்சிற்பம் 40 செ.மீ. உயரமுள்ளது. தலையின் அளவை நோக்க இச்சிலை முழுவடிவத்தில் சுமார் 120 செ.மீ அளவில் அருக்கன்மேட்டு புத்தர் சிலையை ஒத்த உயரம் உடையதாய் இருந்திருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது. கிருமாம்பாக்கத்தில் கிடைத்த இப்புத்தர் தலைச் சிற்பம் முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாயிருக்கலாம் என்பார் கே. இராஜாராம் தம் புதுவையில் அருங் காட்சியகங்கள் என்ற கட்டுரையில். (புதுச்சேரி மரபும் மாண்பும், ப. 223) &lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் புத்தர் சிலையின் துண்டிக்கப்பட்ட உடல் மற்றும் தலைப்பகுதிகள் புதுவைப் பகுதிகளில் கிடைப்பதிலிருந்து பௌத்த மதமும் மத அடையாளங்களும் பிற்காலத்தில் திட்டமிட்டு சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டமை உறுதியாகின்றது.&lt;br /&gt; &lt;br /&gt;மேலே குறிப்பிட்டுள்ள இம்மூன்று புத்தர்சிலையின் பகுதிகளும் தற்போது புதுச்சேரி அரசின் அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருப்பதோடு பார்வைக்கும் வைக்கப்பட்டுள்ளன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-4912236712451840075?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/4912236712451840075/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2010/07/5.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/4912236712451840075'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/4912236712451840075'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2010/07/5.html' title='பௌத்தம் அழிக்கப்பட்டது -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி -5'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-1996991611772234846</id><published>2010-07-13T07:09:00.005+05:30</published><updated>2010-08-02T07:27:17.417+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதுச்சேரி வரலாறு'/><title type='text'>சாக்கையன் தோப்பும் சாத்தமங்கலமும் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி-4</title><content type='html'>&lt;strong&gt;சாக்கையன் தோப்பும் சாத்தமங்கலமும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்&lt;br /&gt;பட்ட மேற்படிப்பு மையம்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அருக்கன் மேடும் சாக்கையன் தோப்பும்:&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அரிக்கன்மேடு என்ற பெயரால் வழங்கப்படும் புதையுண்ட நகரம் அருக்கன் மேடே என்பதும் அங்குள்ள பழைய சிலை புத்தர் சிலையே என்பதனையும் உறுதிப்படுத்தும் மற்றுமொரு அகச்சான்று அருக்கன்மேட்டின் ஒட்டிய பகுதியாகிய காக்காயன் தோப்பு என்ற ஊர்ப்பெயராகும்.&lt;br /&gt;&lt;br /&gt;காக்காயன் தோப்பு என்ற பெயரால் அறியப்படும் அவ்வூர் முற்காலத்தில் சாக்கையன் தோப்பு என்று வழங்கப் பட்டிருக்கலாம். &lt;strong&gt;சாக்கியன் - சாக்கையன் &lt;/strong&gt;வழிபாடு நிகழ்த்தப்பட்ட தோப்பு சாக்கையன் தோப்பு. சாக்கியன் என்பது புத்தரைக் குறிக்கும் பெயராகும். செஞ்சியாற்றின் கிழக்கு மற்றும் தெற்குக் கரைகளில் அருக்கன்மேடு அமைந்திருப்பதும் அருக்கன்மேட்டை ஒட்டிய தென்பகுதி நிலப்பரப்பாகச் சாக்கையன் தோப்பு அமைந்திருப்பதும் புத்தர் வழிபாடு இப்பகுதிகளில் பெருவழக்காய் இருந்திருக்கக் கூடும் என்பதனை உறுதி செய்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அருக்கன் மேடும் மேல் சாத்தமங்கலமும்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய புதுச்சேரிக்கு மேற்கே 12 கி.மீ. தொலைவில் வில்லியனூருக்கு அருகே வில்லியனூர் ஏம்பலம் சாலையில் உள்ள ஊர் மேல்சாத்தமங்கலம். &lt;strong&gt;சாத்தன் என்ற சொல்லும் மங்கலம் என்ற சொல்லும் புத்த மதத்தின் அடையாளங்களைக் &lt;/strong&gt;கொண்டிருக்கும் சொற்களாகும். சாத்தமங்கலம் என்ற பெயரே அவ்வூர் ஒரு பௌத்த ஊர் என்பதனை வெளிப்படுத்தும். &lt;br /&gt;&lt;br /&gt;மேல் சாத்தமங்கலத்தில் இந்தியத் தொல்பொருள் துறையின் தென்பகுதிப் பொறுப்பாளர்கள் 26-2-83 முதல் 6-3-83 முடிய அகழ்வாய்வு மேற்கொண்டார்கள். அவ்வகழ்வாய்வில் சாத்தமங்கலத்தின் தொன்மை குறித்த அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவ்வகழ்வில் உடனிருந்து பணியாற்றிய வில்லியனூர் வேங்கடேசன் தரும் செய்திகள் மிகவும் இன்றியமையாதன.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;em&gt;“இரண்டு மீட்டர் சதுரத்தில் இரண்டரை மீட்டர் ஆழத்தில் சோதனைக்குழி தோண்டப்பட்டது. அதில் பல அரிய செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. கிடைத்த பொருள்கள்: கருப்பு சிவப்புப் பானை ஓடுகள், வண்ணம் தீட்டப்பெற்ற ஓடுகள், ரௌலட்டட் என்றழைக்கும் ரோமாபுரியில் செய்த மட்பாண்ட ஓடுகள், ஆம்போரா என்றழைக்கப்பெறும் மது ஜாடிகளின் துண்டுகள், ஜாடியின் மூடிக் குமிழ்கள், வழவழப்பான ஓட்டுத் துண்டுகள், மெகலித்திக் காலக் கட்டத்தைச் சேர்ந்த ஓடுகள்” (வரலாற்றில் அரிக்கமேடு, ப. 147)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேல் சாத்தமங்கலத்தில் கிடைத்த அத்துணைப் பொருள்களும் நமக்கு அருக்கன் மேட்டில் கிடைத்த புதைபொருட்களையே ஒத்திருக்கின்றன. அருக்கன் மேட்டின் காலத்தை ஒத்த கி.பி. முதலிரு நூற்றாண்டுகளின் நாகரீகச் சின்னங்களே சாத்தமங்கலப் புதைபொருட்கள் என்பது தெளிவு. அருக்கன்மேட்டு நாகரிகமே சாத்தமங்கலம் வரை பரவியிருந்தமை தொல்லியல் ஆய்வுகளால் உறுதிப் படுத்தப்பட்ட நிலையில் அருக்கன்மேடு தொடங்கிச் சாத்தமங்கலம் வரை பௌத்த மதமே பெருவழக்கு பெற்றிருந்தது என்று துணிய இடமுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-1996991611772234846?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/1996991611772234846/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2010/07/4.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/1996991611772234846'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/1996991611772234846'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2010/07/4.html' title='சாக்கையன் தோப்பும் சாத்தமங்கலமும் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி-4'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-9199581571606976761</id><published>2010-07-05T07:51:00.008+05:30</published><updated>2010-08-02T07:25:47.514+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதுச்சேரி வரலாறு'/><title type='text'>அருக்கன்மேடு – அரிக்கமேடானது -புதுச்சேரியில் பௌத்தம் -பகுதி 3</title><content type='html'>&lt;strong&gt;அருக்கன்மேடு – அரிக்கமேடானது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்&lt;br /&gt;பட்ட மேற்படிப்பு மையம்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அருக்கன்மேடு – அரிக்கமேடானது:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரிக்கமேடு பெயராய்விற்கும் சமயப் பின்னணி குறித்த ஆய்வுகளுக்கும் தக்க ஆதாரமாயிருக்கும் குறிப்பிட்ட அப்புத்தர் சிலை குறித்த ஆய்வு முதலில் முக்கியத்துவம் பெறுகின்றது. புதுச்சேரி வரலாற்றாய்வாளர்  &lt;strong&gt;P.Z. பட்டாபிராமன் &lt;/strong&gt;1956 மே மாதம் வெளியான &lt;strong&gt;‘லெ த்ரே துய்னியம்’ le trait-d’union &lt;/strong&gt;என்ற மாத இதழில் எழுதியுள்ள கட்டுரை இச்சிலை புத்தர் சிலையே என்பதனையும் இம்மேடு அரிக்கன்மேடே என்பதனையும் உறுதிசெய்கின்றது.&lt;br /&gt; &lt;br /&gt;கசாலின் பார்வையில் அரிக்கமேடு என்னும் நூலில் டாக்டர் சோ.முருகேசன் அவர்கள் மேற்கோள் காட்டும் பகுதி பின்வருமாறு,&lt;br /&gt; &lt;br /&gt;“அரியாங்குப்பத்திலிருந்து வீராம்பட்டினம் செல்லும் வழியில் காக்காயன் தோப்பு என்ற குக்கிராமம் உள்ளது. அதற்கு வடக்கே அரிக்கன்மேடு என்ற ஒரு பெருமணல்மேடு அரியாங்குப்பம் ஆற்றிற்குக் கீழ்க்கரையில் கம்பீரமாக உயர்ந்து காட்சியளிக்கிறது. &lt;br /&gt;அம்மணல்மேட்டில் ஒரு பழங்கால புத்தர் சிலை உள்ளது. இம்மேட்டிற்கு ‘அரிக்கன்மேடு’ என்று பெயர் வரக்காரணம் என்ன என்று யோசிக்கும் போது &lt;strong&gt;புத்தருக்கு ‘அருக்கன்’ &lt;/strong&gt;என்ற ஒரு பெயருமுண்டு (சூடாமணி நிகண்டு) என்பது நமது நினைவுக்கு வருகிறது. &lt;br /&gt;ஆகவேதான் இம்மேடு அருக்கன்மேடு என்று அழைக்கப்பட்டு, பின்னர் அரிக்கமேடு என மருவியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கருங்கல் சிற்பமாகிய அப்புத்தர் சிலையின் உயரம் 118 செ.மீ ஆகும். தலைமுடி சுருட்டையாகவும் தலைஉச்சியில் கொண்டையும், காதுகளின் கீழ்ப்பாகம் தொங்கிக்கொண்டும் காணப்படுகின்றன. &lt;strong&gt;சிலையின் இடையில் ஒரு வேட்டியும் மார்பில் ஒரு துண்டும் (போர்த்திய நிலையில்) அலங்கரிக்கின்றன.&lt;/strong&gt; பத்மாசன முறையில் சிலை ஒரு பத்ம பீடத்தில் உட்கார்ந்துள்ளது. இரண்டு கைகளும் கோர்த்து தியான முத்திரை நிலையில் உள்ளன. இது 10ஆம் நூற்றாண்டு இறுதி அல்லது 11ஆம் நூற்றாண்டில் அமைந்ததாக இருத்தல் வேண்டும்.” &lt;br /&gt;&lt;br /&gt;P.Z. பட்டாபிராமன் சிலை குறித்துத் துல்லியமாகத் தரும் தகவல்கள், அதாவது இடையில் ஒரு வேட்டியும் மார்பில் ஒரு துண்டும் என்று ஆடை குறித்துக் குறிப்பிடும் செய்திகள் அச்சிலை புத்தர் சிலையே என்பதனை உறுதிப் படுத்துகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;அருகன் சிலை, புத்தர் சிலை இரண்டும் சற்றேறக்குறைய ஒரே வடிவில் செதுக்கப்பட்டாலும் இரண்டு சிலைகளுக்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு ஆடையே ஆகும். அருகன் சிலைகளில் ஆடை இருப்பதில்லை. புத்தர் சிலைகளில் மட்டுமே ஆடையிருப்பதாகச் செதுக்கப்படும். &lt;strong&gt;(சிலையின் ஆடை குறித்த தகவல்களைக் கட்டுரை ஆசிரியரும் நேரில் கண்டும் புகைப்படமெடுத்தும் உறுதி செய்துகொண்டார்)&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இச்சிலை குறித்த பழைய குறிப்பொன்று உண்டு. 1761 ஆம் ஆண்டில் வெளியான லெ ழாந்த்தீய் -le gentil என்ற வரலாற்று அறிஞரின் பயணநூலில் இச்சிலை குறித்த விபரங்களை அவர் பதிவு செய்துள்ளார், “அம்மணல் வெளியில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள இச்சிலையானது தாய்லாந்திலுள்ள புத்தர் சிலை போன்றே காணப்படுகிறது. தலையின் வடிவம், முகபாவம், கைகளை அமைத்திருக்கும் முறை, அதன் காதுகள் அனைத்தும் புத்தர் சிலையை ஒத்திருக்கின்றன. அங்கிருந்த மக்களிடம் நான் விசாரித்தபோது அவர்களும் இது பவுத்த சிலை &lt;strong&gt;(Baouth) &lt;/strong&gt; என்று கூறினர்” (கசாலின் பார்வையில் அரிக்கமேடு, ப.115)&lt;br /&gt; &lt;br /&gt;வரலாற்று அறிஞர் லெ ழாந்த்தீய் -le gentil அவர்களின் பயணக் காலத்தில் மக்களால் பவுத்த சிலை என்று அடையாளப் படுத்தப்பட்ட சிலை காலப்போக்கில் பல பெயர் மாற்றங்களையும் பண்பாட்டு மாற்றங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;லெ ழாந்த்தீய் -le gentil அவர்கள் கைவிடப்பட்ட நிலையில் அப்புத்தர் சிலை இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். ஆனால் அச்சிலை நிறுவப்பட்ட காலத்தில் வழிபாட்டுக்குரிய நிலையில் புத்த விகாரையில் வைத்து வழிபடப்பட்டிருக்க வேண்டும். பின்னர் அவ்விகாரை காணாமல் போனது வரலாற்றில் ஒரு வினாக்குறியே! புத்த விகாரையாக இருந்த காலத்தில் இக்கோயிலுக்கு பர்மா கோயில் என்ற பெயர் வழங்கப்பட்டமை பற்றிய குறிப்பொன்று உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_vmRKnj-PgVg/TDFDvaAVzMI/AAAAAAAAAK0/DUXNIZXST58/s1600/puttha.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 260px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_vmRKnj-PgVg/TDFDvaAVzMI/AAAAAAAAAK0/DUXNIZXST58/s320/puttha.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5490243902455008450" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அருக்கன்மேட்டு புத்தர் சிலை - இன்றைய தோற்றம்&lt;br /&gt;&lt;br /&gt;புகைப்படம்: கட்டுரை ஆசிரியர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“நாகப்பட்டினத்தில் சீனக் கோயில் இருந்தது போன்றே புதுச்சேரியிலும் அக்காலத்தில் பர்மா கோயில் இருந்துள்ளது. இதுவும் ஒரு புத்த கோவிலேயாகும். இங்கு புத்த கோவிலிருப்பதானது புதுச்சேரி துறைமுகத்தின் புகழை உயர்த்துவதுடன் இங்கு ஒரு புத்த சமூகமும், புத்தமத இயக்கமும் இருந்திருந்தன என்பதைக் காட்டுகிறது. அத்துடன் இந்தோ சீனாவிலிருந்து வந்த ஒரு புத்த சமுதாயமே இங்கு வாழ்ந்திருந்தது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.” என்று லெ ழாந்த்தீய் -le gentil அவர்களின் பயண நூலை மேற்கோள் காட்டி எழுதுகிறார் டாக்டர் சோ.முருகேசன் அவர்கள் (ழுவோ துய்ப்ரேய் நோக்கில் புதுச்சேரி, ப.53)&lt;br /&gt;&lt;br /&gt;அருக்கன் மேட்டின் பவுத்த கோயில், பர்மா கோயில் என்ற பெயரால் வழங்கப்பட்டது என்பதற்கு அடையாளமாக இருபதாம் நூற்றாண்டில் அச்சிலையை நிறுவி இந்து சமயக் கலப்புடன் வழிபாடு செய்துவரும் அப்பகுதி மக்கள் தொடக்கத்தில் அக்கோயிலை பிரமன் கோயில் என்றழைத்தனர்.&lt;strong&gt; பர்மா கோயில் என்பதுதான் பிரமன் கோயில் &lt;/strong&gt;என்று மாறியிருக்கலாம். அண்மைக் காலமாக அக்கோயில் &lt;strong&gt;விருமன் கோயில் &lt;/strong&gt;என்று வழங்கப்படுவது களஆய்வில் கண்டறியப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;em&gt;&lt;strong&gt;பர்மா கோயில் - பிரம்மன் கோயில் - விருமன் கோயில் &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விருமன் கோயிலில் புத்தர் ருத்ராட்சம் அணிந்து நெற்றியிலும் உடம்பிலும் நீறு பூசி புதிய அவதாரம் எடுத்திருப்பது போதாதென்று கோயிலின் கருவறையின் மேல் புதிதாக &lt;strong&gt;ஸ்ரீ பிரும்மரிஷி ஆலயம்&lt;/strong&gt; என்று பெயரிடப்பட்டிருப்பது கால மாற்றத்தின் விளைவு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-9199581571606976761?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/9199581571606976761/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2010/07/3.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/9199581571606976761'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/9199581571606976761'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2010/07/3.html' title='அருக்கன்மேடு – அரிக்கமேடானது -புதுச்சேரியில் பௌத்தம் -பகுதி 3'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_vmRKnj-PgVg/TDFDvaAVzMI/AAAAAAAAAK0/DUXNIZXST58/s72-c/puttha.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-7593736057779847430</id><published>2010-07-05T07:43:00.003+05:30</published><updated>2010-08-02T07:24:38.994+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதுச்சேரி வரலாறு'/><title type='text'>அரிக்கமேடு - பெயர்க் காரணம் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி 2</title><content type='html'>&lt;strong&gt;அரிக்கமேடு - பெயர்க் காரணம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்&lt;br /&gt;பட்ட மேற்படிப்பு மையம்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அரிக்க மேடு:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதுச்சேரியை அடுத்துள்ள அரிக்கமேடு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரமாகும் கி.பி.முதல் இரண்டாம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்று விளங்கிய இந்நகரம் இன்று மண்மேடாகக் காட்சியளிக்கிறது. இன்றைய புதுச்சேரிக்குத் தெற்கே வங்காள விரிகுடாவை ஒட்டி வராகநதி எனப்படும் செஞ்சியாற்றங் கரையில் அமைந்துள்ள மேட்டுப்பாங்கான பகுதியே அரிக்கமேடு. &lt;br /&gt;அரிக்கமேடு பெயர்க்காரணம் குறித்துப் பல்வேறு யூகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;கே.ஆர். சீனிவாசன் தம் வாழ்வியல் களஞ்சியக் கட்டுரையில் அரிக்கமேடு என்பது அருக்குமேடு (Mound of ruins)அல்லது அருகுமேடு (Mound on ariver bank)என்பதன் திரிபாகலாம் என்கிறார். (வாழ்வியல் கலைக் களஞ்சியம் தொகுதி-1, ப. 732) ஆற்றின் போக்கால் அரிக்கப்பட்ட கரை என்பது இன்றைய நிலை. இன்றைய நிலையை விளக்கும் பெயர்க் குறியீட்டை அன்றைக்கே அப்பகுதிக்கு இட்டு வழங்கியிருப்பார்கள் என்ற விளக்கம் பொருத்தமாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;களப்பிரர் காலத்துச் சமணசமய ஆக்கிரமிப்பின் காரணமாகத் தமிழகத்தில் நுழைந்த அருக வழிபாடு பொதுகே பகுதியில் நிலைபெற்றதால் பண்டைய பொதுகே என்னும் பெயர் மறைந்து அருகன்மேடு என்னும் பெயரே பரவலாக வழங்கப்படலாயிற்று, அருகன்மேடு என்னும் பெயரே காலப்போக்கில் மருவி அரிக்கமேடு என்றாயிற்று என்பார் முனைவர் சு.தில்லைவனம் (புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும், ப.23). &lt;br /&gt;&lt;br /&gt;இக்கூற்றுக்கு, இப்பகுதியில் கிடைத்த புத்தர் சிலையை அருகன் சிலை என்று தவறாகக் கணித்துச் சான்று காட்டுவார் அவர். அவர் சான்று காட்டும் சிலை புத்தர் சிலையே என்பது ஐயத்திற்கிடமின்றி மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே முனைவர் சு.தில்லைவனம் அவர்களின் கூற்று பொருந்தாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-7593736057779847430?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/7593736057779847430/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2010/07/2.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/7593736057779847430'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/7593736057779847430'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2010/07/2.html' title='அரிக்கமேடு - பெயர்க் காரணம் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி 2'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-1158682717891228383</id><published>2010-07-05T07:32:00.003+05:30</published><updated>2010-07-13T08:15:51.198+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதுச்சேரி வரலாறு'/><title type='text'>புதுச்சேரியில் பௌத்தம் பகுதி-1</title><content type='html'>&lt;strong&gt;புதுச்சேரியில் பௌத்தம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்&lt;br /&gt;பட்ட மேற்படிப்பு மையம்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கௌதம புத்தரால் வட இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட பௌத்தமதம், தமிழகத்தில் பரவி செல்வாக்கு பெற்ற காலம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. கடைச்சங்க நூல்களில் பௌத்தம் குறித்த வெளிப்படையான குறிப்புகள் கிடைக்காத நிலையில் கடைச்சங்க காலத்திற்குப் பின்னர்தான், சற்றேறக்குறைய கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் பௌத்தமதம் தமிழ்நாட்டில் பரவியிருக்கக்கூடும் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது. ஆனால் இக்கருத்து பொருந்தாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் மாமன்னர் அசோகர் காலத்திலேயே அதாவது கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே பௌத்தம் தமிழகத்தில் பரப்பப்பட்டது என்பதற்கான அகச்சான்றாக அசோகரின் கல்வெட்டு ஒன்றனை எடுத்துக்காட்டி நிறுவுகின்றார் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள். அவர் கூறும் ஆதாரம் பின்வருமாறு,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;வட இந்தியாவின் பிஷாவர் நகரத்துக்கருகில் காணப்படும் அசோகரின் சாசனத்தில் (Rock Edict iii) தரும விஜயம் (அறவெற்றி) என்னும் வெற்றியே மாட்சி மிக்க அரசரால் (அசோக மன்னரால்) முதல்தரமான வெற்றியென்று கருதப்படுகின்றது. இந்த வெற்றி இந்த இராச்சியத்திலும், இதற்கப்பாற்பட்ட அறுநூறு யோசனை தூரத்திலுள்ள அண்டியோகஸ் என்னும் யவன அரசருடைய தேசத்திலும் அதற்கும் அப்பால் டாலமி, அண்டிகொனஸ் மகஸ், அலெக்ஸாந்தர் என்னும் பெயருள்ள நான்கு அரசர்களின் தேசங்களிலும், இப்பால் தெற்கேயுள்ள சோழ, பாண்டிய, தாம்பிரபரணி (இலங்கை) வரையிலும் இந்த (அற) வெற்றி அடிக்கடி அரசரால் கைப்பற்றப்பட்டது.