Tuesday 13 July 2010

அருக்கன்மேட்டு பிராமி எழுத்துக்கள் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி -6

அருக்கன்மேட்டு பிராமி எழுத்துக்கள்

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

அருக்கன்மேட்டு பிராமி எழுத்துக்கள்



அருக்கன்மேட்டில் கிடைத்த புதைபொருட் சின்னங்களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. பழந்தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளே. அருக்கன்மேட்டுப் பானை ஓடுகளில் சில பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
‘யாடு வளபூதியின் பானை’ என்ற பிராமி எழுத்துக்கள் இடப்பட்ட பானைஓடு ஒன்று அருக்கன்மேட்டில் கிடைத்துள்ளது. (அ. இராமசாமி, புதுச்சேரி வரலாறு, ப. 19)

இப் பானைகளில் காணப்படும் எழுத்துக்கள் கி.மு. 2 முதல் கி.பி. 2 வரையிலான தமிழகப் பாறைக் கல்வெட்டுக்களில் காணப்படும் பிராமி எழுத்துக்களே.

பிராமி எழுத்துக்களைக் கண்டுபிடித்தவர் பகவான் புத்தர் என்ற நம்பிக்கையுண்டு. மாமன்னர் அசோகர் தொடங்கி பௌத்தர்களே இந்தியா முழுவதிலும் பிராமி எழுத்தைப் பரவலாக உபயோகத்திற்குக் கொண்டுவந்தார்கள் என்பதில் ஐயமில்லை. அருக்கன்மேட்டுப் பானை ஓடுகளில் பிராமி எழுத்துக்களின் உபயோகம் பௌத்தர்களாலேயே நடைமுறைப் படுத்தப்பட்டது என்று கருதவும் வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...