&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சாசனம் கி.மு. 258 இல் எழுதப்பட்டது. அசோகமன்னர் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் தரும விஜயத்தை- அதாவது, பௌத்த தருமத்தைப் போதித்து அதனைப் பரவச் செய்வதால் வந்த அறவெற்றியைக் கைப்பற்றினார் என்னும் செய்தியை இச்சாசனம் தெரிவிக்கின்றது. இதன் திரண்டபொருள் என்னவென்றால், அசோகச் சக்கரவர்த்தி தூதர்களை (பௌத்த பிட்சுக்களை) அனுப்பிப் பௌத்த தருமத்தைத் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் மற்றும் பலநாடுகளிலும் பரவச் செய்தார் என்பதே. (மயிலை சீனி. வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், ப.25) &lt;br /&gt;&lt;br /&gt;ஆக கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே பௌத்தமதம் தமிழ்நாட்டில் பரப்பப்பட்டது என அறிகிறோம். தமிழகத்தில் பௌத்தம் பரவப் பணியாற்றியவர் மாமன்னர் அசோகரின் தம்பியாகிய மகிந்தர் என்றழைக்கப்படும் மகேந்திரர் ஆவார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-1158682717891228383?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/1158682717891228383/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2010/07/1.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/1158682717891228383'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/1158682717891228383'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2010/07/1.html' title='புதுச்சேரியில் பௌத்தம் பகுதி-1'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-2459805006833824473</id><published>2010-01-17T10:59:00.004+05:30</published><updated>2010-01-17T11:11:37.927+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம் -சாதனையாளர்'/><title type='text'>பாக்கியராஜ் செய்யாத புரட்சி - சினிமாராணி டி.பி.ராஜலட்சுமி பகுதி -6</title><content type='html'>&lt;strong&gt;பாக்கியராஜ் செய்யாத புரட்சி &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாவலும் திரைப்படமும்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1931 இல் வெளிவந்த கமலவல்லி என்ற இந்நாவல் 1936 இல் நாவலாசிரியராலேயே திரைக்கதை அமைக்கப்பட்டு அவரின் சொந்தத் தயாரிப்பில் சொந்த இயக்கத்தில் மிஸ்.கமலா என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்ட செய்தி கட்டுரையில் முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது. நாவலைப் புரட்சிகரமான மரபு மீறல்களோடு படைத்த டி.பி.ராஜலட்சுமியால் அதே துணிச்சலோடு திரைப்படத்திற்குத் திரைக்கதை அமைக்க இயலவில்லை என்பது ஒரு முக்கியப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;மிஸ்.கமலா திரைப்படத்தின் முன்பாதிக் கதை சற்றொப்ப நாவலை ஒட்டி அமைக்கப்பட்டிருந்தாலும் பின்பாதிக் கதை திரைக்கதையில் மாறுபடுகின்றது. &lt;br /&gt;திரைப்படத்தில், கதைத்தலைவி கமலி கண்ணப்பன் காதல் -கமலி டாக்டர் கட்டாயமணம் -முதலிரவில் கமலி டாக்டரிடம் தன்காதலை வெளிப்படுத்தல்- டாக்டர் காதலர்களைச் சேர்த்துவைப்பதாக உறுதியளித்தல் என்று தொடரும் கதை பின்னர் மாற்றமடைகிறது. எஸ்.எம். உமர் எழுதும், மிஸ். கமலா திரைப்படக் கதைச்சுருக்கத்தின் பின்பாதி வருமாறு,&lt;br /&gt;&lt;br /&gt;“கமலி, கண்ணப்பனிடம் சென்று தன்னை ஏற்றுக்கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறாள். கண்ணப்பன் மறுத்து விடுகிறான். நீ இன்னொரு வனால் தாலி கட்டப்பட்டவள் என்று! பாவம் கமலி! வேறு என்ன செய்வாள் அவள்? தற்கொலை செய்துகொள்ளப் போகிறாள். ஆனால் எதிர்பாராதவிதமாக ஒரு கார்விபத்தில் சிக்கிக்கொள்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் காரில் இருந்தவர்கள் கண்ணப்பனின் பெற்றோர். அவர்கள் கமலியைத் தங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர், சிகிச்சைக்காக. சிகிச்சை பார்க்கவந்த டாக்டர் வேறு யாருமல்லை, கமலிக்குத் தாலிகட்டிய, தற்போது அவளைச் சகோதரியாகப் பாவிக்கும் அதே டாக்டர்தான்.&lt;br /&gt;தன் வீட்டிற்குள்ளேயே கமலி வந்துவிட்டதைக் கண்ட கண்ணப்பன் கலங்குகிறான். ஆனால் அவனால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;உடல்நலம் தேறிய கமலி வயிற்றுப் பிழைப்புக்காக ஜிப்சி வேஷம் போடுகிறாள். அந்த வேஷத்தில் அவளைக் காதலிக்கத் தலைப்படுகிறான் கண்ணப்பன். ஜிப்சி வேஷத்தில் இருந்த கமலி, மிக சாமார்த்தியமாக, தன்னை அவன் மணந்துகொள்வதாக ஓர் உறுதிமொழி வாங்கிக்கொண்டு, வீட்டில் அனைவரும் இருக்கும்போது அதை எடுத்துக் காட்டுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt; ‘நான்தான் ஜிப்சி, ஜிப்சிதான் நான்!’ என்கிறாள். டாக்டரும் கமலி என் சகோதரிதான் என்கிறார். கண்ணப்பன் கமலி காதல் கைகூடுகிறது.” &lt;br /&gt;&lt;strong&gt;(எஸ்.எம். உமர், கலை உலகச் சக்கரவர்த்திகள், பக். 436)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கமலவல்லி நாவலில் தன் அக்காள் பத்மாசனி பாரிஸ்டர் இவர்களின் வற்புறுத்தலுக்கு ஒருவாறு உடன்பட்டுக் கமலவல்லியை மணந்துகொள்கிறான் கண்ணப்பன். ஆனால் திரைப்படத்திலோ கண்ணப்பன், ‘இன்னொருவன் தாலிகட்டிய பெண்’ என்று கமலியை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறான். பிறகு ஜிப்சி வேஷம் போட்டு ஒருவகையில் ஏமாற்றித்தான் கண்ணப்பனை மணக்கிறாள் கமலி. &lt;br /&gt;&lt;br /&gt;நாவலுக்கும் திரைப்படத்துக்குமான இந்த வேறுபாடு கவனத்தில் கொள்ளத்தக்கது. நாவல் என்ற படைப்பிலக்கியத்தில் பேசப்படும் மரபுமீறல்களும், சீர்திருத்தங்களும் வெகுசன ஊடகமாம் திரைப்படத்திற்கு என்று வருகிறபோது வழுக்குகிறது. நாவலுக்கும் திரைப்படத்துக்கும் படைப்பாளி ஒருவராய் இருந்தபோதும் இதில் மாற்றமில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகளில்தான் இந்நிலை என்றில்லை, எண்பதுகளில் சற்றேறக்குறைய இதே கமலவல்லி நாவலின் கதையை தம் சொந்தப் படைப்புபோல் இயக்குநர் கே.பாக்யராஜ் அந்த ஏழு நாட்கள் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தபோது, தன்மனைவியைக் காதலித்தவனுக்கு மீண்டும் அவளையே திருமணம் செய்துவைக்கக் கணவன் தயாராக இருந்தாலும் திருமணம் மற்றும் தாலி பற்றிய புனிதங்களிலிருந்து விடுபட இயக்குநர் கே.பாக்யராஜ் தயாராயில்லை. மரபு மற்றும் புனிதங்களை மீறாதவனாகவே காதலனைச் சித்தரிக்கின்றார் அவர். &lt;br /&gt;&lt;br /&gt;எண்பதுகளில் கூடப் படைப்பாளிகள் செய்யத் தயங்கிய மரபுமீறல்களை முப்பதுகளிலேயே செய்துகாட்டிய நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமியின் துணிச்சல் உண்மையிலேயே பாராட்டத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதல் சகலகலாவல்லி என்ற பெருமைக்குரிய டி.பி.ராஜலட்சுமியின் படைப்பிலக்கியப் பங்களிப்பும் நாவல் இலக்கிய வரலாற்றில் அவருக்குரிய தனியிடம் குறித்த பதிவுகள் கால ஓட்டத்தில் மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் சுவடுகளற்றுப் போகாமல் உரிய கவனம் பெறுதல்வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-2459805006833824473?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/2459805006833824473/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2010/01/6.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/2459805006833824473'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/2459805006833824473'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2010/01/6.html' title='பாக்கியராஜ் செய்யாத புரட்சி - சினிமாராணி டி.பி.ராஜலட்சுமி பகுதி -6'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-6930760521227555420</id><published>2010-01-10T17:42:00.002+05:30</published><updated>2010-01-10T17:51:47.806+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம் -சாதனையாளர்'/><title type='text'>காதல் மணத்தை வலியுறுத்தும் டி.பி.ராஜலட்சுமி - சினிமாராணி டி.பி.ராஜலட்சுமி பகுதி-5</title><content type='html'>&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காதல் மணத்தின் மேன்மை: &lt;/strong&gt;&lt;br /&gt;நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமி நாவலில் மையப்படுத்தி விவாதப் பொருளாக்குவது பெண்களின் திருமணச் சுதந்திரம் குறித்த சிக்கலையே. இப்பிரச்சனை அவர் தம்சொந்த வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்சனையும் கூட. தம் வாழ்க்கையிலும் தம்மையொத்த பெண்களின் வாழ்க்கையிலும் நேர்ந்த இக்கட்டாயமணக் கொடுமைகளுக்குத் தீர்வுகாணும் போக்கிலேயே கமலவல்லி நாவலின் கதைப்பின்னல் அமைக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;கட்டாயமணத்திற்கு மாற்றாக, பழந்தமிழர்களின் வாழ்க்கை முறையை அடியொற்றிய காதல் மணம் வழிவந்த இல்லறமே மேலானது என்பதை வலியுறுத்த விரும்புகிறார் நாவலாசிரியர், அதனோடு பெண்களை எல்லாநிலைகளிலும் சுந்திரமாகச் செயல்படத் துணைபுரிவதே ஆண்களின் கடமையாயிருக்க வேண்டும் என்பதனையும் வலியுறுத்தும் போக்கில் நாவல் அமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நாவலில் கமலவல்லியின் தடபுடலான மறுமணத்திற்குப் பின்னர் திருமணத்திற்கு வந்திருந்தவர்களை நோக்கிப் பாரிஸ்டர் பேசும் நீண்டஉரையின் மையக் கருத்தாக இடம்பெற்றிருப்பது காதல் மணத்தின் மேன்மையும், பெண்களின் சுதந்திரம் குறித்த பிரகடனமுமே.&lt;br /&gt; &lt;br /&gt;பாரிஸ்டர் பக்தவச்சலம் உரையின் ஒரு பகுதி,&lt;br /&gt;&lt;br /&gt;“இப்பரத கண்டத்தில் அக்காலத்தில் பருவமடைந்த ஆண்பெண்கள் ஒருவரையொருவர் மறைமுகமாய்ச் சந்தித்துக் காதலித்த பின்னரே பகிரங்கத் திருமணம் செய்துகொள்ளும் வழக்கமிருந்து வந்தது. இதனால் அக்காலத்திலிருந்த குடும்பங்களில் உண்மைக்காதலும் உறுதிப்பாடும் நம்பிக்கையும் மலிந்து கிடந்தன. இவ்வுண்மைகளுக்குத் தொல்காப்பியம், மணிமேகலை, குண்டலகேசி முதலிய காவியங்களே தக்கசான்றாகும். &lt;br /&gt;&lt;br /&gt;தற்காலமோ அத்தகைய களவுக் காதல் மணம் முற்றிலும் ஒழிந்துபோய், விலைமணம் மலிந்து காட்டிலிருக்கும் பெண்ணுக்கும் வீட்டிலிருக்கும் ஆணுக்கும் புரோகிதன் பொருத்தம் தந்தான் என்றவுடன் சதிபதிகளின் இஷ்டத்தையும்கூட எதிர்பாராமல் பலவித சடங்குகளின் மூலம் அவ்விருவரையும் சேர்த்துவைத்து விவாகமென்று சொல்லிவிடுகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் பெரியவர்களென்னப் பட்டவர்கள் குழந்தைகளின் கல்யாண விஷயத்தில் பெரும்பாலும் தங்களுடைய உறவு, வருமானம், அந்தஸ்து முதலிய சுயநலங்களையே பெரிதெனக் கருதுகிறார்கள்.” &lt;br /&gt;   (டி.பி.ராஜலட்சுமி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், பக். 122-123)&lt;br /&gt;&lt;br /&gt;“மாசற்ற ஸ்திரீ ரத்தினங்களை ஆண்களோடு சமமாய்ப் பாவித்து, அவர்களைக் கேவலம் அடிமையென்று கருதாமல் பெண்கள் தங்கள் சுதந்திரத்தைத் தாராளமாய் அனுபவித்து இன்பவாழ்வு வாழ அவர்களைத் தாராளமாய் விட்டுவிடுவதே இப்போது ஆணுலகத்தைச் சார்ந்த பெருத்த கடமையாகும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆருயிர் நண்பர்களே! தேனினும் இனிய நம்தமிழ்நாடு பழைய சீரும் சிறப்பும் பெற்றுப் புகழ்பெற வேண்டுமானால் நீங்கள் பெண்களை, ஆண்களைப் போலவே நினையுங்கள். அவர்களிடம் உங்கள் சுயநலத்தை விட்டுவிடுங்கள். அவர்களுடைய பெருமைக்கும் உயர்வுக்கும் அவர்களைக் கொண்டாடுங்கள். எதன் பொருட்டும் உங்கள் சுயநலத்திற்காக அவர்களுடைய இ~;டத்தையும் சந்தோ~த்தையும் பறிமுதல் செய்யாதீர்கள்.” &lt;br /&gt;   (டி.பி.ராஜலட்சுமி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், பக். 123-124)&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சான்று காட்டப்பட்டுள்ள நாவலின் பகுதியில் பாரிஸ்டர் என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக, நடைமுறையில் உள்ள ஏற்பாட்டு மணத்தை விலைமணம் என்று சாடியும் மணமக்களின் விருப்பு வெறுப்புகள் புறக்கணிக்கப்பட்டு பெரியவர்களின் சுயநல வெளிப்பாடாகவே இவ்வகைத் திருமணங்கள் நடத்தப்படுகின்றன என்று விமர்சித்தும் புரோகிதன் தருகின்ற பொருத்தம் பார்த்துச் செய்யும் திருமணங்களின் பொருத்தமின்மையை நையாண்டி செய்தும் டி.பி.ராஜலட்சுமி எழுப்பும் எதிர்க்குரல்களின் பன்முகப் பரிமாணம் நம்மை வியக்க வைக்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt; கமலவல்லியின் கணவன் டாக்டர் சந்திரசேகரன் கமலவல்லியைக் கண்ணப்பனுக்கு மறுமணம் செய்துவைக்கும் முயற்சியின் ஊடாகவே நாவலாசிரியர் சந்திரசேகரனுக்குத் தக்கதொரு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கின்றார். அவள்தான் பாரிஸ்டர் பத்மாசனி தம்பதிகளின் புதல்வி செல்வாம்பாள். டாக்டர் சந்திரசேகரன் செல்வாம்பாள் திருமணத்தை ஒரு ஏற்பாட்டு மணமாக அதாவது பெற்றோர் பார்த்து மணம்முடிக்கும் விலைமணமாகச் சித்தரிக்க டி.பி.ராஜலட்சுமி விரும்பவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு காதல்மணமாக அமைய வேண்டும் என்று நாவலாசிரியர் விரும்பியதன் விளைவாக அன்னநடை ஆரணங்கு என்று பெயரிடப்பட்ட நாவலின் பதினோராம் அத்தியாயம் செல்லாம்பாள் சந்திரசேகரன் இருவரின் காதலை விவரிக்கும் போக்கில் அமைக்கப்பட்டுள்ளது. ஆக நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமி காதல்மணத்திற்குத் தரும் முக்கியத்துவத்தின் வெளிப்பாடே செல்வாம்பாள் டாக்டர் சந்திரசேகரன் காதல்பகுதி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-6930760521227555420?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/6930760521227555420/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2010/01/5.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/6930760521227555420'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/6930760521227555420'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2010/01/5.html' title='காதல் மணத்தை வலியுறுத்தும் டி.பி.ராஜலட்சுமி - சினிமாராணி டி.பி.ராஜலட்சுமி பகுதி-5'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-5853136270902533372</id><published>2009-12-30T07:15:00.002+05:30</published><updated>2009-12-30T07:23:15.965+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம் -சாதனையாளர்'/><title type='text'>சீர்திருத்தம் பேசிய தேசியவாதி - சினிமாராணி டி.பி.ராஜலட்சுமி பகுதி-4</title><content type='html'>&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சீர்திருத்தம் பேசிய தேசியவாதி &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமி இந்நாவலை எழுதி வெளியிட்ட ஆண்டு 1931 ஆகும் சற்றேறக்குறைய இக்காலக்கட்டத் தமிழகத்தில் சமூக, அரசியல் தளங்களில் இரண்டு வகையான இயக்கங்கள் தோன்றிச் செயலாற்றிக் கொணடிருந்தன. ஒன்று, தேச விடுதலையை மையமிட்ட தேசிய இயக்கம், மற்றொன்று சமூகச் சீர்த்திருத்தங்களில் மையம் கொண்ட திராவிட இயக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;முப்பதுகள் மற்றும் நாற்பதுகளில் தமிழகத்தில் தோன்றிய அனைத்துப் படைப்பிலக்கியங்களிலும் இவ்விரண்டு இயக்கப்போக்குகளின் தாக்கம் தவிர்க்க முடியாததாய் இருந்தமை கண்கூடு. தீவிர அரசியல், தீவிர இயக்கம், தீவிரப் படைப்பாக்கங்களில் செயல்படுவோர் என்ற இத்தகு தீவிரப் போக்குடையவர்களிலிருந்து மாறுபட்டுத் திரைத்துறை சார்ந்து இயங்கும் ஒருவர், அதிலும் ஆதிக்கம் மிகுந்த ஆண் வர்க்கத்தினரின் மேய்ச்சலுக்காக மட்டுமே பெண்ணும் பெண்ணின் உடலும் என்று இன்றுவரை இயங்கிவரும் திரைப்படத்துறையில் ஒரு ஆளுமை மிக்க பெண்ணாக, படைப்பாளியாக டி.பி.ராஜலட்சுமி வெளிப்பட்டமை வியந்து பாராட்டுதற்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் இயக்கக் கொள்கைகளில் பிடிப்பு கொண்டவராக மேடைகளில் தோன்றி தேசபக்திப் பாடல்களைப் பாடி தேசவிடுதலைக்கு எழுச்சியூட்டும் பணியாற்றி வந்த டி.பி.ராஜலட்சுமி படைப்பிலக்கியத் துறையில் குறிப்பாக நாவல் இலக்கியத்தில் செயலாற்றும் போது முற்றமுழுதாகச் சீர்திருத்த இயக்கக் கருத்தாக்கங்களை உள்வாங்கிப் படைப்புக்களில் வெளிப்படுத்தி உள்ளமை ஓர் அழகிய முரணாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;டி.பி.ராஜலட்சுமியின் அனுபவ வழிப்பட்ட சீர்திருத்தம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாயூரம் வேதநாயகர் தொடங்கி டி.பி.ராஜலட்சுமி காலம் வரையிலும்  படைப்பிலக்கியங்களில் பெண்கள் முன்னேற்றம், பெண்கல்வி, பெண்விடுதலை முதலான கருத்துக்கள் தொடர்ந்து பேசப்பட்டுவந்தன. படைப்பிலக்கியங்கள் எனும்போது கவிதை இலக்கியங்கள், புனைகதை இலக்கியங்கள் இரண்டிலும் இப்போக்கு காணப்பட்டது. நாவல் படைப்பதற்கு முன்பே, கவிதை இலக்கியங்களில் மேலே சொல்லப்பட்ட உள்ளடக்கங்களைத் தெளிந்த சிந்தனையோடு பதிவுசெய்ததில் முதன்மையானவர் மாயூரம் வேதநாயகரே. அவரைத் தொடர்ந்தே பாரதி, பாரதிதாசன் முதலான கவிஞர்கள் பெண்விடுதலை குறித்துப் பேசத்தொடங்கினர். &lt;br /&gt;&lt;br /&gt;வேதநாயகர் எத்தகைய இயக்கப் பின்னணியும் இல்லாமல் ஆங்கிலக் கல்வி தந்த அறிவு வெளிச்சத்தில் பெண்விடுதலை பேசினார். பாரதி, பாரதிதாசன் போன்றவர்கள் பெண்விடுதலை பேசியதில் இயக்கப் பின்னணிகள் இருந்தன. புனைகதைகளில், குறிப்பாக நாவல்களில் பெண்விடுதலை பேசப்பட்டபோது ஆங்கிலக் கல்வி, மேற்கத்திய பண்பாட்டுத் தாக்கம் குறித்த விழிப்புணர்வின் விளைவாகவே பெண் விடுதலைச் சிந்தனைகள் பேசப்பட்டன. மாயூரம் வேதநாயகர் தொடங்கி, தொடக்கக்கால நாவல் வரலாற்றில் இப்போக்கினை நாம் காணலாம்.  &lt;br /&gt;நாவலாசிரியை டி.பி.ராஜலட்சுமியின் பெண் விடுதலை குறித்த சிந்தனைகள் மேலே சொல்லப்பட்ட கோணங்களிலிருந்து மாறுபட்டவை. &lt;br /&gt;&lt;br /&gt;டி.பி.ராஜலட்சுமியின் முறைசார் கல்வி இரண்டாம் வகுப்புவரைதான், மற்றபடி அவரின் எழுத்தறிவு, புலமை எல்லாம் அனுபவ வழிப்பட்டதே. ஆங்கிலக் கல்விக்குப் பெரிதும் வாய்ப்பில்லை. எனவே டி.பி.ராஜலட்சுமியின் பெண்விடுதலைச் சிந்தனைகளுக்குக் களம் அமைத்தவை அவரின் வாழ்க்கைப் பேராட்டங்களும், அனுபவங்களுமே எனல் பொருந்தும். அதிலும் தம் முதல் நாவலான கமலவல்லியில் அவர் எடுத்துக்கொண்ட பிரச்சனை, பெண்கள் தம் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பற்றியதாயிருப்பது தனித்தன்மை உடையது.&lt;br /&gt; &lt;br /&gt;இருபதாம் நூற்றாண்டின்; தொடக்ககாலப் படைப்புகள் மிகுதியும் பேசிய பெண்கல்வி, கைம்பெண்டிர் மறுமணம், குழந்தைமண எதிர்ப்பு போன்ற உள்ளடக்கங்களிலிருந்து மாறுபட்டு, ஒருபெண் விருப்பமின்றி வேறு ஒருவருக்குக் கட்டாயத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டாலும் அப்பெண் அத்திருமண வாழ்வில் ஈடுபடாமல் திருமணம் செய்துகொண்ட கணவனின் துணையோடு பல்வேறு போராட்டங்களுக்கிடையே தன்னுடைய காதலனையே மீண்டும் திருமணம் செய்துகொள்வதாக நாவலைப் படைத்துள்ளமை டி.பி.ராஜலட்சுமியின் புரட்சிகரமான சிந்தனைக்குச் சான்றாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கணவன் இறந்தபிறகு பெண்கள் மறுமணம் செய்துகொள்வதை வலியுறுத்தும் விதவைத் திருமணம் போன்ற மரபு மீறல்களிலிருந்து டி.பி.ராஜலட்சுமி தம் நாவலில் கையாண்ட மரபு மீறல் முற்றிலும் புதுமையானது. கணவன் உயிருடன் இருக்கும்போதே ஒருபெண் வேறுஒருவனைத் திருமணம் செய்துகொள்வது. பலர் அறிய மறுமணம், அதுவும் கணவனின் துணையோடு. இவ்வுள்ளடக்கம் அவர் காலத்தில் புதிது, புதுமையானது.&lt;br /&gt;இத்தகு புதிய மரபு மீறலுக்கான நியாயங்கள் நாவலில் பேசப்படுகின்றன. நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமி, நாவலில் ஆசிரியர் கூற்றாக இவ்விவாதங்களைப் பதிவுசெய்யாமல் பாத்திரங்களின் கூற்றாகவே பதிவு செய்திருப்பது அதன் கட்டுக்கோப்பில் வெகுஇயல்பாகப் பொருந்திக் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கமலவல்லியின் மறுமணத்திற்கு உடன்படும் அவளின் கணவன் டாக்டர் சந்திரசேகரனிடம் இப்பிரச்சனை குறித்துத் தீவிரமாக விவாதிக்கின்றார் பாரிஸ்டர் பகதவச்சலம். அவ் உரையாடலின் ஒருபகுதி பின்வருமாறு,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாரிஸ்டர்: &lt;/strong&gt;உங்களுக்குக் கமலவல்லியின் நடத்தைகள் பிடிக்காமல்தானே! இப்போது அவளுடைய நிர்ப்பந்தத்திற்காக அவள் மறுவிவாகம் செய்துகொள்ள வேண்டுமென்று அனுமதிக்கின்றீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;டாக்டர்: &lt;/strong&gt;கமலவல்லி வெறுக்கத்தக்க குணங்களுள்ளவளல்ல. இன்னும் பார்த்தால் குணவிசேடங்களிலும் மதிநுட்பத்திலும் அவள் மிக மேம்பாடானவள். கல்யாண விஷயத்தில் ஆணாயிருந்தாலும் சரியே, பெண்ணாயிருந்தாலும் சரியே, அவரவர் தத்தம் மனசாட்சியின்படி சர்வசதந்திரமாய் நடக்க விட்டுவிடுவதே மேன்மையாகும். இந்த விசாலமான நோக்கத்தினாலேயே நான் கமலவல்லி மறுபடியும் கண்ணப்பனை விவாகம் செய்துகொள்ள என் முழுமனதுடன் சம்மதிக்கிறேன். &lt;br /&gt; (டி.பி.ராஜலட்சுமி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், ப. 107)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாரிஸ்டர்: &lt;/strong&gt;பகிரங்கமாய் ஒருவரை மணம் செய்துகொண்ட ஒரு பெண், வேறொருவருடன் வாழ்ந்திருக்கும்படி செய்வது முறையாகுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;டாக்டர்: &lt;/strong&gt;ஏன் முறையாகாது? விவாகமென்பதே ஆணும் பெண்ணும் தங்கள் வாழ்க்கையை முன்னிட்டுச் செய்துகொள்ளும் ஒரு ஒப்பந்தந்தானே. நீங்கள் கொஞ்சம் நன்றாய் ஆலோசித்துப் பாருங்கள். கல்யாணம் ஆணுக்கா? அல்லது பெண்ணுக்கா? இருபாலருக்குந்தானே. அப்படியிருக்க ஆண்கள் மட்டும் பல பெண்களை மணக்க அனுமதிக்கும் நாம், பெண்கள் தங்கள் விருப்பப்படி ஒருவரை விவாகம் செய்து கொள்வதை ஏன் அனுமதிக்கக்கூடாது?&lt;br /&gt;&lt;br /&gt; குருட்டுத்தனமான இந்தக் கொடுமைகள் பெண்கள் சமூகத்திற்கே உலை வைப்பதாயிருக்கின்றன. பெண்கள் ஆண்களைவிட எவ்வகையிலேனும் தாழ்ந்தவர்கள் என்று கூறமுடியுமா? நாம் நம்முடைய சௌகர்யத்திற்காகப் பெண்களை அடக்கியாண்டு கொடுமைப் படுத்துகிறோம். இது பெரும் பாபமான காரியமாகும். இன்னும் ஒரு வேடிக்கையைப் பாருங்கள். பெண்களுக்கு மட்டும் விதவைத் தன்மை கற்பிக்கப்பட்டிருக்கும் கொடுமை இப்பாழும் நாட்டைத் தவிர, வேறு நாகரீகம் பெற்ற எந்த நாட்டிலேனும் உண்டா? பெண்களைப் போலவே ஆண்களும் மனைவிமார்களைப் பிரிந்தவுடன் மொட்டையடித்து மூலையில் உட்காரவைக்கப்பட்டால் அப்போது ஆணுலகம் அறிவுபெறும். &lt;br /&gt;   (டி.பி.ராஜலட்சுமி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், பக். 108-109)&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் சந்திரசேகரனின் கருத்துக்களாக வெளிப்படுவது நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமியின் குரலே. உடல் வலிமையாலும் அறிவாலும் எல்லாவகையிலும் பெண்கள் ஆண்களைவிட ஒருபடி தாழ்ந்தவர்களே என்ற கருத்து வலிமை பெற்றிருந்த ஒரு சமூகத்தில் “பெண்கள் ஆண்களைவிட எவ்வகையிலேனும் தாழ்ந்தவர்கள் என்று கூறமுடியுமா? நாம் நம்முடைய சௌகர்யத்திற்காகப் பெண்களை அடக்கியாண்டு கொடுமைப்படுத்துகிறோம்.” என்ற நாவலாசிரியரின் எதிர்க்குரல் எத்துணை அழுத்தமாகவும் உரத்தும் ஒலிக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமின்றி பெண்களுக்கு நேரும் கொடுமைகள் குறித்து, “பெண்களைப் போலவே ஆண்களும் மனைவிமார்களைப் பிரிந்தவுடன் மொட்டையடித்து மூலையில் உட்காரவைக்கப்பட்டால் அப்போது ஆணுலகம் அறிவுபெறும்.” என்று நாவலாசிரியர் பேசுவது பெண்ணடிமைச் சமூகம் பற்றிய அவரின் தார்மீகக் கோபத்தின் உச்சம் என்பதை நாம் உணர்தல் வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-5853136270902533372?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/5853136270902533372/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/12/4.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/5853136270902533372'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/5853136270902533372'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/12/4.html' title='சீர்திருத்தம் பேசிய தேசியவாதி - சினிமாராணி டி.பி.ராஜலட்சுமி பகுதி-4'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-4233540728711343897</id><published>2009-12-22T13:45:00.003+05:30</published><updated>2009-12-22T13:53:41.639+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம் -சாதனையாளர்'/><title type='text'>நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமி -சினிமாராணி டி.பி.ராஜலட்சுமி பகுதி-3</title><content type='html'>&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமி:&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;“தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்” நூலை எழுதிய பெ.கோ. சுந்தரராஜன் (சிட்டி), சோ. சிவபாதசுந்தரம் ஆகியோர் டி.பி.ராஜலட்சுமி அவர்களின் நாவல் படைப்புகளைப் போகிறபோக்கில் பின்வருமாறு (ப. 144)சுட்டிச் செல்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;“அதே ஆண்டில் (1931) மற்றொரு பெண்மணி தென்னிந்திய நாடக மேடைகளிலும் சினிமா காட்சிகளிலும் பிரசித்தி பெற்ற டி.பி. ராஜலட்சுமி, “கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்” என்ற ஒரு நாவல் எழுதியிருக்கிறார். இந்த நாவலிலும் சமூக முன்னேற்றக் கருத்துக்கள் காணப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கமலவல்லியை டாக்டர் சந்திரசேகரன் காதலிப்பதும் உமையப்பன் என்ற தீயவனால் பல இடையூறுகள் ஏற்படுவதும் பின்னர் பிறர் உதவியால் யாவும் சுபமாய் முடிவதும்தான் கதை. ஆனால் இந்த நாவலின் பின்அட்டையில் காணப்படும் விளம்பரத்தில், ‘இது அனுபவ ஞானக் கலா விலாசங்கள் நிறைந்திலங்கும் அமிர்தச் சுவையுள்ள அழகிய தமிழ் நாவல்’ என்று காணப்படுவதால் ஆசிரியை வளர்ந்த சூழ்நிலையின் சமகாலச் சமூகச் சித்திரம் என்றுதான் கொள்ளப்படலாம். இவர் மற்றும் ஐந்து நாவல்கள் எழுதியதாக ஒரு விளம்பரம் குறிப்பிடுகிறது.” &lt;br /&gt;சிட்டி, சிவபாதசுந்தரம் ஆகிய இந்நூலாசிரியர்கள் மறவாமல் டி.பி.ராஜலட்சுமியை ஒரு நாவலாசிரியராகப் பதிவு செய்துள்ளமை காலத்தினால் செய்த உதவியாகும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்நூலைத் தவிர நாவல் தொடர்பாக வெளிவந்துள்ள ஆய்வு நூல்கள் வரலாற்று நூல்கள் மற்றும் நாவல் விளக்க நூல்கள் எவற்றிலுமே டி.பி.ராஜலட்சுமி அவர்களின் நாவல்கள் குறித்த பதிவு இடம்பெறாதது ஒரு வரலாற்றுச் சோகமே. (என்னுடைய பார்வை எல்லைக்குட்பட்ட நூல்களில்)&lt;br /&gt; &lt;br /&gt;இணையதள தமிழ் விக்கிப்பீடியா http://ta.wikipedia.org/wiki/-  “டி.பி.ராஜலட்சுமி: தமிழ் சினிமாவின் முதல் நடிகையும், புதின எழுத்தாளரும் ஆவார். தமிழில் வெளிவந்த முதல் பேசும்படமான காளிதாஸ் (1931) திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். --- ---  ராஜலட்சுமி எழுதிய முதல் புதினம் கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் என்பதாகும். விமலா, மல்லிகா, சுந்தரி, வாஸந்திகா, உறையின் வாள் ஆகியவை இவர் எழுதிய மற்ற நாவல்கள்” &lt;br /&gt;என்று குறிப்பிட்டுள்ள செய்தி நாவல் ஆய்வாளர்களுக்கும் தமிழிலக்கிய வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பயனளிக்கும் அரிய செய்தியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்:&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமியின் முதல் நாவல் கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் ஆகும். இவர் இந்நாவலைத் தம் இருபதாவது வயதில் எழுதியுள்ளார். டி.பிராஜலட்சுமி கதாநாயகியாக நடித்துத் தமிழின் முதல் பேசும்படம்; வெளிவந்த அதே ஆண்டில் (1931) டி.வி. பாலகிரு~;ண நாயுடு என்பவரால் இந்நாவல் வெளியிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt; ‘விடுதலைக்கு முந்தைய பெண் எழுத்தாளர்களின் நாவல்கள்’ என்ற தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காக சென்னை ஆவணக் காப்பகத்தில் நூல்களைத் தேடித் திரட்டியபோது இந்நூலைக் கண்டெடுத்ததாகவும் பின்னர் இந்நாவலின் தனித்தன்மைகளை உணர்ந்து புலம் பதிப்பகத்தின் வழியாக இந்நாவலைப் பதிப்பித்ததாகவும் குறிப்பிடுகின்றார் இந்நூலின் புதிய பதிப்பாசிரியர் ப.பத்மினி அவர்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;புதிய மறுபதிப்பு&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;டி.பி.ராஜலட்சுமி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்&lt;/strong&gt;&lt;br /&gt;பதிப்பாசிரியர் ப.பத்மினி&lt;br /&gt;புலம் வெளியீடு&lt;br /&gt;மதுரவாயல், சென்னை- 95&lt;br /&gt;முதல்பதிப்பு மார்ச் 2009&lt;br /&gt;&lt;br /&gt;என்ற பதிப்புத் தகவல்களோடு வெளிவந்துள்ளது.&lt;br /&gt; &lt;br /&gt; இந்நூலின் பதிப்பாசிரியர் ப.பத்மினி அவர்கள் இந்நாவலின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது,&lt;br /&gt;&lt;br /&gt;“திரைப்படத் துறையில் இருக்கும் பெண்களில் இவரைத்தவிர இலக்கிய உலகில் வேறு யாரும் பிரவேசித்ததுபோல் தெரியவில்லை. இவருக்குப் பின்வந்த திரைப்படப் பெண் நடிகர்களில் பலர் தம்முடைய வாழ்க்கையைப் பத்திரிக்கைகளில் தொடர்களாக மட்டுமே வெளியிட்டனரேயன்றி இவரைப் போன்று சமூக உணர்வுடன் கூடிய இலக்கியப் படைப்பை அளித்ததாகத் தெரியவில்லை. ஆனால் திரைப்படத்துறையில் புகழின் உச்சத்தில் இருந்த இவரின் படைப்போ சமூக உணர்வுடன் கூடியதாக இருப்பதைக் காணலாம்.” &lt;br /&gt;(ப.பத்மினி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், முன்னுரை, பக் 9-10)&lt;br /&gt;&lt;br /&gt;என்று குறிப்பிடுவதோடு இந்நூலை மீண்டும் மறுபதிப்பாக வெளியிடுவதற்கான காரணங்களாகப் பதிப்பாசிரியர் ப.பத்மினி இரண்டினைக் குறிப்பிடுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று, கலைப்பட்டறையில் வாழ்ந்திருந்தாலும் யதார்த்தத்தில் சிந்திக்கும்போது அன்றைய பெண்களின் சிக்கல்களை மையமாகக் கொண்டு மிகவும் துணிச்சலோடு இப்படைப்பைப் படைத்திருப்பது வியப்புக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு, இந்திய விடுதலைக்கு முன் பெண் எழுத்தாளர்கள் பலர் எழுதிய படைப்புகள் சமூகத்திற்குக் குறிப்பாகப் பெண்களுக்கு விழிப்புணர்வு தரக்கூடியவையாக இருந்துள்ளன. சில படைப்புகள் சமூக மாற்றங்களை உண்டாக்கக் கூடியவையாகவும் இருந்துள்ளன. இது குறித்துப் பெரிதாகப் பதிவுகள் செய்யப்படவில்லை. இந்நாவல் அப்படிப்பட்ட ஒரு பதிவாக இருக்கும் (ப.பத்மினி, கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், முன்னுரை, பக். 10-11)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நூலமைப்பு: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் இரட்டைத் தலைப்பிடும் முறை வழக்கத்திலிருந்தது. பத்திரிக்கைகளில் இடம்பெறும் செய்தியின் தலைப்புகள் தொடங்கி, நாவல் தலைப்புகள், சிறுகதைத் தலைப்புகள், நூலின் தலைப்புகள், திரைப்படத் தலைப்புகள் என அனைத்துத் தலைப்புகளும் இரண்டிரண்டாக இடப்படுவது வழக்கம். முதல் தலைப்புக்கும் அடுத்த தலைப்புக்கும் இடையே அல்லது என்றசொல் இடம்பெறும். இம்மரபைப் பின்பற்றி இந்நாவலுக்கும் கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் என இரட்டைத் தலைப்பு இடப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;நாவல் பதினாறு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அத்தியாத்திற்கும் நாவலாசிரியராலேயே பொருத்தமான கவித்துவமிக்க தலைப்பிடப்பட்டுள்ளது. (காட்டேரியும் கருப்பண்ணசாமியும், சுவர்க்கவாசலும் அம்பிகைசேனையும், பூனைக்குக் கொண்டாட்டம் எலிக்குத் திண்டாட்டம் என்பன போன்ற தலைப்புகள்) முதல் நான்கு பகுதிகள் மட்டும் அதிகாரம் என்ற பெயரிலும் ஐந்துமுதல் பதினாறு வரையிலான பகுதிகள் அத்தியாயங்கள் என்ற பெயரிலும் பகுக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாவலின் கதைப் பாத்திரங்கள்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கமலவல்லி    - கதைத் தலைவி&lt;br /&gt;கண்ணப்பன்   - கமலவல்லியின் காதலன்&lt;br /&gt;மகாலிங்கம்   - கண்ணப்பனின் நண்பன்&lt;br /&gt;டாக்டர் சந்திரசேகரன்  - கமலவல்லியின் கணவன்&lt;br /&gt;பத்மாசனி   - கண்ணப்பனின் தமக்கை &lt;br /&gt;பாரிஸ்டர் பக்தவசலம்        - பத்மாசனியின் கணவர்&lt;br /&gt;செல்வாம்பாள்   - பாரிஸ்டர், பத்மாசனி இவர்களின் மகள்&lt;br /&gt;சோமசுந்தரம் பிள்ளை       - கமலவல்லியின் வளர்ப்புத் தந்தை&lt;br /&gt;மாணிக்கவல்லி        - கமலவல்லியின் வளர்ப்புத் தாய்&lt;br /&gt;உமையப்பன்   - கமலவல்லியை விலைபேசும் முரடன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கதைச் சுருக்கம்:&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இந்நாவலின் கதைத்தலைவி கமலவல்லியும் கண்ணப்பனும் காதலர்கள். கமலவல்லியின் வளர்ப்புப் பெற்றோர் ரூபாய் 5000 பணம் பெற்றுக் கொண்டு அவளை டாக்டர் சந்திரசேகரனுக்கு வலிந்து மணம் செய்து வைக்கின்றனர். முதலிரவில் கமலவல்லி டாக்டர் சந்திரசேகரனிடம் தான் கண்ணப்பனைக் காதலிக்கும் செய்தியைச் சொல்லி கண்ணப்பனோடு தன்னைச் சேர்த்துவைக்க வேண்டுமென்று வேண்டுகிறாள். சந்திரசேகரனும் உடன்படுகிறான். மீண்டும் வளர்ப்புப் பெற்றோர் வசம்வந்த கமலவல்லியை உமையப்பன் என்ற முரடன் ஒருவனுக்கு மணம்முடிக்க அவர்கள் முயற்சி செய்ய, கமலவல்லி அவ்வீட்டைவிட்டுத் தப்பிவந்து தற்கொலைக்கு முயல்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt; அவளைக் காப்பாற்றித் தம் வீட்டில் அடைக்கலம் தருகின்றனர் பாரிஸ்டர் பக்தவச்சலமும் அவரது துணைவியார் பத்மாசனியும். பாரிஸ்டர் பத்மாசனி இணையரின் முயற்சியால் டாக்டர் சந்திர சேகரனின் துணையோடு கமலவல்லி கண்ணப்பன் திருமணம் பல போராட்டங்களுக்கிடையே நடந்தேறுகிறது. டாக்டர் சந்திரசேகரன் பாரிஸ்டர் மகள் செல்வாம்பாளைக் காதலித்து மணமுடிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலித்தவனைத் திருமணம் செய்துகொள்ள முடியாமல் வேறுஒருவனைத் திருமணம் செய்துகொள்கிறாள் ஒருபெண். அவள் கணவன் தன்மனைவி வேறு ஒருவனின் காதலி என்பதை அறிந்தவுடன் அவளின் காதலனுக்கே அவளை மணமுடித்து வைப்பதாகச் சொல்லும் புதுமையான கருத்தே கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் நாவலின் கதைக்கரு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-4233540728711343897?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/4233540728711343897/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/12/3.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/4233540728711343897'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/4233540728711343897'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/12/3.html' title='நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமி -சினிமாராணி டி.பி.ராஜலட்சுமி பகுதி-3'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-2567643833868099126</id><published>2009-12-21T10:37:00.002+05:30</published><updated>2009-12-21T10:43:27.343+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம் -சாதனையாளர்'/><title type='text'>தமிழின் முதல் பெண் இயக்குநர் - சினிமாராணி டி.பி.ராஜலட்சுமி பகுதி-2</title><content type='html'>&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முதல் பெண் இயக்குநர்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1931 தொடங்கி 1950 வரை தொடர்ந்து இருபத்திரண்டு படங்களில் டி.பி.ராஜலட்சுமி நடித்துள்ளார். அவற்றுள் முக்கியமானதாகக் காளிதாஸ் (1931), கோவலன் (1933), வள்ளித் திருமணம் (1933), குலேபகாவலி (1935), ஹரிச்சந்திரா (1935), மிஸ்.கமலா (1936), நந்தகுமார் (1939), மதுரை வீரன் (1939), ஜீவஜோதி (1947), இதயகீதம் (1950) போன்ற படங்களைக் குறிப்பிடலாம்.&lt;br /&gt; &lt;br /&gt;காளிதாஸைத் தொடர்ந்து 1932 இல் ராமாயணம் என்ற படத்தில் டி.பி.ராஜலட்சுமி நடித்தார். இப்படத்தில் டி.எஸ். மணிக்கு இராமன் வேடம். டி.பி.ராஜலட்சுமிக்கு சூர்ப்பனகை, சீதை என்று இரண்டு வேடம். ஒரே படத்தில் முதன்முதலில் இரண்டு வேடங்களில் தோன்றி மக்களை அதிசயிக்க வைத்த பெருமையும் இவருக்கே உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து, பாடி, பேசி வெற்றிக்கொடி நாட்டிய டி.பி. ராஜலட்சுமி 1936 இல் தமிழ்த் திரைப்பட உலகில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்ற புதிய பரிமாணங்களோடு மிஸ். கமலா என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கினார். மிஸ். கமலா திரைப்படத்தின் கதாசிரியரும் அவரே, அவரே திரைக்கதை அமைத்து உரையாடல்களையும் எழுதினார். இப்படத்திற்கான பாடல்களை எழுதியதோடு கதாநாயகி வேடமேற்று பாடி, நடிக்கவும் செய்தார். டி.பி.ராஜலட்சுமியே தமிழின் முதல் பெண் தயாரிப்பாளர். முதல் பெண் இயக்குநர்.&lt;br /&gt;&lt;br /&gt;மிஸ். கமலா திரைப்படத்திற்கு&lt;br /&gt;&lt;br /&gt;நடிப்பு&lt;br /&gt;பாடகர்&lt;br /&gt;பாடலாசிரியர்&lt;br /&gt;கதை&lt;br /&gt;திரைக்கதை&lt;br /&gt;உரையாடல்&lt;br /&gt;இயக்கம்&lt;br /&gt;தயாரிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;ஆகிய பல பணிகளை ஏற்றுத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாகத் திறம்படச் செயல்படுத்திக் காட்டிய பெருமை டி.பி.ராஜலட்சுமி அவர்களையே சாரும். 1936 லேயே இந்திய, தமிழகத் திரைப்பட உலகின் சகலகலாவல்லி என்ற பெரும்புகழ் பெற்றவர் அவரே. தமிழ்த்திரையுலகம் அவரைச் சினிமா ராணி எனக் கொண்டாடியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சாதனை குறித்து 1956 ஆம் ஆண்டின் தமிழ் சினிமா இதழின் தீபாவளி மலரில் டி.பி.ராஜலட்சுமி எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி பின்வருமாறு.&lt;br /&gt;&lt;br /&gt;“இப்படி ஆரம்பமான எனது நட்சத்திர வாழ்க்கைத் தொடர்ந்து ஓய்வில்லாமல் செல்ல ஆரம்பித்தது. ‘வள்ளி’ எனக்கு நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுக்கவே கல்கத்தாவில் முகாம் போட்டுத் தொடர்ந்து பத்து படங்களில் நடித்தேன். அனுபவம் எனக்கு அருமையான ஆசானாக அமைந்தது. ஒரு ஆசிரியரிடம் பாடம் கேட்டால் கூட அவ்வளவு பழக்கம் எனக்கு ஏற்பட்டிராது. அந்தச் சமயத்தில்தான் நான் சொந்தமாக ஒரு படத்தைத் தயாரித்தேன். அதுதான் மிஸ். கமலா. அதன் கதை, வசனம், பாடல்கள், டைரக்~ன் அனைத்தையுமே நான்தான் கவனித்துக் கொண்டேன். தொடர்ந்து மதுரை வீரன், இந்தியத் தாய் ஆகிய படங்களையும் தயாரித்தேன்.”&lt;br /&gt;(அறந்தை நாராயணன், தமிழ் சினிமாவின் கதை, பக் 95-96)&lt;br /&gt;&lt;br /&gt;அனுபவத்தையே ஆசானாகக் கொண்டு சாதித்துக் காட்டிய சினிமா ராணி டி.பி.ராஜலட்சுமி நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர் என்ற திரைப்படம் சார்ந்த ஆளுமைகளுக்கு வெளியே ஒரு சிறந்த படைப்பாளியாகவும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர் என்பது தமிழிலக்கிய உலகில் மறக்கப்பட்ட செய்தி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-2567643833868099126?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/2567643833868099126/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/12/2.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/2567643833868099126'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/2567643833868099126'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/12/2.html' title='தமிழின் முதல் பெண் இயக்குநர் - சினிமாராணி டி.பி.ராஜலட்சுமி பகுதி-2'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-7362039662916323505</id><published>2009-12-20T14:14:00.004+05:30</published><updated>2009-12-20T14:39:01.180+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம் -சாதனையாளர்'/><title type='text'>சினிமாராணி டி.பி.இராஜலட்சுமி:</title><content type='html'>&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_vmRKnj-PgVg/Sy3pjb6BM0I/AAAAAAAAAKI/s41FW1GOasI/s1600-h/T%5B1%5D.bmp"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 210px; height: 314px;" src="http://2.bp.blogspot.com/_vmRKnj-PgVg/Sy3pjb6BM0I/AAAAAAAAAKI/s41FW1GOasI/s320/T%5B1%5D.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5417242721792373570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சினிமாராணி டி.பி.இராஜலட்சுமி:&lt;/strong&gt;&lt;br /&gt;தமிழ்த் திரைப்படங்கள் பேசத்தொடங்கி எழுபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி சனிக்கிழமை தமிழின் முதல் பேசும்படம் வெளியானது. திரைப்படத்தின் பெயர் காளிதாஸ். &lt;br /&gt;1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி சுதேசமித்திரன் இதழில் வெளியான காளிதாஸ் திரைப்பட விளம்பரம் இது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கினிமா சென்டிரல்&lt;br /&gt;1931-ம் வருஷம் அக்டோபர் மாதம்31-ம் தேதி சனி முதல்&lt;br /&gt;தமிழ், தெலுங்கு பாஷையில் தயாரிக்கப்பட்ட&lt;br /&gt;முதல் பேசும் படக்காட்சியைக் கேளுங்கள்&lt;br /&gt;மிஸ். டி. பி. ராஜலட்சுமி நடிக்கும்&lt;br /&gt;“காளிதாஸ்”&lt;br /&gt;முழுதும் பேச்சு, பாடல், நடனம் நிறைந்த காட்சி&lt;br /&gt;இம்பீரியல் மூவிடோன் கம்பெனியாரால் தயாரிக்கப்பட்டது&lt;br /&gt;உயர்ந்த கீர்த்தனங்கள், தெளிவான பாடல்கள், கொரத்தி நாட்டியங்கள்&lt;br /&gt;பாதி கெஜட் காட்சிகளும் காண்பிக்கப்படும்&lt;/strong&gt;&lt;br /&gt;(அறந்தை நாராயணன், தமிழ் சினிமாவின் கதை, ப.41) &lt;br /&gt;&lt;br /&gt;இத்திரைப்பட விளம்பரத்தில் மிஸ்.டி.பி.ராஜலட்சுமி நடிக்கும் காளிதாஸ் என்று விளம்பரப்படுத்தப் பட்டிருப்பதைக் கவனித்தால் தமிழ்த்திரைப்பட உலகுக்கும் டி.பி.ராஜலட்சுமிக்கும் உள்ள தொப்புள்கொடி உறவுபுரியும். வழக்கமாகக் கதாநாயகர்களைக் கொண்டே திரைப்படங்கள் விளம்பரப் படுத்தப்படும் மரபை மீறித் தமிழின் முதல் திரைப்படமே கதாநாயகியை முன்னிறுத்துவது கவனத்திற்குரியது. அதற்குக் காரணம், காளிதாஸ் முதல் தமிழ்த் திரைப்படம் மட்டுமல்ல முதல் தெலுங்குத் திரைப்படமும் கூட. இப்படத்தில் கதாநாயகி வித்யாதரி (டி.பி.ராஜலட்சுமி) தமிழில் பேசுவாள், பாடுவாள். கதாநாயகன் காளிதாசன் தெலுங்கில் பேசுவான், பாடுவான். வேறு சில துணைப் பாத்திரங்கள் இந்தியில் பேசுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக முதல் தமிழ்ப்படத்தில் உருப்படியாகத் தமிழில் பேசி, பாடியவர் டி.பி.ராஜலட்சுமிதான். எனவே தமிழ்த்திரைப்பட வரலாறு டி.பி.ராஜலட்சுமியிலிருந்துதான் தொடங்குகிறது.&lt;br /&gt;1931 அக்டோபர் 31 இல் பொதுமக்கள் பார்வைக்குக் ‘காளிதாஸ்’ வருமுன்னரே அக்டோபர் 29 ஆம் தேதியிட்ட சுதேசமித்திரன் நாளேட்டில் வெளியான ‘காளிதாஸ்’ திரைப்பட விமர்சனத்தின் ஒரு பகுதி,&lt;br /&gt; &lt;br /&gt;“தென்னிந்திய நாடக மேடையில் கீர்த்தி வாய்ந்து சிறந்து விளங்கும் மிஸ். டி.பி.ராஜலட்சுமி முதல் முறையாக சினிமாவில் தோன்றுவதை, இவளை நாடக மேடையில் கண்ணுற்ற அனைவரும் பார்க்க இது சமயமாகும்."&lt;br /&gt; &lt;br /&gt;"நாடக மேடையில் இவள் பாட்டுக்களில் சிறந்ததாகிய தியாகராஜ கிருதிகளான, எந்தரா நீதானோ, சுராக சுதா என்றவிரு பாட்டுக்களையும் ஹரி காம்போதி, சங்கராபரணம் முதலிய ராகங்களில் கேட்கலாம். இதைத் தவிர “இந்தியர்கள் நம்மவர்களுக்குள் ஏனோ வீண்சண்டை”, “ராட்டினமாம் காந்தி கைபாணமாம்” என்ற பாட்டுக்களையும் இனிய குரலுடன் பாடுகிறாள். வார்த்தைகள் தெளிவாகவிருப்பது படத்தின் மேன்மையை அதிகரிக்கிறது.”&lt;br /&gt;(அறந்தை நாராயணன், தமிழ் சினிமாவின் கதை, பக். 42-43)&lt;br /&gt;&lt;br /&gt;சுதேசமித்திரன் விமர்சனத்தில் காளிதாசனாக நடித்த தெலுங்குக் கதாநாயகனின் பெயர் கூடக் குறிப்பிடப்படவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt; முதல் தமிழ்த் திரைப்படத்தில் முதன் முதலாகத் தமிழில் பேசி, பாடி நடித்துப் புகழ்பெற்ற டி.பி.ராஜலட்சுமி முதன்முதலாகச் செய்து சாதித்த சாதனைகள் பலப்பல. &lt;br /&gt;&lt;br /&gt;இவர் 1911 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 13ஆம் தேதியன்று திருவையாறு சாலியமங்கலம் கர்ணம் பஞ்சாபகேச சாஸ்திரிகளுக்கும் மீனாட்சி அம்மாளுக்கும் மகளாகப் பிறந்தார். ஏழு வயதிலேயே சுந்தரம் என்பவருக்கு மணம் முடித்து வைக்கப்பட்டார். திருமண வாழ்க்கை ஒன்றிரண்டு வருடங்கிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. வரதட்சணைக் கொடுமை அல்லது சுந்தரத்தின் மரணம், ஏதோவொன்று தெளிவான குறிப்புகளில்லை. பிறந்தகம் மீண்டார். மீண்டும் சோதனை தந்தையாரின் அகால மரணம். விதவைத் தயாரோடு வாழ்க்கையை இழந்த டி.பி.ராஜலட்சுமி வறுமையின் கோரப்பிடியில் சிக்கினார். திருவையாறு தந்த இசைப்புலமை கைகொடுக்க நாடகத்துறையை நாடினார்.&lt;br /&gt; &lt;br /&gt; டி.பி.ராஜலட்சுமி தமது பதினோராம் வயதில் நாடகக் கம்பெனிகளில் காலடி எடுத்துவைத்தார். நாடக உலகம் இருகரம் நீட்டி அவரை வரவேற்று அரவணைத்துக் கொண்டது. முதலில் அவர் மதுரை சாமண்ணா நாடகக் கம்பெனியில் சேர்ந்தார். சங்கரதாஸ் சுவாமிகளின் பவளக்கொடி நாடகத்தில் பவேந்திரன் பாத்திரத்தில் தம் பதினோராம் வயதில் நடிக்கத் தொடங்கினார் டி.பி.ராஜலட்சுமி. &lt;br /&gt;&lt;br /&gt;இவருக்கு முன் நாடகமேடைகளில் பெண்கள் நடிக்கும் பழக்கம் கிடையாது. ஆண்களே பெண்வேடம் புனைந்து நடிப்பார்கள். முதன்முதலாக நாடகமேடையில் தோன்றி நடித்த பெண் என்ற பெருமைக்குரியரானார் டி.பி.ராஜலட்சுமி. கடல்கடந்த நாடுகளிலும் குறிப்பாக, மலேசியா, இலங்கை முதலான நாடுகளுக்குச் சென்று நாடகமேடைகளில் பாடி, நடித்துப் பெரும்புகழ் பெற்றார். இந்தவகையிலும் இவரே முதல்பெண்மணி என்ற பெருமை பெறுகின்றார்.&lt;br /&gt; &lt;br /&gt; இலங்கை யாழ்ப்பாணத்தில் கோவலன் நாடகத்தில் மாதவி வேடத்தில் டி.பி.ராஜலட்சுமி தோன்றி நடித்த நாடகத்திற்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த மகாத்மா காந்தி அவரின் நடிப்பைப் பாராட்டி ஒரு புலி பொம்மையைப் பரிசளித்தார் என்றும் டி.பி.ராஜலட்சுமி தன்கையில் அணிந்திருந்த தங்க வளையல்களைக் கழற்றி கஸ்தூரிபாய் நிதிக்கென்று வழங்கினார் என்றும் எஸ்.எம். உமர் அவர்கள் தம் ‘கலை உலக சக்ரவர்த்திகள்’ என்ற நூலில் (ப. 434) குறிப்பிடுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt; ஒரு நடிகையாகத் தம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தபோதும் அவர் அத்துடன் நிறைவடைந்து விடவில்லை. பொதுவாழ்வில் நாட்டம் கொண்டவராகவும் சமூக அக்கறை உடையவராகவும் தேச விடுதலைக்குப் பணியாற்றுபவராகவும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டு பணியாற்றியமை மிகச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். &lt;br /&gt;&lt;br /&gt;டி.பி.ராஜலட்சுமி காந்தீயக் கொள்கைகளில் மிகுந்த நாட்டமுடையவராகவும் தேச விடுதலைக்குப் பாடுபடும் காங்கிரஸ் இயக்கக் கொள்கைகளில் தீவிரப் பிடிப்புக் கொண்டவராகவும் இருந்துள்ளார். இவர் நாடகங்களில் நடிக்கும் காலங்களில் நாடகம் முடிந்தவுடன் தேசபக்திப் பாடல்களைப் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றும் இதன் காரணமாகப் பலமுறை சிறைக்குச் சென்றுள்ளார் என்றும் தெரியவருகின்றது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-7362039662916323505?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/7362039662916323505/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/12/blog-post_20.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/7362039662916323505'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/7362039662916323505'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/12/blog-post_20.html' title='சினிமாராணி டி.பி.இராஜலட்சுமி:'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_vmRKnj-PgVg/Sy3pjb6BM0I/AAAAAAAAAKI/s41FW1GOasI/s72-c/T%5B1%5D.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-642665902473505466</id><published>2009-12-06T18:40:00.004+05:30</published><updated>2009-12-06T18:49:19.002+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊடக ஆய்வு : விளம்பரம்'/><title type='text'>விளம்பரங்கள் காட்டும் வாழ்க்கை யாருடைய வாழ்க்கை?</title><content type='html'>&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விளம்பரங்கள் விற்பதும் இலவசமும்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விளம்பரங்களின் முழுமையான அரசியல் அது செய்யும் விளம்பரங்களில் இல்லை. மாறாக விளம்பரங்கள் விற்பனை செய்யும் நுகர்வோர் கலாச்சார மனோநிலையில்தான் உள்ளது. இந்தியா ஒரு விவசாய நாடு. இந்திய மக்கள் தொகையில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். இந்நாட்டில் வறுமைக் கோட்டிற்கும் கீழே வாழும் மக்கள் 30 விழுக்காட்டிற்கும் மேல். இந்தியர்களில் பலருக்கு மூன்றுவேளை உணவு என்பதே பெருங்கனவு. அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், இருப்பிடம், உணவு, உடை போன்றவைகள் இன்னும் இந்தியர்களுக்கு முழுமையாகக் கிடைத்துவிடவில்லை. 130 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியத் திருநாட்டின் யதார்த்த நிலைமை இப்படியிருக்க, நம் ஊடக விளம்பரங்கள் சித்தரித்துக் காட்டும் வாழ்க்கை உண்மையில் யாருடைய வாழ்க்கை?&lt;br /&gt;&lt;br /&gt;விளம்பரங்கள் உருவாக்கும் கனவு வாழ்க்கையும் மேற்கத்திய கருத்தாக்கங்களும், போலியான மதிப்பீடுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இத்தகு புதிய கருத்தாக்கங்களும் மதிப்பீடுகளும் நுகர்வோராகிய நம் மனதில் ஆழப்பதிந்து பல்வேறு உளச் சிக்கல்களுக்கும் வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் நம்மை ஆளாக்குகின்றன. இந்தப் புதிய கருத்தாக்கங்களும் மதிப்பீடுகளும்தாம் விளம்பரங்கள் நமக்கு இலவசமாய் வழங்கியவை.&lt;br /&gt; &lt;br /&gt;இந்த இலவசங்களில் முக்கியமானவை பாலியில் சார்ந்த மதிப்பீடுகள். அழகு, கவர்ச்சி குறித்த புதிய சித்தாந்தங்கள். சிவப்பாயிருப்பதும், ஸ்லிம் என்ற மெல்லிய தேகமும், நீண்ட அடர்த்தியான பட்டுப்போன்ற கூந்தலுமே அழகு. தமிழகத்தில் சிவப்பழகுக் கிரீமைத் தெரிந்துகொள்ளாதவர் அபூர்வம். இந்த அழகுகள் எல்லாம் ஓரிரு நாட்களில் ஒரு பாக்கெட் கிரீம், ஷாம்பு போன்றவைகளால் சாத்தியமாகும் என நம்பவைக்கின்றன விளம்பரங்கள். இத்தகு விளம்பரங்கள் பொருளை மட்டும் விற்கவில்லை. அழகு குறித்த புதிய சித்தாந்தங்களையும் விற்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;முழுக்க முழுக்க உடலுழைப்பு சார்ந்த, அழுக்கும் வியர்வையும் கொண்ட உண்மையான இந்தியக் கிராமியப் பெண்களுக்கும் இவ்வகை விளம்பரங்களுக்கும் உள்ள முரணை உணர்ந்தால் விளம்பரங்களின் அரசியல் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்களின் சாதனையே பெண்களை வசீகரிப்பதில்தான் உள்ளது என்பதாக விளம்பரங்கள் சித்தரிக்கின்றன. குறிப்பிட்ட ஷேவிங் கிரீம், ஜட்டி, வாசனை திரவியங்கள், பற்பசை போன்றவற்றைப் பயன்படுத்தும் ஆடவர்களைப் பெண்கள் மொய்த்துக் கொள்வார்கள், விரும்புவார்கள், உடன்படுவார்கள் என்பதாக விளம்பரங்கள் சொல்கின்றன. ஆண்களின் பார்வையில் உருவாக்கப்படும் இவ்வகை விளம்பரங்கள் பெண்களைக் கொச்சைப் படுத்துவதோடு பாலியல் ஈர்ப்பு குறித்த பிழையான மதிப்பீடுகளையும் நம்மிடம் திணிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;விளம்பரங்கள் பாலியல் ரீதியில் எவ்வளவுதான் புதிய கருத்தாக்கங்களோடும் மேற்கத்திய மதிப்பீடுகளோடும் படைக்கப்பட்டாலும் பெண் குறித்த நமது பழைய சித்தாந்தங்களை விளம்பரங்கள் ஒருபோதும் மாற்றிக் கொண்டதில்லை. நமது விளம்பரங்களில் பெண்கள் எப்போதும் துணிதுவைத்து, சமைத்து, குழந்தைகளைப் பராமரித்து, நாப்கின் தேர்ந்தெடுத்து, அலங்கரித்துக் கொண்டு, கணவன் மெச்ச வாழ்கிறார்கள். ஆணாதிக்கச் சமூகத்தின் பார்வையில் பெண் ஒரு அழகுப்பதுமை, சுகம் தரும் கவர்ச்சிப் பொருள் மற்றொரு கோணத்தில் சேவை செய்யும் அடிமை, பணிப்பெண் என்பதாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. புதிய விளம்பரங்களும் பழைய சித்தாந்தங்களை மீறாமல் கட்டிக் காப்பாற்றுகின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-642665902473505466?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/642665902473505466/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/12/blog-post_06.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/642665902473505466'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/642665902473505466'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/12/blog-post_06.html' title='விளம்பரங்கள் காட்டும் வாழ்க்கை யாருடைய வாழ்க்கை?'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-2892892532189845609</id><published>2009-12-05T08:12:00.002+05:30</published><updated>2009-12-05T08:22:14.947+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊடக ஆய்வு : விளம்பரம்'/><title type='text'>விளம்பரங்கள் எதை விற்கின்றன?</title><content type='html'>&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;இணைப் பேராசிரியர்,&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விளம்பரங்கள் எதை விற்கின்றன? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு விளம்பரத்தையும் தனித்தனியாகப் பார்த்து அவற்றின் செல்வாக்கை, தாக்கங்களைப் புரிந்துகொள்ள முயல்வது ஒருவகை அணுகுமுறை. ஒட்டுமொத்தமாக அனைத்து விளம்பரங்களையும் கூர்ந்து கவனித்து அவைகளைப் புரிந்துகொள்ள முயல்வது மற்றொரு அணுகுமுறை. இவ்விரண்டாம் அணுகுமுறையிலேயே விளம்பரங்களின் முழுமையான அரசியலை விளங்கிக் கொள்ளுதல் சாத்தியம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் தினம் காலையில் ஏதோ ஒரு பிரஷ்ஷால் ஏதோ ஒரு பற்பசை கொண்டு பல் துலக்குகிறோம். ஏன்? எங்கே போயின நம் பல் குச்சிகள்! குளிக்கும்போது தலையைச் சுத்தம் செய்ய ஏதோ ஒரு ஷாம்புவைக் கொண்டு குளிக்கிறோம். ஏன்? எங்கே போயிற்று நம் சீகைக்காய்!. தாகமாயிருக்கிறதா? ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனக் குளிர்பானத்தைக் குடிக்கிறோம். ஏன்? எங்கே போயிற்று நம் நீராகாரமும், இளநீரும்! இப்படியே காப்பி, டீ, பூஸ்ட் இன்னும் எத்தனை எத்தனையோ! இவையெல்லாம் நம் வாழ்வின் அங்கங்களாயினமை எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குறிப்பிட்ட பற்பசையைப் பயன்படுத்தச் சொல்லி விளம்பரப் படுத்தியது விளம்பரம். ஆனால் நமது மரபான பல்துலக்கும் பழக்கத்திலிருந்து நம்மைப் பற்பசைகளுக்கும் பிரஷ்களுக்கும் மாற்றிய மனோநிலையை விற்பனை செய்தவை விளம்பரங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட ஷாம்புவை விளம்பரப்படுத்தியது விளம்பரம். ஆனால் ஏதேனும் ஒரு ஷாம்பு போட்டுத்தான் தலைக்குக் குளிக்க வேண்டும் என்ற மனநிலையை விற்பனை செய்தவை விளம்பரங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் ஒரு குறிப்பிட்ட டீ யைக் குடிக்கச் சொல்லி விளம்பரப்படுத்தியது விளம்பரம். ஆனால் டீயோ, காப்பியோ ஏதோ ஒன்றைக் குடித்தே தீரவேண்டுமென்ற மனநிலையை விற்பனை செய்தவை விளம்பரங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SxnKoAd9mmI/AAAAAAAAAKA/A49kogIF97U/s1600-h/tea.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 209px;" src="http://1.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SxnKoAd9mmI/AAAAAAAAAKA/A49kogIF97U/s320/tea.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5411579215931611746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;மேலே உள்ள விளம்பரம் 1953 ஆம் ஆண்டு கல்கி தீபாவளி மலரில் வெளிவந்தது. சென்ட்ரல் டீ போர்டாரால் வெளியிடப்பட்ட அவ்விளம்பரம் “இரவு பகல் எந்த வேளையிலும், எந்த நிலையிலும் தேனீர் உற்சாகம் அளிக்கிறது” என்ற வாசகத்தோடு தேனீர் குடிக்க ஆலோசனை கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உடல் நலமில்லாத ஒருவரைப் பார்க்கச் செல்லும் பலர் ஹார்லிக்ஸ் வாங்கிச் செல்கின்றனர். ஹார்லிக்ஸ் வாங்கிச் செல்லும்படி பிறரால் அறிவுறுத்தப்படுகின்றனர். நோயாளிக்குப் பிறர் ஹார்லிக்ஸ் குடிக்க ஆலோசனை கூறுகிறார்கள். இதெல்லாம் எப்படிச் சாத்தியமாயிற்று? இனிப்பு கலந்த சோளமாவு, ஊட்டச் சத்துமிக்க பானமானது எப்படி? விளம்பரம் செய்த விந்தை இது. ஆழ்மனம் வரை ஊடுருவிச் சென்று அரியாசனமிட்டு அமர்ந்துகொண்டன விளம்பரங்கள் விற்பனை செய்த கருத்தாக்கங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-2892892532189845609?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/2892892532189845609/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/12/blog-post_05.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/2892892532189845609'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/2892892532189845609'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/12/blog-post_05.html' title='விளம்பரங்கள் எதை விற்கின்றன?'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SxnKoAd9mmI/AAAAAAAAAKA/A49kogIF97U/s72-c/tea.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-1285232176816170051</id><published>2009-12-04T10:18:00.004+05:30</published><updated>2009-12-04T10:26:38.849+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊடக ஆய்வு விளம்பரம்'/><title type='text'>எது நுகர்வுக் கலாச்சாரம்</title><content type='html'>&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எது நுகர்வுக் கலாச்சாரம்:&lt;/strong&gt;&lt;br /&gt; &lt;br /&gt;பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டும் என்ற பெருவிருப்பே நுகர்வுக் கலாச்சாரத்தின் அடையாளம். நமக்கு எது தேவை? எவையெவை தேவையில்லை என்ற தெளிவில்லாமல், விளம்பரம் செய்யப்படும் அனைத்துமே நமக்குத் தேவை என்று எண்ணும் ஆசை மனம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் அனைத்துப் பொருட்களுமே மக்களின் தேவை கருதி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக நினைப்பது சரியல்ல. மாறாக உற்பத்தி செய்யப்பட்டு அங்காடிக்கு வந்துள்ள பொருட்களின் அடிப்படையிலேயே நம்முடைய தேவைகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதுதான் உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;சான்றாக, சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் என்ற அறிமுகத்தோடு பாட்டிலில் அடைத்து ஒரு லிட்டர் 15 ரூபாய் வரை விற்கப்படும் மினரல் வாட்டர். இன்று மினரல் வாட்டர் குடிப்பதே பாதுகாப்பானது, ஆரோக்கியமானது என்பதே பொது நியதி ஆக்கப்பட்டு விட்டது. பாட்டிலில் அடைத்து விற்கப்படும் மினரல் வாட்டர் பாதுகாப்பானதா? ஆரோக்கியமானதா? என்றால் இல்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம். &lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு புறமிருக்கட்டும். மினரல் வாட்டர் பாட்டில்கள் மக்களின் தேவை கருதி உருவாக்கப்பட்டதா? அல்லது உற்பத்தியாகி விற்பனைக்கு வந்தபிறகு நம்முடைய தேவை நிர்ணயிக்க அல்லது நிர்பந்திக்கப்பட்டதா? என்று பார்த்தால் உற்பத்தி, விற்பனை, விளம்பரம் என்ற தொடர்ச்சியிலேயே அவை நம்மீது திணிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. நுகர்வோர் மனதில் தூய்மை, சுகாதாரம், ஆரோக்கியம் என்று கட்டப்பட்ட புனைவுகள் நுகர்வுக் கலாச்சாரத்தின் பண்பு.&lt;br /&gt; &lt;br /&gt;நுகர்வுக் கலாச்சாரத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருளின் தரத்தைவிட அதன் வடிவமைப்பு, பேக்கிங், மிகுத்துச் சொல்லப்படும் வாக்குறுதிகள், விளம்பரப்படுத்தும் பிரபலம் இவைகளே முக்கியத்துவம் பெறுகின்றன. கிரிக்கெட் வீரர்களும் சினிமா நடிகர் நடிகைகளும் தோன்றி விளம்பரம் செய்யும் பொருள்கள் அதிகம் விற்பனைகின்றன. தரமான பொருள்களுக்குத்தான் அவர்கள் விளம்பரம் செய்வார்கள் என்பதா உண்மை? எந்த நிறுவனம் அதிகக் கோடிகளைக் கூலியாகத் தருகிறதோ அந்த நிறுவனப் பொருள்களைத்தானே அவர் விளம்பரம் செய்வார். இதை நாம் தெரிந்திருந்தும் உணராமலிருக்கிறோமே அதுதான் நுகர்வோர் கலாச்சாரத்தின் பண்பு.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தையில் அறிமுகமாகும் புதிய பொருள் எது? எது வாங்கினால் எது இலவசம்? எந்தப் பொருளுக்கு எவ்வளவு தள்ளுபடி? முதலான நுகர்வுக் கலாச்சாரத் தகவல்களை ஊடகங்கள் நம்மீது வாரி இறைக்கின்றன. அந்தத் தகவல்களைச் சுமந்து கொண்டுதான் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் உலகைப் பார்க்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;புதிதாகச் சந்தையில் அறிமுகமாகும் பொருள்கள், முன்பே அறிமுகமான பொருள்களுக்கான புதிய மாடல்கள், மேம்படுத்தப்பட்டதாக வாக்குறுதியளிக்கப் பழைய பொருள்கள் போன்றவை விளம்பரப் படுத்தப்படும்போது நுகர்வோரிடத்தில் ஒருவகைப் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. புதியதை வாங்கும்வரை சமூக அந்தஸ்தில் பிறருக்குப் பின்தங்கி விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சிக்கு நுகர்வோர் ஆளாகிவிடுகின்றனர். பொருள்களை வாங்கும் ஆசையிருந்தும் வாங்க வசதியில்லாதவர்கள் ஒருவிதமான தாழ்வுணர்ச்சிக்கு ஆளாகிறார்கள். தேவை, ஆசை இரண்டும் சமனற்ற முரணிலேயே வாழ்க்கையைப் நிறுத்திவைக்கிறது நுகர்வுக் கலாச்சாரம். உண்மையில் விளம்பரங்கள் முன்னிறுத்தும் மகிழ்ச்சியான குடும்பம் என்பது ஒரு கற்பனையே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-1285232176816170051?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/1285232176816170051/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/12/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/1285232176816170051'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/1285232176816170051'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/12/blog-post.html' title='எது நுகர்வுக் கலாச்சாரம்'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-6504512604402246475</id><published>2009-11-26T15:03:00.006+05:30</published><updated>2009-11-29T14:57:38.892+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வலைப்பதிவு விளக்கம்'/><title type='text'>அட! வலைப்பதிவுக்குள்ள இவ்வளவு இருக்கா? -பகுதி-1</title><content type='html'>&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SxI-WCtpkmI/AAAAAAAAAJ4/iuQyzPVumHY/s1600/blog-sam-8.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 285px;" src="http://2.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SxI-WCtpkmI/AAAAAAAAAJ4/iuQyzPVumHY/s320/blog-sam-8.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5409454650831770210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;strong&gt;வலைப்பதிவுத் தலைப்பு &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(Title): &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வலைப்பதிவுக்கும் ஒரு தலைப்பு உண்டு. இதுவே அவ்வலைப்பதிவின் பெயர். இதழ்கள், செய்தித்தாள்களுக்கு எப்படி ஒரு பெயரைச் சூட்டுகிறோமோ அதுபோல் வலைப்பதிவுக்கு நாம் சூட்டும் பெயர். வலைப்பதிவரின் பெயர், குறியீட்டுப்பெயர், இடுகுறியாக ஒருபெயர், வித்தியாசமான கவரத்தக்க வாசகம் எப்படி வேண்டுமானாலும் வலைப்பதிவுக்குப் பெயர் வைக்கலாம். அந்தப் பெயரே வலைப்பதிவுக்கான அடையாளம் என்பதைக் கவனத்தில் கொண்டு பெயரிடுதல் நலம். மேலே சான்றுக்காக காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள மலையருவி கவிதைகள் என்பது அந்த வலைப்பதிவின் தலைப்பு ஆகும். &lt;br /&gt;&lt;br /&gt;2. &lt;strong&gt;வலைப்பதிவு முகப்பு &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(Description): &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவுத் தலைப்பை அடுத்து, வலைப்பதிவர் தம்மைப் பற்றியோ, தமது வலைப்பதிவின் நோக்கத்தைப் பற்றியோ சுருக்கமாகக் குறிப்பிடும் பகுதி இது. புதிதாகக் குறிப்பிட்ட வலைப்பதிவைப் பார்வையிடும் ஒருவருக்கு வலைப்பதிவை அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த முகப்பு வாசகங்கள் இடம்பெறுதல் வேண்டும். செய்தித்தாள்களில் செய்தித் தலைப்பை அடுத்து இடம்பெறும் முகப்பு (டுநயன) போல சுருங்கிய வடிவில் அமைக்கப்படுவதால் இப்பகுதி வலைப்பதிவின் முகப்பு என்று அழைக்கப்படுகிறது. மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள மலையருவி கவிதைகளுக்கான புதிய மேடை என்பது அந்த வலைப்பதிவின் முகப்பு ஆகும். &lt;br /&gt;&lt;br /&gt;3. &lt;strong&gt;பதிவின் தலைப்பு &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(Title of the Post): &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவில் ஒருவர் பதிக்கும் ஒவ்வொரு பதிவுக்கும் தலைப்பிடுதல் அவசியம். ஒரு பதிவு நாம் வாசிப்பதற்குரியது தானா? என்பதைப் பார்வையாளர் தெரிந்து கொள்ள உதவும் பகுதி இது. வலைப்பதிவுகளில் ஒருவர் படைப்பு முக்கியத்துவம் பெறுவது பதிவுகளுக்கு அவர் இடும் தலைப்பைப் பொறுத்தே அமையும். தலைப்பு, பதிவின் உள்ளடக்கங்களின் சாரமாகவோ, அதையொட்டியோ அமைதல் வேண்டும். தலைப்பில்லாத பதிவுகள் தலையில்லாத உடலுக்குச் சமம். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்… என்பது அந்தப் பதிவின் தலைப்பு ஆகும். பதிவில் இடம்பெற்றுள்ள துளிப்பாக்களைக் குறிக்கும் விதத்தில் துளித் துளியாய் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;4. &lt;strong&gt;பதிவின் உடல்பகுதி &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(Post):&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவில் ஒருவர் எழுதிப் பதிக்கும் உள்ளடக்கமே பதிவு. ஒரு வரிப் பதிவு தொடங்கி நூற்றுக்கணக்கான வரிகள் வரை பதிவின் அளவு இருக்கலாம். பதிவுகளின் அளவு குறித்து எல்லைகள் ஏதுமில்லை. அளவில் சிறிய பதிவுகளுக்குத்தான் வலைப்பதிவுகளில் வாசகர்கள் மிகுதி. பதிவின் உள்ளடக்கங்கள் எழுத்துரைகளாக மட்டுமில்லாமல் வரைபடங்கள், படங்கள், ஒலிகள், சலனப்படங்கள் என்று பல்லூடக உள்ளடக்கங்களாகவும் அமையலாம். பதிவுகளில் மீஉரை (Hyper Text) வசதிகளையும் உருவாக்கலாம். கடைசியாகப் பதித்த பதிவே முதலில் இடம்பெறும் வகையில் வலைப்பதிவுகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt; பதிவுகள் கவிதை, கதை, கட்டுரை போன்ற படைப்பாக்கங்களாக, கருத்துரைகளாக, துணுக்குகளாக எப்படி வேண்டுமானாலும் அமையலாம். ஒரு பதிவின் மீது, தேர்ந்தெடுத்தல், வடிகட்டல், திருத்துதல், நீக்குதல், சான்றளித்தல் என்று அதிகாரம் செலுத்த யாருமற்ற புதுமையைச் சாத்தியமாக்கும் இடம் பதிவின் உடல்பகுதியே. தரப்படுத்தலுக்கும் தாமதத்திற்கும் ஆளாகாமல் உடனுக்குடன் வாசகர்களைச் சென்றடையும் பதிவுகளே வலைப்பதிவுகளின் தலையாய பகுதி. மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்… என்ற தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ள நான்கு துளிப்பாக்களும் தான் பதிவின் உடல்பகுதி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-6504512604402246475?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/6504512604402246475/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/11/1.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/6504512604402246475'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/6504512604402246475'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/11/1.html' title='அட! வலைப்பதிவுக்குள்ள இவ்வளவு இருக்கா? -பகுதி-1'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SxI-WCtpkmI/AAAAAAAAAJ4/iuQyzPVumHY/s72-c/blog-sam-8.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-6740732708586256889</id><published>2009-11-26T14:43:00.005+05:30</published><updated>2009-11-26T15:16:26.684+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வலைப்பதிவு விளக்கம்'/><title type='text'>அட! வலைப்பதிவுக்குள்ளே இவ்வளவு இருக்கா? -பகுதி-2</title><content type='html'>&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_vmRKnj-PgVg/Sw5LJ4zgAhI/AAAAAAAAAJo/QFQYeLFGHTM/s1600/blog-pic.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 278px;" src="http://4.bp.blogspot.com/_vmRKnj-PgVg/Sw5LJ4zgAhI/AAAAAAAAAJo/QFQYeLFGHTM/s320/blog-pic.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5408342835757842962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5. &lt;strong&gt;பதித்த நாள், நேரம், பதித்தவர் பெயர் முத்திரைகள் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(Date, Time, Author Stamp)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில வலைப்பதிவுகள் தனிநபர் வலைப்பதிவுகளாக இல்லாமல் குழு வலைப்பதிவுகளாக இருக்கும். அத்தகு வலைப்பதிவுகளில் எழுதியவர் பெயர் முத்திரை இன்றியமையாதது. தனிநபர் வலைப்பதிவுகளில் இந்த முத்திரை அவசியமில்லை என்றாலும் எல்லா வலைப்பதிவுகளும் இந்த வசதியைப் பெற்றுள்ளன. பதிவுகள் பதிவு செய்யப்பட்ட நாளும், நேரமும் முக்கியமான தகவல்கள் என்பதால் பதிவுகளுக்கு மேலே பதிவுகள், பதிவுசெய்யப்பட்ட நாள், கிழமை பற்றிய முத்திரையும் பதிவுகளுக்குக் கீழே பதிவுசெய்யப்பட்ட நேரமும் வலைப்பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரே நாளில் வலைப்பதிவுகள் பலமுறை இற்றைப் படுத்தப்படும் (up-to-date) போது அல்லது பலமுறைப் பதிவுகளைப் பதிக்கும் போது நேர முத்திரை முக்கியத்துவம் பெறும். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் பதிவின் மேலே, SATURDAY, NOVEMBER, 17, 2007 என்று பதிவின் நாள் முத்திரையும் பதிவின் கீழே, Posted by முனைவர் நா.இளங்கோ at 6:55 P.M என்று பதித்தவர் பெயர் மற்றும் நேர முத்திரையும் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;6. &lt;strong&gt;பின்னூட்டங்கள் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(Comments): &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவின் முக்கிய அம்சமே வாசகர் ஊடாடுவதற்கான வசதியினைப் பெற்றிருப்பதுதான். வலைப்பதிவின் இந்த வாசகர் ஊடாட்டமே பின்னூட்டம் (Feed- back) என்றழைக்கப்படுகிறது. பதிவை வாசிப்பவர் உடனுக்குடன் தம் கருத்தைப் பதிக்கும் வசதியே இது. வலைப்பதிவுகளில் ஒவ்வொரு பதிவின் கீழும் Comments என்ற பகுதி இடம்பெற்றிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;அவ்விடத்தில் இதுவரை எத்தனைக் கருத்துக்கள் பின்னூட்டங்களாக இடப்பட்டுள்ளன என்ற விபரத்துடன் கூடிய சுட்டி ஒன்று இடம்பெற்றிருக்கும். அந்தச் சுட்டியைச் சொடுக்கினால் பின்னூட்டங்களைக் காணவும் மேலும் பின்னூட்டங்களைப் பதிவுசெய்யவும் வாய்ப்பளிக்கும் புதிய சன்னல் திறக்கப்படும். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்… என்ற பதிவின் கீழ் 0 Comments என்ற சுட்டி இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;7. &lt;strong&gt;சேமிப்பகம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(Archives): &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; வலைப்பதிவுகள் தொடர்ச்சியாக இற்றைப் படுத்தப்படும் வசதியினைப் பெற்றிருப்பதால் வலைப்பதிவில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பதிவுகளையும் ஒரே பக்கத்தில் இடம்பெறச் செய்வது சாத்தியமில்லை. முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ள பதிவுகள் தவிர்த்த முந்தைய பதிவுகள் வார வாரியாகவோ, மாத வாரியாகவோ தனியே சேமிப்பகம் என்ற பகுதியில் சேமித்து வைக்கப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவுகளில் Archives என்ற பெயரில் இடம்பெறும் இப்பகுதி தனி வலைப்பக்கங்களாக வடிவமைக்கப்பட்டு அவற்றைத் திறப்பதற்கான மீஉரை சுட்டியுடன் அமைக்கப்பட்டிருக்கும். சேமிப்பகங்களைப் பராமரித்துப் பட்டியலிடும் பணிகளை வலைப்பதிவுச் சேவையை வழங்கும் வலைத்தளங்களே பார்த்துக்கொள்ளும். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்… என்ற பதிவுக்கு இடப்பக்கம் கீழே Blog Archive  என்ற தலைப்பில் முந்தைய பதிவுகள் 2007 (11)&gt; November (7) என்று பட்டியலிடப்பட்டிருப்பதைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;8. &lt;strong&gt;இணைப்புகள்&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;strong&gt;(Links):&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வலைப்பதிவரும் தங்களுக்கு விருப்பமான வலைத்தளங்களுக்கோ, வலைப்பதிவுகளுக்கோ இணைப்பு கொடுப்பது வழக்கம். வலைப்பதிவுத் திரட்டிகள், மென்பொருள் வழங்கும் தளங்கள், எழுத்துருக்கள் கிடைக்குமிடம், இணைய இதழ்கள் முதலான பல இணைப்புகளை வழங்க வலைப்பதிவுகளில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்புகள் வழங்குதல் என்பது முழுக்க முழுக்க வலைப்பதிவரின் விருப்பத்தைச் சார்ந்தது. இத்தகு இணைப்புகளுக்கான சுட்டிகளைச் சொடுக்கிப் புதிய சன்னலில் இணைப்புக்குரிய வலைத்தளங்களையோ வலைப்பதிவுகளையோ நாம் பார்வையிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;9. &lt;strong&gt;வலைப்பதிவுகளில் பக்கக் கூறுகள் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(Page Elements): &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; வலைப்பதிவுகளில் இடப்பெறும் பதிவுகளுக்கு இடப்பக்கத்திலோ வலப்பக்கத்திலோ வார்ப்புருவின் (Template)  வடிவமைப்புக்கு ஏற்பச் சில பக்கக் கூறுகளை இணைக்க முடியும். பக்கக் கூறுகளைப் பயன்படுத்தி வலைப்பதிவரின் புகைப்படம், வலைப்பதிவர் பற்றிய குறிப்புகள் போன்றவற்றை வலைப்பதிவுகளில் இணைக்கலாம். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்… என்ற பதிவுக்கு இடப்பக்கம் மேலே எனது புகைப்படம் என்ற தலைப்பில் வலைப்பதிவரின் புகைப்படமும் About Me என்ற தலைப்பில் வலைப்பதிவர் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-6740732708586256889?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/6740732708586256889/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/11/2.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/6740732708586256889'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/6740732708586256889'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/11/2.html' title='அட! வலைப்பதிவுக்குள்ளே இவ்வளவு இருக்கா? -பகுதி-2'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_vmRKnj-PgVg/Sw5LJ4zgAhI/AAAAAAAAAJo/QFQYeLFGHTM/s72-c/blog-pic.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-3350494404614817982</id><published>2009-11-11T07:12:00.003+05:30</published><updated>2009-11-11T07:32:23.619+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்பட மொழி ஆய்வு'/><title type='text'>காலக் குறியீடுகள் -திரைப்பட மொழி ஆய்வு</title><content type='html'>&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திரைப்படங்களில் காலக் குறியீடு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படத்தில் ஒரு திரைக்கதை எடுத்துக் கொள்கிற கதையின் முழுமையான கால அளவு என்பது வரையறுக்க முடியாதது. அது ஒரு மணிநேரத்தில் நடந்த கதையாக இருக்கலாம் அல்லது ஓராயிரம் ஆண்டுகள் நடந்த கதையாக இருக்கலாம். ஆனால் திரைப்படம் ஓடக்கூடிய நேரம் சுமார் இரண்டரை (2½) மணி நேரம்தான். திரைப்படத்தில் காட்சி நடக்கும் நேரம் என்பது உண்மையான நேரத்திற்குச் சமமானதாக இருக்கும். இது திரைப்படத்தின் பொதுவிதி. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டரை மணி நேரத் திரைப்படத்தில்தான் பல நூறு ஆண்டுக் காலத்தைப் பார்க்கிறோம். அதாவது கதை நிகழ்கின்ற ஆயிரக்கணக்கான மணி நேரத்தை நாம் வெறும் இரண்டரை மணி நேரத்தில் மட்டுமே பார்க்கிறோம். மீதி உள்ள நேரங்கள் காட்சிகளுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் இருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்குமான மாற்றத்தின்போது உள்ள கால இடைவெளி ஒரு நொடியின் மிகச்சிறிய பகுதி, இந்தக் கால இடைவெளியில்தான் திரைக்கதை சில நாட்களையோ, மாதங்களையோ, சில ஆண்டுகளையோ கடந்து விடுகின்றது. இந்த இடைவெளிகளின் கால ஓட்டத்தைப் பார்வையாளனுக்குச் சரியான அளவில் புரிய வைப்பதில்தான் திரைப்பட மொழி முழுமை பெறுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படத்தில் காலத்தைப் பொறுத்தவரை இரண்டு கூறுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். 1. காட்சி நடக்கும் நேரம். 2. காட்சிகளுக்கு இடையிலான நேரம். &lt;br /&gt;&lt;br /&gt;முதல் கூறாகிய காட்சி நடக்கும் நேரங்களைக் கணக்கிட்டால் திரைப்படம் ஓடக்கூடிய மொத்த நேரத்தைப் பெறலாம். இரண்டாம் கூறாகிய காட்சிகளுக்கு இடையிலான நேரத்தை/ காலத்தை மொத்தமாகக் கணக்கிட்டு முதல் கூறாகிய காட்சி நடக்கும் நேரத்தோடு கூட்டினால் திரைக்கதை நிகழக்கூடிய முழுமையான காலஅளவைக் கண்டுபிடிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காட்சிகள் நிகழும் மொத்த நேரம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;+&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காட்சிகளுக்கு இடையிலான மொத்த நேரம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;=&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திரைக்கதையின் முழுமையான கால அளவு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படத்தில் காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து வருகின்றன. காட்சிகளுக்கான காலமும் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது. முதல் காட்சியைத் தொடர்ந்து இரண்டாம் காட்சி, முதல்காட்சி நடைபெற்ற காலத்தைத் தாண்டி இரண்டாம் காட்சி நடைபெறும் காலம். முதல், இரண்டாம் காட்சிகளில் காலம் இடையீடு இன்றித் தொடர்வதில்லை. அப்படித் தொடர்ந்தால் வேறு வேறு காட்சிகளாக அவைகள் சித்தரிக்கப்படுவது பொருத்தமில்லை. காட்சிகள் வேறுபடுவதால் காட்சிகளுக்கிடையே கடந்துசென்ற காலத்தின் அளவைத் தெளிவுபடுத்துவதே காலக் குறியீடுகளின் வேலை.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;திரைக்கதையில் கால நகர்வு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படத்தில் இரண்டு காட்சிகளுக்கிடையே காலம் கடந்திருப்பதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்த வேண்டுமெனில் அந்த இரண்டு காட்சிகளுக்கிடையே வேறொரு இடத்தில் நிகழ்கின்ற புதிய காட்சி ஒன்றைப் புகுத்த வேண்டும். இந்தப் புதிய காட்சிக் குறுக்கீடு திட்டமிட்டுத் திரைக்கதை ஆசிரியரால் புகுத்தப்படுவது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் திரைப்படங்களில் இந்தவகை இடையீட்டுக் காட்சிக்குப் பெரிதும் பயன்படுத்தப்படும் உத்தி நகைச்சுவைக் காட்சிகளை இணைத்தலே. திரைப்படத்தின் பிரதான திரைக்கதைக்கு இணையாகத் தனித்ததொரு துணைக்கதை (Comedy Track) என்ற போக்கில் இத்தகு காட்சிகள் இணைக்கப்படும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-3350494404614817982?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/3350494404614817982/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/11/blog-post_11.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/3350494404614817982'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/3350494404614817982'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/11/blog-post_11.html' title='காலக் குறியீடுகள் -திரைப்பட மொழி ஆய்வு'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-6071768148418134343</id><published>2009-11-06T08:11:00.004+05:30</published><updated>2009-11-06T08:32:53.817+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வலைப்பதிவு ஆய்வு'/><title type='text'>வலைப்பதிவு சில கூடுதல் தகவல்கள்</title><content type='html'>&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வலைப்பதிவு சேவை வழங்குவோர்: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலைத்தளங்கள் போல் அல்லாமல் வலைப்பதிவு சேவைகளைப் பல இணையதளங்கள் இலவசமாக வழங்குகின்றன. வலைப்பதிவு சேவையை வழங்கும் சில இணையதளங்கள்:&lt;br /&gt; &lt;strong&gt;1. http://www.blogger.com &lt;/strong&gt; &lt;br /&gt; &lt;strong&gt;2. http://www.blogdrive.com&lt;/strong&gt; &lt;br /&gt; &lt;strong&gt;3. http://www.livejournal.com&lt;/strong&gt; &lt;br /&gt; &lt;strong&gt;4. http://blogs.sify.com&lt;/strong&gt; &lt;br /&gt; &lt;strong&gt;5. http://wordpress.com&lt;/strong&gt; &lt;br /&gt; &lt;strong&gt;6. http://www.blogsome.com&lt;/strong&gt; &lt;br /&gt; &lt;strong&gt;7. http://www.rediffblogs.com&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இணைய தளங்கள் மட்டுமன்றி வேறு பல இணையதளங்களும் வலைப்பதிவு சேவையை வழங்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Blogger.com&lt;/strong&gt;&lt;br /&gt;வலைப்பதிவுச் சேவைகளிலேயே மிகவும் விரும்பப்படுவது இந்த ப்ளாக்கர்.காம் சேவைதான். எளிமையான அமைப்புகளுடனும் அதேசமயம் தேவையான பல வசதிகளுடன் இந்தச் சேவை வழங்கப்படுகிறது. கூகிள் (google.com)  தேடுபொறி நிறுவனம் வழங்கும் இந்த &lt;strong&gt;ப்ளாக்கர். காம் &lt;/strong&gt;மிகுந்த நம்பகத்தன்மை உடையது என்று தமிழ் வலைப்பதிவாளர்கள் பலராலும் பாராட்டப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வலைப்பதிவின் அமைப்பு:&lt;/strong&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வலைப்பதிவும் சில அடிப்படை உறுப்புகள் அல்லது பகுதிகளைப் பெற்றிருக்கும். அவை பின்வருமாறு:&lt;br /&gt;&lt;strong&gt;1. வலைப்பதிவுத் தலைப்பு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2. வலைப்பதிவு முகப்பு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3. பதிவின் தலைப்பு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;4. பதிவின் உடல்பகுதி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5. பதித்த நாள், நேரம், பதித்தவர் பெயர் முத்திரைகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;6. பின்னூட்டங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;7. சேமிப்பகம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;8. இணைப்புகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலே குறிப்பிடப்பட்ட எட்டுப் பகுதிகளையும் வலைப்பதிவின் அடிப்படைப் பகுதிகள் அல்லது வலைப்பதிவின் உறுப்புகள் என்று குறிப்பிடலாம். இவை தவிர்ந்த வேறுசில இணைப்புகளும் பகுதிகளும் அரிதாகப் பதிவுகளில் இடம்பெறுவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவின் ஒவ்வொரு அங்கம் குறித்தும் தனித்தனியாக விரிவான விளக்கம் தொடரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-6071768148418134343?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/6071768148418134343/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/11/blog-post_06.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/6071768148418134343'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/6071768148418134343'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/11/blog-post_06.html' title='வலைப்பதிவு சில கூடுதல் தகவல்கள்'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-1795113965006384901</id><published>2009-11-02T18:12:00.004+05:30</published><updated>2009-11-02T18:22:16.536+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வலைப்பதிவு ஆய்வு'/><title type='text'>வலைத்தளங்கள் - வலைப்பதிவுகள் ஒப்பீடு</title><content type='html'>&lt;strong&gt;வலைத்தளங்கள் - வலைப்பதிவுகள் ஒப்பீடு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தின் மிக முக்கிய அங்கமான வலைத்தளங்களிலிருந்து வலைப்பதிவுகள் வேறுபட்டவை. வலைத்தளங்கள் அமைத்துக்கொள்ள இடம்பிடிப்பது, வடிவமைப்பது போன்ற பணிகளுக்குக் கட்டணம் வசூலிப்பதுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வலைப்பதிவுச் சேவைகள் முற்றிலும் இலவசமானது. வலைத்தளங்களுக்கும் வலைப்பதிவுகளுக்கும் இடையிலான சில வேற்றுமைகளைப் பின்வரும் பட்டியல் தெளிவுபடுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வலைத்தளங்கள்:&lt;/strong&gt; வலைத்தளங்களை உருவாக்க html அறிவு ஓரளவேனும் தேவை.&lt;br /&gt;&lt;strong&gt;வலைப்பதிவுகள்:&lt;/strong&gt; வலைப்பதிவுகளை உருவாக்க html அறிவு தேவையில்லை. வலைப்பக்கங்களை உருவாக்குவது மிகவும் எளிது. ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் படிவங்களில் உள்ளடக்கத்தை உருவாக்கி சமர்ப்பித்துவிட்டால் தானாக வலைப்பதிவு ஒன்று உருவாக்கப்பட்டுவிடும். வார்ப்புருக்கள் (Templates)  இந்தப் பணியைச் செய்து முடிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வலைத்தளங்கள்:&lt;/strong&gt; வலைத்தளத்திற்கான உள்ளடக்கங்களை உருவாக்கி      எழுதுபவர் ஒருவராகவும், html  கொண்டு அத்தகவல்களை உள்ளிட்டு வடிவமைப்பவர் வேறு ஒருவராகவும் இருப்பர்.&lt;br /&gt;&lt;strong&gt;வலைப்பதிவுகள்:&lt;/strong&gt; வலைப்பதிவுக்கான உள்ளடக்கங்களை எழுதுபவரே உள்ளீடு செய்பவராகவும் இருப்பார். எந்தத் தனிப்பட்ட மென்பொருளும் தேவையில்லை. வலைப்பதிவு சேவையை வழங்குபவரே இதற்கான அனைத்து வசதிகளையும் உருவாக்கி வைத்திருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வலைத்தளங்கள்: &lt;/strong&gt;வலைத்தளங்கள் அடிக்கடிப் புதுப்பிக்கப் படுவதில்லை. சில தளங்கள் மட்டுமே அத்தகைய வசதியைப் பெற்றிருக்கும்.&lt;br /&gt;&lt;strong&gt;வலைப்பதிவுகள்: &lt;/strong&gt;வலைப்பதிவுகள் அன்றாடம் புதுப்பிக்கப்பெறும். தேவைப்பட்டால் ஒருநாளில் பலமுறைகூட புதுப்பிக்கப்பெறும். எப்பொழுதாவது ஒருமுறை புதுப்பிக்கப்படும் பதிவுகளும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வலைத்தளங்கள்: &lt;/strong&gt;வலைத்தளங்களில் பெரும்பாலும் கருத்துப்பரிமாற்ற வசதி இருப்பதில்லை. மின்னஞ்சல் வழிப் பின்னூட்டம் சில தளங்களில் உண்டு. &lt;br /&gt;&lt;strong&gt;வலைப்பதிவுகள்: &lt;/strong&gt;வாசகர்கள் உடனுக்குடன் தமது கருத்துக்களை வலைப்பதிவிலேயே பதிவுசெய்யும் வசதி உண்டு. வாசகர் பின்னூட்டங்கள் ஒரு விவாதம் போலத் தொடரவும் பதிவுகளில் வாய்ப்புண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே பட்டியலிடப்பட்ட வேறுபாடுகள் மட்டுமின்றி வலைப்பதிவுகளுக்கென்றே சில தனித்த வசதிகளும் இணையத்தில் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவுகளின் இற்றைப்படுத்தல்கள் உடனுக்குடன் செய்தியோடைகள் வழியாக அனுப்பப்படும். இவ்வசதியைப் பயன்படுத்தி வாசகர்கள் தமக்குப் பிடித்த வலைப்பதிவுகளின் செய்தியோடைகளைத் தத்தமது கணினிகளில் அதற்கான மென்பொருட்களின் உதவியுடன் இணைத்துக் கொண்டு, வலைப்பதிவுகளுக்குச் செல்லாமலேயே இற்றைப்படுத்தல்களைக் கணினியில் பெற்றுக்கொள்ளலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-1795113965006384901?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/1795113965006384901/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/11/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/1795113965006384901'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/1795113965006384901'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/11/blog-post.html' title='வலைத்தளங்கள் - வலைப்பதிவுகள் ஒப்பீடு'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-9084413437827418654</id><published>2009-10-31T14:48:00.004+05:30</published><updated>2009-10-31T14:59:58.253+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வலைப்பதிவு விளக்கம்'/><title type='text'>அட! வலைப்பதிவுன்னா இவ்வளவுதானா?</title><content type='html'>&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவு: தம் படைப்புகளைத் தாமே இணையத்தில் பதிப்பிக்கும் வசதி. ஆங்கிலத்தில் இதனை Blogging என்பர். தமிழில் இது வலைப்பதிவு எனப்படும். இதனை வலைப்பூக்கள் என்றும் சிலர் வழங்குவர். ஒருவர் தம் பெயரில் ஒரு வலைப்பதிவை உருவாக்கத் தேவைப்படுவன, கொஞ்சம் கணினி அறிவு, இணையத் தொடர்புள்ள கணினி இவை இரண்டு மட்டுமே. &lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவுக்குப் பொருள் செலவு ஏதும் கிடையாது. இணையத்தில் இந்தச் சேவை இலவசமாகவே வழங்கப்படுகிறது. யுனிகோட் குறிமுறையைப் பயன்படுத்தித் தமிழிலேயே ஒருவர் தம்முடைய படைப்புகளைப் பதிப்பிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவுகளை வேறுவிதமாகவும் விளக்கலாம். அதாவது இணையத்தின் வழி ஒரு தனிநபர் உருவாக்கும் இதழ் அல்லது நாட்குறிப்பு. இந்த நாட்குறிப்பு அனைவரும் படிப்பதற்கானது.&lt;br /&gt; &lt;br /&gt; தினமும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வலைப்பதிவுகளில் பல்வேறு பதிவுகளைப் பதித்து வருகின்றார்கள். இதில் பலர் கணிப்பொறி, இணையத் தொழில் நுட்பம் அறியாதவர்கள். வலைப்பதிவாளர்களுக்குப் பயன்படும் வகையில் பல்வேறு புதிய எளிய தொழில்நுட்பங்கள் தினந்தோறும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. பெரும்பாலும் இத்தகு தொழில்நுட்ப உதவிகள் அனைவருக்கும் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. கணினி பற்றிச் சிறிதளவே தெரிந்தவர்கள் கூட, தங்களுக்கென்றுச் சொந்தமான வலைப்பதிவினை உடனே உருவாக்கிக் கொள்ள முடியும்.&lt;br /&gt; &lt;br /&gt;அநேகமாக ஒவ்வொரு வலைப்பதிவும் வாசகர்களை இலக்காகக் கொண்டே எழுதப்படுகின்றன. ஒவ்வொரு வலைப்பதிவுக்கும் தனித்ததொரு வாசகர் வட்டம் அமைந்து  விடுவதுண்டு. இக்காரணம் பற்றியே வலைப்பதிவுகள் வாசகர்கள் கருத்துரையாடுதற்கு ஏற்றார்போல் அமைக்கப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;பதிவுகளைப் படித்த வாசகர்கள் அதற்கான தமது எதிர்வினையை, கருத்துக்களைப் பின்னூட்டங்களாக உடனடியாக அவ் வலைப்பதிவில் பதிவு செய்துகொள்ளக் கூடிய வசதி வழங்கப்பட்டிருக்கும். பின்னூட்டங்களையும் அடுத்து வரும் வாசகர்கள் பார்க்க வலைப்பதிவுகளில் வாய்ப்புண்டு. தேவையேற்படும் போது பின்னூட்டம், பின்னூட்டங்களுக்குப் பின்னூட்டம் என்று சங்கிலித் தொடர்போல் பதிவு தொடரந்து சென்றுகொண்டே யிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தகவலின் இடையிடையே படமோ, ஒலியோ, சலனப்படமோ எது தேவையோ அதனை இணைத்துத் தரும் பல்லூடகத் தகவல் முறை வலைப்பதிவுகளில் சாத்தியம். அச்சு ஊடகங்களில் எழுத்தோடு படங்களை மட்டுமே இணைக்க முடியும்.&lt;br /&gt; &lt;br /&gt;வலைப்பதிவில் நாம் இதற்குமுன் எழுதிய அனைத்துத் தகவல்களும் தனியே வார வாரியாகவோ, மாத வாரியாகவோ வகைப்படுத்தி சேமிப்பகம் (Archive)பகுதியில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும். தேவைப்படுவோர் பழைய தகவல்களையும் இந்தப் பகுதியில் இருந்து படித்துக் கொள்ளலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-9084413437827418654?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/9084413437827418654/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/10/blog-post_31.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/9084413437827418654'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/9084413437827418654'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/10/blog-post_31.html' title='அட! வலைப்பதிவுன்னா இவ்வளவுதானா?'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-2096963472848940244</id><published>2009-10-27T14:25:00.002+05:30</published><updated>2009-10-27T14:31:16.210+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வலைப்பதிவு ஆய்வு'/><title type='text'>எதைச் சாதிக்க இந்த வலைப்பதிவுகள்?</title><content type='html'>&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;இணைப்பேராசிரியர்,&lt;br /&gt;பட்டமேற்படிப்பு மையம்&lt;br /&gt;புதுச்சேரி-8.&lt;br /&gt;&lt;br /&gt;தொடக்கக் காலத்தில் தமிழகத்தைப் பொறுத்த மட்டில் அச்சு இயந்திரங்களாகிய கருவிகளும் அச்சிட வேண்டிய தகவல்களை எழுதித் தர உதவும் கல்வியும் உயர் வர்க்கத்தினரிடம் மட்டுமே இருந்தன. எனவே தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சு ஊடகங்களின் வழி கருத்தியல் அதிகாரம் செலுத்துவோராக உயர் சாதியினராகவும் உயர் வர்க்கத்தினராகவும் இருந்த ஒரு சிறுபான்மைக் கூட்டத்தினரே இருந்தனர்.&lt;br /&gt; &lt;br /&gt;ஆங்கிலேயர் தந்த கல்வியும் ஆங்கிலவழிக் கல்வியும் இருபதாம் நூற்றாண்டில் பரவலான போது எழுத்தறிவும் எழுதும் மற்றும் வாசிக்கும் பழக்கமும் அதிகமானது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கல்விஅறிவு பெறத்தொடங்கி அச்சு ஊடகத் தகவல்களை வாசிக்கத் தொடங்கிய பிறகுதான் அச்சு ஊடகங்களின் அதிகாரம் கவனம் பெறத் தொடங்கியது. அச்சு ஊடக உரிமையாளர்கள் மற்றும் இதழாசிரியர்களின் அதிகாரம் படைப்பையும் வாசகனையும் வெகுவாகப் பாதிக்கும் தன்மை வெளிச்சத்துக்கு வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;வெற்று இலக்கியங்களும் துணுக்குத் தோரணங்களும் அதிகாரத்தை இனங்காட்டாத மலிவான ரசனைப் போக்கும் எழுத்துக்களாக்கப்பட்டன. வெகுஜனங்கள் மத்தியில் எது அதிக விலைபோகுமோ அதனையே அச்சு இயந்திரங்கள் கக்கத் தொடங்கின. அச்சு ஊடகங்கள் வணிகமயமாயின. விலைபோகும் சரக்குகள் என எழுத்துக்கள் முத்திரை குத்தப்பட்டன. தீவிரமான எழுத்துக்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் எழுத்துக்களும் விலைபோகாச் சரக்குகள் ஆக்கப்பட்டன.&lt;br /&gt; &lt;br /&gt;இத்தகு சூழலில்தான் சிறுபத்திரிக்கைகள் தோற்றம் பெற்றன. வணிகமயம் பின்னுக்குத் தள்ளப்பட்டு தீவிரமான எழுத்துக்களும் சோதனை முயற்சிகளும் விளிம்புநிலை மக்கள் ஆக்கங்களும் அச்சில் இடம்பிடித்தன. சிறுபத்திரிக்கைகளில் அதிகாரம் இடம்பெயர்ந்தது. ஊடக முதலாளிகளின் இடத்தைக் குழுவும் குழுவாதங்களும் பிடித்தன. சிறுபத்திரிக்கைகள் கருத்து ரீதியான அதிகாரத்தைப் படைப்பாளிகளிடத்தும் வாசகர்களிடத்தும் செலுத்தின. அவை அறிவுஜீவிகளின் தன்முனைப்பு மோதல் களங்களாயின. தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வதும் பிறரை மட்டம் தட்டுவதுமே படைப்புகளில் மேலோங்கின. &lt;br /&gt;&lt;br /&gt;கணிப்பொறி சார்ந்த D.T.P. தொழில்நுட்பத்தின் வருகை ஆளுக்கொரு இதழ், ஆளுக்கொரு குழு என்ற போக்குகளுக்குத் துணைசெய்தது. அச்சு ஊடகங்களின் அதிகாரம் தொடர்கதையானது.புதிதாய் வருகிற படைப்பாளிகளுக்கு அவ்வளவு சுலபத்தில் ஊடகங்கள் இடமளித்து விடுவதில்லை. ஊடகங்கள் பிரபலங்களை வைத்துக் காசு பார்க்கும் வணிக நிறுவனங்களாக மாறிப் போயின. &lt;br /&gt;&lt;br /&gt;புதியவர் எழுத்துக்களின் மீது குழுவாதம், மதம், சாதி, கட்சி, இயக்கம், சித்தாந்தம் முதலான பலவும் அதிகாரம் செலுத்தின. ஒருவர் எழுத்தின் மீது தேர்ந்தெடுத்தல், வடிகட்டல், திருத்துதல், நீக்குதல், சான்றளித்தல் என்று அதிகாரம் செலுத்த பிறர் யார்? அந்த அதிகாரத்தை அவருக்குக் கொடுத்தது யார்? அவருக்கு என்ன தகுதி? என்ற விடை தெரியாத வினாக்கள் பலப்பல. இத்தகு ஊடக அதிகாரங்களை உடைத்தெரியும் புதிய படைப்புலக வடிவம்தான் வலைப்பதிவுகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-2096963472848940244?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/2096963472848940244/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/10/blog-post_27.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/2096963472848940244'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/2096963472848940244'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/10/blog-post_27.html' title='எதைச் சாதிக்க இந்த வலைப்பதிவுகள்?'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-6618688248446111399</id><published>2009-10-23T22:35:00.005+05:30</published><updated>2009-10-23T22:43:47.465+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊடக மொழி ஆய்வு'/><title type='text'>ஊடகங்கள் சொல்லும் கதை</title><content type='html'>&lt;strong&gt;ஊடகங்கள் சொல்லும் கதை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;இணைப் பேராசிரியர்,&lt;br /&gt;பட்டமேற்படிப்பு மையம்&lt;br /&gt;புதுச்சேரி-8.&lt;br /&gt;&lt;br /&gt;கதையானது மனித வாழ்க்கையின் ஆரம்பக் காலத்திலேயே தோன்றிவிட்டது என்பதனைத் தமிழ்க் கலைக்களஞ்சியம் ‘வேட்டையாடச் சென்று திரும்பிய மனிதன் தனது அனுபவத்தைப் பிறருக்குக் கூற முற்பட்ட அன்றே கதை தோன்றிவிட்டது’ எனக் குறிப்பிடுகிறது. மனித வாழ்வின் தொடக்கம் முதலே இப்படிக் கதை கேட்டுப் பழக்கப்பட்ட மனிதன் அண்மைக்காலம் வரை தாத்தா பாட்டிகளிடம் கதை கேட்டுக் கேட்டு கதைகளுக்கு அடிமையாகிப் போனான். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இயல்பு மனித மனத்தின் ஆழத்தில் வேரோடி இருப்பதால்தான் கதை சொல்வதை ரசித்த காலம் போய் இப்போதெல்லாம் கதை விடுகிறவர்களுக்கு அடிமையாகிக் கிடக்கிறோம். இன்றைய வேகமான வாழ்க்கைச் சூழலில் கதை சொல்வதும் கேட்பதும் இயலாததாகி இருக்கிறது. ஆனால் மனித மனத்தின் ஆசை? விடுபட்ட அந்த இடத்தை நிரப்புவதற்காக ஊடகங்கள் இப்பொழுது கதை சொல்ல ஆரம்பித்து விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகங்கள் செய்திகளை ஒரு கதையாகத் தருகின்றன. கதை என்கிறபோது பொய் என்ற பொருள் கொள்ளத் தேவையில்லை. நிகழ்வுகளின் / தகவல்களின் பன்முகத் தன்மை மறைக்கப்பட்டு தொடக்கம், வளர்ச்சி, முடிவு என்று நேர்க்கோட்டுப் பார்வையில் கதைகள் வடிவமைக்கப் படுகின்றன. இந்தக் கதையாடலில் பல தகவல்கள் விடுபட்டுப் போவதும் சுவாரஸ்யத்திற்காகப் புதிய புதிய விஷயங்கள் இணைக்கப்படுவதும் தவிர்க்க முடியாததாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில், இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஊடகங்களிடையே இத்தகைய போக்குக் காணப்படுகிறது. செய்தித்தாள்களும் பத்திரிக்கைகளும் இத்தகு கதையாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன. தற்போது தொலைக்காட்சிகளும் விளம்பரங்களும் கதையாடலில் அதிகக் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகக் கதைகள் சில:&lt;br /&gt;&lt;br /&gt;அண்மைக் காலத்து உதாரணங்கள் சிலவற்றின் மூலம் ஊடகங்களின் கதையாடலை விளங்கிக் கொள்ளலாம். கும்பகோணம் பள்ளித் தீவிபத்து, சிவகாசி ஜெயலட்சுமி வழக்கு, கஞ்சா இளம்பெண் ஷெரீனா பானு வழக்கு, செக்ஸ் டாக்டர் பிரகாஷ் விவகாரம், சரவணபவன் அண்ணாச்சி வழக்கு இதுபோன்ற நிகழ்வுகள் ஊடகங்களால் கதையாக்கப் படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகு கதையாடல்களில் செக்ஸ் டாக்டர், கஞ்சா பெண், போலி சாமியார் போன்ற பெயரிடல்கள் கதை அம்சத்திற்குப் பெரிதும் உதவியாய் அமைகின்றன. செய்திகள் ஒவ்வொரு நாளும் புதிய புதிய அதிரடித் தகவல்கள், பகீர் ரிப்போர்ட், திடுக் திருப்பங்கள் போன்றவற்றால் மர்மக் கதைகளைப் போலவும் ஆக்ஷன் கதைகளைப் போலவும் வளர்த்து சொல்லப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகங்களைப் பொறுத்தமட்டில் இவை செய்திகள் மட்டுமல்ல, ஊடகச் செய்திகளைப் பரபரப்புக்கு உள்ளாக்கும் வணிக விஷயம். இது வியாபாரம் சம்பந்தப்பட்டது. இவற்றை வெறும் செய்திகளாக்குவதில் வருவாய் குறைவு. கதையாக்குவது வாசகர்களை / பார்வையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் வியாபார உத்தி. தினம் தினம் புதிய புதிய தலைப்புகளில் இந்தக் கதைகள் சொல்லப்படும். கதையாடலின் முக்கிய நோக்கமே வாசகர்களுக்குச் சுவாரஸ்யத்தை உண்டாக்குவது என்பதுதான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-6618688248446111399?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/6618688248446111399/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/10/blog-post_23.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/6618688248446111399'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/6618688248446111399'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/10/blog-post_23.html' title='ஊடகங்கள் சொல்லும் கதை'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-7133176090415157349</id><published>2009-10-19T22:47:00.002+05:30</published><updated>2009-10-19T22:52:16.669+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்பட ஆய்வு'/><title type='text'>திரைப்படத்தைப் புரிந்துகொள்வது எப்படி?</title><content type='html'>&lt;strong&gt;திரைப்படத்தைப் புரிந்துகொள்வது எப்படி?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;இணைப் பேராசிரியர்&lt;br /&gt;தமிழ்த்துறை&lt;br /&gt;கா.மா.பட்ட மேற்படிப்பு மையம்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருபதாம் நூற்றாண்டின் மிகச் சக்தி வாய்ந்த ஊடகம் திரைப்படம்தான் என்பதில் யாருக்கும் கருத்து வேற்றுமை இருக்க முடியாது. ஏனைய ஊடகங்களைவிட இப்பொழுதுதான் நூறு வயதைக் கடந்திருக்கும் இந்த அறிவியற்கலை சார்ந்த ஊடகத்தின் உடனடித் தாக்கம் வியப்பளிக்கக்கூடியது. &lt;br /&gt;&lt;br /&gt;நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் திரைப்படங்களால் சூழப்பட்ட உலகில் நாம் வாழ்கிறோம் என்பது உண்மை. தினசரிச் செய்தித்தாள்கள், வார மாத இதழ்கள் தொடங்கி, அன்றாடம் நம் கண்களில் படும் சுவரொட்டிகள், பேனர்கள் போன்றவற்றில் நாம் படிப்பது / பார்ப்பது, நம்மைச் சுற்றி வீட்டில், பள்ளி - கல்லூரிகளில், அலுவலகங்களில், பொது இடங்களில் பேசப்படுவது என அனைத்திலும் திரைப்படங்கள் விரவிக் கிடக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இது போதாதென்று நாம் எப்பொழுதும் மூழ்கிக் கிடக்கும் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் திரைப்படங்கள், திரைப்படத் துணுக்குகள், திரைப்படப் பாடல்கள், நடிகர் நடிகையர் பேட்டிகள் என்று திரைப்படம் தொடர்பான தகவல்களே கொட்டிக் கிடக்கின்றன. ஆக நம்மைச் சுற்றியுள்ள காற்று, நீர், வெளி போன்று திரைப்படங்களும் நம்மைச் சூழ்ந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படங்கள் ஒரே சமயத்தில் நமக்குக் கலை அனுபவமாகவும், சூழலாகவும், வியாபாரப் பண்டமாகவும், தகவல்களைச் சொல்லும் தகவல் தொடர்புச் சாதனங்களாகவும் உள்ளன. எனவே ஒரு பொழுதுபோக்குச் சாதனம் என்ற ஒற்றை நேர்க்கோட்டுப் பார்வையோடு திரைப்படங்களை அணுகுவதைவிட, மேலே சொல்லப்பட்ட பன்முகப் பரிமாணங்களைப் புரிந்து கொண்டு அவற்றை அணுகுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். &lt;br /&gt;திரைப்படங்களைப் புரிந்து கொள்ள, பின்வரும் கருத்தாக்கங்களை மனதில் நிறுத்திக்கொள்வது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;1. திரைப்படங்கள் என்பது பிம்பங்கள் ஆட்சி செய்யும் சாம்ராஜ்யம். திரைப்படங்களை அணுகும்போது இந்த பிம்பங்களை அதிகக் கவனத்தோடு பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. திரைப்படம் என்பது முழுக்க முழுக்க உருவாக்கப்பட்ட ஒன்று. நடிகர் நடிகையரின் அங்க அசைவு உட்படக் கட்டிடங்கள், இயற்கைக் காட்சிகள் அனைத்துமே குறிப்பிட்ட திரைப்படத்துக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுக் காட்டப்படுகின்றன. திரைப்படத்தில் தோன்றுவது எதுவுமே தற்செயலானதும் இயல்பானதும் இயற்கையானதுமல்ல.&lt;br /&gt; &lt;br /&gt;3. திரைப்படத்தை ஒலி, ஒளி, காமிரா கோணம் எனும் பல்வேறு வி~யங்களோடு சேர்த்தே பார்க்க வேண்டும். வெறுமனே கதை அல்லது வசனங்கள் என்கிற ரீதியில் திரைப்படம் பார்ப்பதைத் தவிர்த்து விடுங்கள். (சுரேஷ் பால், மீடியா உலகம், ப.185)&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படங்கள் என்பது பிம்பங்களின் தொகுப்பு; காட்டப்படுபவை அனைத்துமே உருவாக்கப்பட்டவை. காமிரா, ஒலி, ஒளி இவைகளால் கட்டமைக்கப்படுவதே திரைப்படத்தின் மொழி என்கின்ற புரிதல்களோடு திரைப்படங்களைப் புரிந்துகொள்ள முயலலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-7133176090415157349?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/7133176090415157349/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/10/blog-post_19.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/7133176090415157349'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/7133176090415157349'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/10/blog-post_19.html' title='திரைப்படத்தைப் புரிந்துகொள்வது எப்படி?'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-8753889020079664488</id><published>2009-10-15T07:22:00.002+05:30</published><updated>2009-10-15T07:29:31.104+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்பட ஆய்வு'/><title type='text'>தமிழ்த் திரைப்படங்களில் கால நகர்வுக் குறியீடுகள்</title><content type='html'>&lt;strong&gt;தமிழ்த் திரைப்படங்களில் கால நகர்வுக் குறியீடுகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;இணைப் பேராசிரியர்&lt;br /&gt;தமிழ்த்துறை&lt;br /&gt;கா.மா.பட்ட மேற்படிப்பு மையம்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt; காலம் என்பது இயக்கத்தில் இருப்பது. கண்ணால் காண முடியாதது. திரைப்படங்களில் இடத்தைச் சித்தரிப்பதைப் போல் அவ்வளவு எளிதாகக் காலத்தைச் சித்தரித்துவிட முடியாது. காட்சியின் தொடக்கத்திலேயே இட மாற்றத்தை பார்வையாளனுக்கு உணர்த்திவிட முடியும். கால மாற்றத்தை / கால நகர்வை வெளிப்படுத்தாமலேயே பார்வையாளன் உணர்வான். ஏனெனில் ஒவ்வொரு செயலுக்கும் நேரம் தேவை. ஒவ்வொரு செயலின் முடிவும் காலம் பயன் படுத்தப்பட்டிருப்பதை அறிவுறுத்துகிறது. திரைப்படத்தில் காட்சிகள் தொடர்ந்து ஆற்றொழுக்கு போல் காண்பிக்கப்பட்டாலும், திரைக்கதை என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்புதான் என்பதை நாம் உணர்தல் வேண்டும். சொல்லப்பட்ட காட்சிகளுக்கிடையே சொல்லப்படாத காட்சிகள் புதைநிலையில் உள்ளன. எனவே காட்சிகளுக்கு இடையே கடந்துபோன காலம், நிமிடங்களா? மணிநேரமா? பொழுதா? நாட்களா? மாதங்களா? ஆண்டுகளா? என்பதைத் திரைப்படம் சொல்லித்தான் ஆகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt; காட்சிகளுக்கு உள்ளேயே ஷாட்களுக்கு இடையே காலம் நகர்கிறபோது, அநேகமாக நிமிடம், மணிநேரம் என்ற அளவில் காலம் கடந்ததைக் கடிகாரத்தின் துணையோடு, அதாவது கடிகார முள் சுழற்சியை டிசால்வ், சூப்பர் இம்போஸ் செய்து காண்பித்துவிடுவார்கள். சான்றாக, நாயகன் கடிதம் எழுதும் நேரம், நாயகி உடை மாற்றிக்கொண்டு வரும் நேரம், நோயாளி மருத்துவருக்காகக் காத்திருக்கும் நேரம் போன்ற கால நகர்வுகள் இவ்வகைக் குறியீடுகளின் வழி பார்வையாளருக்கு உணர்த்தப்படும். அழகன் திரைப்படத்தில் நாயகனும் நாயகியும் தொலைபேசியில் மாலை தொடங்கி இரவு கடந்து மறுநாள் காலை வரை உரையாடும் காட்சியில் கால நகர்வுகள் இயக்குநர் பாலசந்தர் அவர்களால் பல்வேறு குறியீடுகளின் வழியாக காண்பிக்கப்படுவதை இங்கு நினைவில் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; இரண்டு காட்சிகளுக்கிடையே இடையீட்டுக் காட்சியின்றி காலம் நகர்கிற பொழுது அதாவது நாள் அல்லது காலை, மாலை போன்ற பொழுது நகர்கிறபோது இத்தகு காலநகர்வைக் வெளிப்படுத்துவதற்காகத் தமிழ்த் திரைப்படங்களில், விளக்கேற்றப்படுதல் அல்லது விளக்கணைத்தல், சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனம், கோயில் மணியோசை, பாங்கோசை, தேவாலய மணியோசை, பூபாள இசை, சுப்ரபாதம், பறவைகளின் சப்தம், நாள்காட்டியில் நாள்தாள் கிழித்தல் முதலான  காலநகர்வுக் குறியீடுகள் இடம்பெறுவதுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;காட்சிகளுக்கிடையே சில நாட்கள் கடந்துள்ளமையைப் புலப்படுத்த நாள்காட்டியின் நாள்தாள்கள் படபடவெனப் பறந்து ஒரு குறிப்பிட்ட நாளில் நிலைகொள்வதாகக் காண்பிப்பதுண்டு. இயக்குநர் பாலச்சந்தர் தம் சிந்து பைரவி திரைப்படத்தில் கதைநாயகன், கதைநாயகி இருவரும் கோபித்துக் கொண்டு சிலநாட்கள் பேசாமல், சந்திக்காமல் காலம் கடத்துவதை ஒவ்வொரு நாளும் செய்தித்தாள் மற்றும் ஒரு கிழமை இதழ் என இணைத்துப் போடும் ஷாட்களைத் தொடர்ந்து காண்பித்து நாட்களின் நகர்வை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;காட்சிகளுக்கிடையே பல மாதங்கள் கடந்திருப்பதை வெளிப்படுத்த இலையுதிர்ந்த மரத்தைக் காண்பித்து அதே பிரேமில் சூப்பர் இம்போஸில் அந்த மரமே பூத்துக் குலுங்குவதைப்போல் காண்பிப்பதுண்டு. சற்றேறக்குறைய இதே உத்தியில் செடி வளர்வது, கொடி வளர்ந்து பூ பூப்பது போன்ற காலக்குறியீடுகள் தமிழ்த் திரைப்படங்களில் இடம் பெறுவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு காட்சிகளுக்கிடையே பல ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் இத்தகு கால நகர்வைப் பார்வையாளர்களுக்கு விளக்கிக் காட்டச் சுழலும் சக்கரத்தைக் காண்பிப்பதுண்டு. காலச் சக்கரத்தின் சுழற்சியைக் குறிப்பிடும் சக்கரங்களாகக் திரைக்காட்சியில் வண்டிச் சக்கரம், தையல் இயந்திரச் சக்கரம், தொழிற்சாலையின் ஏதேனும் ஒரு இயந்திரச் சக்கரம் முதலான சக்கரங்களில் ஒன்று இடம்பெறுவதுண்டு. ஒரு சில திரைப்படங்களில் கால நகர்வைச் சில நாட்களுக்குப் பின்.., சில ஆண்டுகளுக்குப் பின்.., 20 வருடங்களுக்குப் பிறகு.. என எழுத்தில் எழுதிக் காண்பித்து விடுவதும் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படங்களில் இடம்பெறும் பாடல் காட்சிகள் குறித்துப் பலவகை விமர்சனங்கள் உண்டு. பல தமிழ்த் திரைப்படங்களில் பாடல்காட்சிகள் கால நகர்வுக்கான உத்தியாகப் பயன்படுத்தப் படுகின்றன என்பதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். சில பல நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் திரைக்கதையில் கடக்கும் கால நகர்வைப் பாடல்காட்சி ஒன்றைப் புகுத்துவதன் மூலம் மிக எளிமையாக இயக்குநர் பார்வையாளர்களுக்குப் புலப்படுத்தி விடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த்திரைப்படங்களில் ஒரே பாடல் காட்சியில் ஒருத்தி கலெக்டர் ஆகிவிடுவதையும், ஓர் ஏழை பணக்காரன் ஆகிவிடுவதையும் நாம் பலமுறை பார்த்ததுண்டு. விபத்துக்குள்ளான/ நோய்வாய்ப்பட்ட  கதைப் பாத்திரங்கள் பலர் முழுக்குணம் பெறுவதற்கான கால நகர்த்தலைப் பாடல் காட்சிகள்தாம் செய்கின்றன. இத்தகு பாடல் காட்சிகள் அந்தச் செயல்ககளுக்குரிய முழுமையான கால இடைவெளியைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;அன்பே சிவம் திரைப்படத்தில் இடம்பெறும் "யார் யார் சிவம்? அன்பே சிவம்!" என்ற பாடல் காட்சியில் கடுமையான விபத்துக்குள்ளான கதைநாயகன் முழுமையாக குணம்பெறும் நெடியகாலம் கடத்தப்பட்டிருப்பதை இங்கு நினைவில் கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் கௌதமன் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த "வேட்டையாடு விளையாடு" திரைப்படம் காட்சிகளுக்கிடையிலான கால நகர்வை (இட நகர்வையும் சேர்த்து) படம் முழுவதும் எழுத்தில் எழுதிக் (Sub Title) காண்பித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;சான்றாக, கதாநாயகன் விமானத்தில் மதுரை வந்திறங்கி, கொலையைத் துப்புத் துலக்கும் ஒருநாள் நிகழ்ச்சியை விளக்கும் தொடர்ச்சியான காட்சிகளில் காலை 8-30 மணி, காலை 10-30 மணி, மாலை 5-00 மணி எனக் கால நகர்வை எழுத்தில் காண்பித்தது. இந்த உத்தி சற்றேறக்குறைய ஊமைப்படக் கால உத்தி என்றாலும் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தைப் பொறுத்தமட்டில் கதையின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் புதிய உத்தியாகவே பயன்பட்டது. ஏனெனில் கதாநாயகன் துப்பறியும் கதையின் வேகப் போக்குக்கு, வழக்கமான இடையீட்டுக் காட்சிகளால் கால நகர்வை வெளிப்படுத்தும் பழைய முறை பொருத்தமற்றதாக இருக்கலாம் என்று இயக்குநர் கருதியிருப்பார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-8753889020079664488?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/8753889020079664488/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/10/blog-post_15.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/8753889020079664488'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/8753889020079664488'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/10/blog-post_15.html' title='தமிழ்த் திரைப்படங்களில் கால நகர்வுக் குறியீடுகள்'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-2715096457978933797</id><published>2009-10-13T23:44:00.002+05:30</published><updated>2009-10-13T23:51:03.258+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்பட ஆய்வு'/><title type='text'>திரைப்படத்தில் முதல்பொருள்கள்: நிலமும் பொழுதும்.</title><content type='html'>&lt;strong&gt;திரைப்படத்தில் முதல்பொருள்கள்: நிலமும் பொழுதும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;இணைப் பேராசிரியர்&lt;br /&gt;தமிழ்த்துறை&lt;br /&gt;கா.மா.பட்ட மேற்படிப்பு மையம்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt; ஒரு காவியம் எவ்வாறு பல்வேறு காதை, இயல் போன்ற உட்பகுப்புகளால் கட்டப்படுகிறதோ அதேபோல் திரைப்படங்கள் காட்சிகள் என்ற பகுதிகளால் உருவாக்கப்படுகின்றன. காட்சிகள் பல்வேறு ஷாட் களால் (படத்துணுக்கு) உருவாக்கப் படுகின்றன. ஷாட் என்பது திரைப்படக் காட்சியின் அடிப்படை அலகு. அதன் நீளம் வரையறுக்கப் படவில்லை. ஒவ்வொரு ஷாட்டும் ஒவ்வொரு தனித்த துண்டுப் படம்; எந்த வெட்டும் இல்லாமல் தொடர்ந்து படமாக்கப்பட்ட ஒரு படத் துணுக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;காட்சி என்பது திரைப்பட முழுக்கதையின் ஒரு பகுதி. அதில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு நிகழ்த்தப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்வும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்த்தப்படுகிறது. எனவே ஒவ்வொரு நிகழ்வுக்கும் இடம், காலம் என்பன தவிர்க்க முடியாத அங்கங்கள் ஆகின்றன. இடம், காலம் என்ற பின்புலம் இல்லாமல் எந்தவொரு நிகழ்வும் யதார்த்தத்தில் நடப்பதில்லை. திரைப்படங்களிலும் அப்படித்தான்.&lt;br /&gt; &lt;br /&gt;தொல்காப்பிய இலக்கியவியல் கோட்பாட்டின் அடிப்படையில் மேலே சொல்லப்பட்டவற்றைப் பின்வருமாறு விவரிக்கலாம். திரைப்பட முழுமையின் ஒரு பகுதியாக அமையும் காட்சிகளில் நிகழ்த்தப்பெறும் நிகழ்வு 'உரிப்பொருள்' ஆகும். காட்சியின் பின்புலமான இடமும் காலமும் 'முதல்பொருள்'.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;முதல்எனப் படுவது நிலம்பொழுது இரண்டின்&lt;br /&gt;இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே      &lt;/strong&gt;(தொல். பொருள். அகத். நூ. 4)&lt;br /&gt;&lt;br /&gt;காட்சியில் பங்கேற்கும் நடிகர்கள், அரங்கப்பொருள்கள், பின்னணி இசை முதலானவை 'கருப்பொருள்கள்'. தொல்காப்பியரின் முதல், கரு, உரிப்பொருள் கோட்பாடுகளைக் கொண்டு திரைப்படங்களை ஆய்வுக்கு உட்படுத்தமுடியும் என்பது தொல்காப்பிய இலக்கியவியல் கோட்பாடுகளின் பரந்த வீச்சினைப் புலப்படுத்துவதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt; உரிப்பொருளைச் சிறப்பிக்க முதல், கருப்பொருள்கள் எவ்வாறு அகப்பாடல்களில் பயன்பட்டனவோ அதேபோல் திரைப்படக் காட்சிகளைச் சிறப்பிக்க/ முழுமைப்படுத்த இடம், காலம் என்கின்ற முதல்பொருளும் மேலே குறிப்பிடப்பெற்ற கருப்பொருள்களும் பயன்படுகின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-2715096457978933797?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/2715096457978933797/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/10/blog-post_13.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/2715096457978933797'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/2715096457978933797'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/10/blog-post_13.html' title='திரைப்படத்தில் முதல்பொருள்கள்: நிலமும் பொழுதும்.'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-6009695567490306932</id><published>2009-10-09T23:31:00.002+05:30</published><updated>2009-10-09T23:52:09.469+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊடக ஆய்வு'/><title type='text'>தகவல் தொடர்புச் சாதனங்கள்</title><content type='html'>&lt;strong&gt;தகவல் தொடர்புச் சாதனங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;இணைப் பேராசிரியர்,&lt;br /&gt;பட்டமேற்படிப்பு மையம்&lt;br /&gt;புதுச்சேரி-8.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தகவல் தொடர்புச் சாதனங்கள் உலகத்தை ஒரு கிராமமாகச் சுருக்கிவிட்டன. செயற்கைக்கோள்களும் இண்டர்நெட்டும் தகவல் தொடர்பு உலகத்தில் நுழைந்த பிறகு உலகத்தின் எல்லைகள் சுருங்கிக் கொண்டே வருகின்றன. சமீபத்திய வரவான செல்ஃபோன் உலகை உள்ளங்கைக்குள் சுருக்கிவிட்டது. இன்றைய சூழலில் தகவல் தொடர்புச் சாதனங்கள் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து பார்ப்பது கூட இயலாததாகி விட்டது. நாம் இப்போது தொடர்புச் சாதனங்களால் ஆன ஊடகங்களுக்குள் வாழ்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஊடகங்கள் நமக்குத் தகவல்களைத் தருகின்றன. பொழுது போக்க உதவுகின்றன. இத்தோடு ஊடகங்கள் நிறுத்திக் கொள்வதில்லை. நம் வாழ்க்கையை, நம் சிந்தனையை, நம் தேவைகளைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் ஊடகங்களே விளங்குகின்றன.ஊடகங்கள் உலகைப் பற்றிய தகவல்களைச் செய்தியாகவும் பிற வடிவத்திலும் தருவதோடு நிறுத்திக் கொள்வதில்லை. மாறாக உலகை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் அவை சொல்கின்றன. உலக நிகழ்வுகளில் எவை எவை முக்கியத்துவம் உடையவை, எவை எவை முக்கியத்துவம் அற்றவை என்பதையெல்லாம் தீர்மானிக்கும் சக்தியாக ஊடகங்கள் விளங்குகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;நாம் எதைப்பற்றிப் பேச வேண்டும் எதை விட்டுவிட வேண்டும் என்பதை ஊடகங்களே முடிவுசெய்கின்றன. இந்தியாவில் பஞ்சமும் பட்டினிச் சாவுகளும் ஊடகங்களால் புறக்கணிக்கப்படும் போது சராசரி இந்தியனும் இந்த விஷயங்களைப் புறக்கணித்து விடுகிறான். சிவகாசி ஜெயலட்சுமியும் கொலைக் குற்றவாளி காஞ்சி பெரியவாள்களும் ஊடகங்களின் பார்வை வளையத்திற்குள் வரும்போது ஊடகங்களால் தீர்மானிக்கப்படும் சராசரி இந்தியச் சிந்தனையில் இவை விவாதத்திற்குள்ளாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகங்கள் நிகழ்வுகளை, நாம் பார்க்க வேண்டிய கோணங்களை மட்டும் தீர்மானிப்பதில்லை. மாறாக நிகழ்வுகளையே ஊடகங்கள் மாற்றிவிடுகின்றன. ஏனெனில் ஊடகங்கள் சித்தரிப்பவை எல்லாம் உண்மைகள் இல்லை. ஊடகங்கள் தகவல்களை யதார்த்தங்களில் இருந்து உருவாக்குகின்றன, தயாரிக்கின்றன, வெட்டி ஒட்டுகின்றன, கோர்க்கின்றன. அர்த்தங்களை உருவாக்குகின்றன. சான்றாக, சுனாமிப் பேரழிவு. இந்நிகழ்வு ஊடகங்களால் அதாவது வானொலி எழுத்துரைகளால் பத்திரிக்கைச் செய்திகளால் புகைப்படங்களால், தொலைக்காட்சிக் காமிராக்களால் எப்படி உண்மையிலிருந்து உருவாக்கப் படுகின்றன என்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தேர்ந்தெடுத்தல்: எந்தக் காட்சிகளைத் தேர்ந்தெடுப்பது என்பதிலேயே ஊடகங்களின் பணி தொடங்கிவிடுகிறது. எந்த நிகழ்வைக் காட்சியாக்குவது எந்தக் கோணத்தில் காட்சியாக்குவது படங்களோடு இணைக்கப்பட வேண்டிய அல்லது விடப்பட வேண்டிய வார்த்தைகள் எவை எவை என்று தேர்ந்தெடுத்தலும் தொகுத்தலும் (நீக்குதல் இணைத்தல்) கொண்டு நிகழ்வுகள் உருவாக்கப்படுகின்றன. சாதனங்களில் எவையுமே எதேச்சையாகவோ இயற்கையாகவோ இணைந்துவிடுவதில்லை. எல்லாமே திட்டமிட்டுத் தேர்ந்தெடுத்துக் கோர்க்கப்படுகின்றன.இப்படித் தேர்ந்தெடுத்துக் கோர்ப்பதில்தான் அர்த்தங்கள் உருவாக்கப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;சுனாமிப் பேரழிவைக் காட்டும்போது தூக்கி வீசப்பட்ட படகுகள், உருக்குலைந்த குடியிருப்புகள், சிதைந்த உடல்கள் போன்றவற்றைக் காட்டும்போது ஒருவித அர்த்தமும் நிவாரணப் பணிகள் அரசின் உதவிகள் மருத்துவச் சேவைகள் போன்றவற்றைக் காட்டும்போது ஒருவித அர்த்தமும் இரண்டுவிதமான காட்சிகளையும் இணைத்துக் காட்டும்போது வேறுவித அர்த்தமும் உருவாக்கப் படுகின்றன. இவை மட்டுமின்றி பின்னணி இசை, காட்சிகளுக்கான வருணனை, காமிரா கோணம் இவைகளும் அர்த்தங்களைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இப்படிக் கோர்ப்பதும் அர்த்தங்களை உருவாக்குவதும் ஊடகங்களால் எந்த நோக்கத்தில் செய்யப்படுகின்றன என்பது ஒரு முக்கியமான வினா. &lt;br /&gt;&lt;br /&gt;ஊடகங்கள் எல்லாம் நேர்மையானவை என்றோ நடுவுநிலை வகிப்பன என்றோ சொல்லமுடியாது. ஏனெனில் எல்லா ஊடகங்களுக்கும் சார்புகள் உண்டு. பொதுவாக ஊடகங்கள் இந்தியச் சூழலில் உயர்வர்க்கச் சார்புடையதாகவும், உயர்வகுப்புச் சார்புடையதாகவும் இந்துத்துவச் சார்புடையதாகவும் ஆணாதிக்கச் சார்புடையதாகவும் இருக்கின்றமையை நாம் உணர முடியும். விதிவிலக்குகள் உண்டு. இந்தச் சார்புகளை ஊடகங்கள் எவ்வளவுதான் மூடி மறைத்து வைத்தாலும் அவை ஒவ்வொரு ஊடக நிகழ்விலும் வெளிப்பட்டே தீரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-6009695567490306932?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/6009695567490306932/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/10/blog-post_4456.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/6009695567490306932'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/6009695567490306932'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/10/blog-post_4456.html' title='தகவல் தொடர்புச் சாதனங்கள்'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-7218608988240544391</id><published>2009-10-09T19:51:00.000+05:30</published><updated>2009-10-09T19:52:07.692+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>மனிதத் தின்னிகள்</title><content type='html'>&lt;strong&gt;மனிதத் தின்னிகள் &lt;/strong&gt;(மறுபதிப்பு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ - மலையருவி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விரும்பியோ விரும்பாமலோ சில காரியங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் அவை அனிச்சைச் செயல்களைப் போல் ஆகிவிடுகின்றன. காலை சேர விழிப்புக்குப் பின்னர் கண்களும் மனமும் எதையோ தேட ஆரம்பிக்கின்றன. வார்த்தைகளும் படங்களும் காட்சிகளுமாக வீடெங்கும் சிதறிக் கிடக்கின்றன. விழித்தெழுகிற போதெல்லாம் இவைகளின் நடுவிலிருந்துதான் நான் விழிக்கிறேன்.&lt;br /&gt;வீடெங்கும் செய்திக் குப்பைகள். பழைய குப்பைகளை ஒதுக்கி வைத்துவிட்டு புதிய குப்பைகளைத் தேடியது கண்களும் மனமும்.&lt;br /&gt;எப்பொழுதும் போல் அன்றைக்கும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து செய்தி கேட்கத் தொடங்கினேன். செய்தி தொடங்கும் முன்பே கண்களை மீறிக்கொண்டு மனம் தேட ஆரம்பித்தது.&lt;br /&gt;செய்தி தொடங்கியது, முக்கியச் செய்திகள் முடிந்து விரிவான செய்திகளை வாசிக்கத் தொடங்கினார் செய்தி வாசிப்பாளர். செய்தி வாசிப்பவரையே கூர்ந்து கவனித்துப் பார்த்தேன். அது ஒரு மனிதமுகம் என்பதே மறந்துபோய், மனிதஉருவில் வடிவமைக்கப்பட்ட இயந்திரமோ என்ற சந்தேகம் என் மனதில் தோன்றியது. முகத்தின் தசைநார்கள் இறுகி உலோகத்தில் வார்த்தெடுத்தது போலிருந்தது அந்த முகம்.&lt;br /&gt;செய்தி வாசிப்பதும் செய்தி தொடர்பான காட்சிகளுமாக நேரம் கடந்து கொண்டே இருந்தது. வழக்கமான அரசியல் செய்திகள், பதட்டம் நிலவுவதாகவும் பரபரப்பு காணப்படுவதாகவும் நீண்டுகொண்டே இருந்தன. நான் பொறுமையிழந்தேன். சே! என்ன எழவு செய்தி இது? சலிப்பூட்டக் கூடியதாகவும் எரிச்சலூட்டக் கூடியதாகவும் இருந்தது அன்றைய காலைநேரச் செய்தி.&lt;br /&gt;கடைசியாகக் கிடைத்த செய்தி என்று ஏதாவது சொல்லக்கூடும் என்று எதிர்பார்த்திருந்தேன். மீண்டும் தலைப்புச் செய்திகள் என்று செய்தி முடிவுக்கு வந்துவிட்டது.&lt;br /&gt;தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு எழுந்து சோம்பல் முரித்துக் கொண்டேன். குப்பைகளுக்கு நடுவில் இருந்தாலும் அன்றைக்கு அன்றைக்கு புதிய குப்பை இல்லையென்றால், மனம் இயக்கமற்று இருப்பதைப் போலாகிவிடுகிறது. காலை தினசரியைத் தேடி எடுத்துப் புரட்டத் தொடங்கினேன். முதலில் வேகவேகமாக நாளிதழின் முதல் பக்கம் தொடங்கி கடைசிப் பக்கம் வரை ஒரு பார்வை பார்த்துவிட்டு, சுவாரஸ்யமின்றி மீண்டும் முதல் பக்கத்திலிருந்து செய்திகளை மேயத் தொடங்கினேன். செய்தித்தாளில் மனம் ஒன்றவில்லை. பெரிய பெரிய எழுத்துக்களில் எட்டுக்காலம் செய்தியிலிருந்து தொடங்கி ஆறு காலம் செய்தி, நாலு காலம் செய்தி, பெட்டிச் செய்தி என்று உள்ளே இறங்கித் தேடினேன். படங்கள், செய்திகள் என்று பக்கம் பக்கமாகச் செய்திகளைக் கொட்டிக் கவிழ்த்துத் தேடிப் பார்த்து விட்டேன்.&lt;br /&gt;ஏன் இன்றைக்கு என்ன ஆயிற்று?&lt;br /&gt;என்ன செய்திகள் இவை?&lt;br /&gt;இரத்தம், கொலை, சாவு, பிணம் எதுவுமில்லாமல் வெறுமையாய் இருந்தன எழுத்துக்கள், வார்த்தைகள், படங்கள்.&lt;br /&gt;வேறு வழியின்றி பழைய குப்பைகளில் மீண்டும் தேடினேன்.&lt;br /&gt;குவியல் குவியலாய்ப் பிணங்கள். படங்களும் எழுத்துக்களும் வார்த்தைகளுமாய்.&lt;br /&gt;மதக்கலவரத்தில் எட்டு பேர் உயிரோடு எரிப்பு&lt;br /&gt;நிவாரண உதவி வாங்கச் சென்ற நாற்பது பேர் உடல் நசுங்கிச் சாவு&lt;br /&gt;கார் குண்டு வெடிப்பு இருபது பேர் உடல் சிதறி மரணம்&lt;br /&gt;இரத்தம், நிணம், பிய்ந்த சதைத் துண்டங்கள்…&lt;br /&gt;கொலை, சாவு, பிணம்…&lt;br /&gt;பிணவாடை மூக்கைத் துளைத்த பின் எழுந்து என் அன்றாட பணிகளைத் தொடங்கினேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-7218608988240544391?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/7218608988240544391/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/10/blog-post_2862.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/7218608988240544391'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/7218608988240544391'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/10/blog-post_2862.html' title='மனிதத் தின்னிகள்'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-921864477998080487</id><published>2009-10-09T19:46:00.000+05:30</published><updated>2009-10-09T19:48:29.060+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>வீட்டுக்குள் வளர்ந்த விருட்சம்</title><content type='html'>&lt;strong&gt;வீட்டுக்குள் வளர்ந்த விருட்சம் &lt;/strong&gt;(மறுபதிப்பு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ - மலையருவி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யார் அந்த விதையைப் போட்டார்கள் என்றே தெரியவில்லை?&lt;br /&gt;போயும் போயும்&lt;br /&gt;வீட்டு வரவேற்பரையிலா அதைப்போடுவது....&lt;br /&gt;&lt;br /&gt;விதை விழுந்ததை எப்படி கவனிக்காமல் போனோம்&lt;br /&gt;விதை விழுந்ததை மட்டுமா&lt;br /&gt;அது வேர்விட்டு வளர்ந்ததையும் அல்லவா&lt;br /&gt;கவனிக்கத் தவறிவிட்டோம்&lt;br /&gt;&lt;br /&gt;தொலைக்காட்சி பெட்டி வரவேற்பரைக்கு வந்த பிறகுதான்&lt;br /&gt;அது நடந்திருக்க வேண்டும்&lt;br /&gt;அநேகமாக கேபிள் ஒயரோடு&lt;br /&gt;அந்த ஆலம் விதை வந்திருக்க வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;என்ன அசுர வளர்ச்சி&lt;br /&gt;வந்த சில மாதங்களிலேயே&lt;br /&gt;வேர்விட்டு... விழுதுகளைப் பரப்பி&lt;br /&gt;வரவேற்பரை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு&lt;br /&gt;வளர்ந்து செழித்தது ஆலமரம்&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கோ நண்பர்களுக்கோ&lt;br /&gt;எங்கள் முகம் தெரியாமல்&lt;br /&gt;அவர்கள் முகங்களைக் காட்டாமல்&lt;br /&gt;அது வியாபித்திருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக் குழந்தைகள் விளையாட இடந்தராமல்&lt;br /&gt;குறுக்கும் நெடுக்குமாய்க் கிளைகளைப் பரப்பி&lt;br /&gt;கண்டபடி வளர்ந்து காடாக மண்டிவிட்டது&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் பல சமயங்களில்&lt;br /&gt;நாங்களே ஒருவரை பார்க்க முடியாமல்&lt;br /&gt;பேசிக்கொள்ள முடியாமல்&lt;br /&gt;இடத்தை அடைத்துக் கொண்டு&lt;br /&gt;இருப்பிடத்தை இருட்டாக்கி விட்டது&lt;br /&gt;&lt;br /&gt;யார் அந்த விதையைப் போட்டார்கள் என்றே தெரியவில்லை?&lt;br /&gt;போயும் போயும்&lt;br /&gt;வீட்டு வரவேற்பரையிலா அதைப்போடுவது....&lt;br /&gt;&lt;br /&gt;வரவேற்பரையும் போதாமல்&lt;br /&gt;சில கிளைகள்&lt;br /&gt;படுக்கைஅறையையும்&lt;br /&gt;எட்டிப் பார்த்து அச்சமூட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆலமரத்தின் விழுதுகளுக்கிடையே&lt;br /&gt;வேர் முடிச்சுகளில் சிக்கி&lt;br /&gt;கிளைகளின் ஊடே இருகிய முகங்களோடு&lt;br /&gt;விழிகள் நிலைகுத்தி&lt;br /&gt;உறைந்து போகிறோம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-921864477998080487?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/921864477998080487/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/10/blog-post_4544.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/921864477998080487'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/921864477998080487'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/10/blog-post_4544.html' title='வீட்டுக்குள் வளர்ந்த விருட்சம்'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-6166369916316942243</id><published>2009-10-09T19:42:00.001+05:30</published><updated>2009-10-09T19:46:10.237+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>உள்ளங்கையும் கட்டை விரலும்</title><content type='html'>&lt;strong&gt;உள்ளங்கையும் கட்டை விரலும் &lt;/strong&gt;(மறுபதிப்பு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ - மலையருவி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலக உருண்டை&lt;br /&gt;உள்ளங்கைக்குள் ஒடுங்கிப் போனது&lt;br /&gt;&lt;br /&gt;கை நீட்டிக் குரலெடுத்து&lt;br /&gt;அழைத்ததெல்லாம் போய்&lt;br /&gt;கட்டை விரலால் அழைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;கண்களைப் பிடுங்கி எறிந்துவிட்டு&lt;br /&gt;விரல்களாலே&lt;br /&gt;தடவித் தடவி அழைப்பு&lt;br /&gt;ஓயா அழைப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;முகங்கள்&lt;br /&gt;உருண்டையாய் நீண்டதாய்&lt;br /&gt;தட்டையாய் கோணலாய்&lt;br /&gt;அழகாய் விகாரமாய்&lt;br /&gt;எத்தனை எத்தனை முகங்கள்&lt;br /&gt;எல்லாம் கரைந்து&lt;br /&gt;0 1 2 3 4 5 6 7 8 9&lt;br /&gt;எண்களில் அமிழ்ந்து போயின&lt;br /&gt;&lt;br /&gt;முகங்களற்ற உலகில்&lt;br /&gt;வெட்டவெளியில்&lt;br /&gt;மிரட்டல்கள் கோபங்கள்&lt;br /&gt;சவால்கள் சமாதானங்கள்&lt;br /&gt;கொஞ்சல்கள் கெஞ்சல்கள்&lt;br /&gt;மௌனங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பிரபஞ்சமே&lt;br /&gt;உதடுகளில் தொடங்கி&lt;br /&gt;செவிகளில் முடிந்து போனது&lt;br /&gt;கண்கள் மட்டும் களவு போயின.&lt;br /&gt;&lt;br /&gt;எதிரே&lt;br /&gt;உறவும் நட்பும்&lt;br /&gt;முகங்களைக் காணோம்&lt;br /&gt;எண்கள்… எண்கள்…&lt;br /&gt;கட்டைவிரல்&lt;br /&gt;உள்ளங்கையில் தடவத் தொடங்கியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-6166369916316942243?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/6166369916316942243/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/10/blog-post_09.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/6166369916316942243'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/6166369916316942243'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/10/blog-post_09.html' title='உள்ளங்கையும் கட்டை விரலும்'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-4743055453993658634</id><published>2009-10-09T18:06:00.000+05:30</published><updated>2009-10-09T18:19:01.031+05:30</updated><title type='text'>ஊடக வாசல்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/Ss8wo4LGKWI/AAAAAAAAAHk/QrbwCIS9KXI/s1600-h/penmaram.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 306px;" src="http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/Ss8wo4LGKWI/AAAAAAAAAHk/QrbwCIS9KXI/s320/penmaram.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5390580757817600354" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலைப் பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் வணக்கம்! என்னுடைய வலைப்பதிவுப் பயணத்தில் நான்காவது தடம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வலைப்பதிவு தகவல் தொடர்பியல் சார்ந்தது. புதுவையைச் சார்ந்த செய்திகள், விழாக்கள், நிகழ்ச்சி அறிவிப்புகள், நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள், ஊடகங்கள் சார்ந்த தகவல்கள், குறிப்புகள், கட்டுரைகள் என விரியும். தொடர்ந்து உங்கள் பார்வையைப் படர்க்கையின் பக்கமும் செலுத்துங்கள். நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;முனைவர் நா.இளங்கோ&lt;br /&gt;புதுச்சேரி&lt;br /&gt;இந்தியா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5574512445928592962-4743055453993658634?l=munaivarilango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://munaivarilango.blogspot.com/feeds/4743055453993658634/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/10/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/4743055453993658634'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5574512445928592962/posts/default/4743055453993658634'/><link rel='alternate' type='text/html' href='http://munaivarilango.blogspot.com/2009/10/blog-post.html' title='ஊடக வாசல்'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/Ss8wo4LGKWI/AAAAAAAAAHk/QrbwCIS9KXI/s72-c/penmaram.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry></feed>
