Tuesday 21 May 2019

சமணப் பாறைச் சிற்பங்கள்: உத்தமபாளையம்

முனைவர் நா.இளங்கோ

தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி-8

27-02-2019
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்- கம்பம் சின்னமனூர் இடையிலான ஊர்)
இப்பகுதியில் அச்சநந்தி என்ற சமணத்துறவியார் தலைமையில் சமணர்கள் பலர் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் குடியேறினர். 
குடியேறிய சமணத்துறவிகள் இப்பகுதியை சமணப் பள்ளியாகவே மாற்றினார்கள். இப்பகுதியில் உள்ள மலையைக் குடைந்து குடிநீருக்குச் சுணைகளை உருவாக்கி (சுனை இப்பொழுதும் வற்றாமல் நீர்நிரம்பி உள்ளது) இங்கேயே குடிஅமர்ந்தனர்.
இங்கு 23ஆம் தீர்த்தங்கரர் பார்சுவநாதர், 24ம் தீர்த்தரங்கரர் மகாவீரர் ஆகிய இருவரது திருவுருவங்கள் உள்ளன முதல் வரிசையில் ஆறு சிற்பங்களும், இரண்டாம் வரிசையில் எட்டுச் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் நீளம் இருபது அடி. உயரம் பத்து அடியாகும்.
இங்குள்ள பாறைச் சிற்பங்களில் கனகநந்தி, அரிட்டனேமி என்ற பெயரும் 23ம் தீர்த்தங்கரர் பார்சுவநாதர், 24ம் தீர்த்தங்கரர் மகாவீரரின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
பார்சுவநாதர் தலைக்கு மேல்மூன்று பலதலைகள் கொண்ட நாகம் உள்ளது. மகாவீரர் தலைக்கு மேல் முக்குடை செதுக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் வெண்சாமரம் வீசும் பெண் சிற்பங்களும் உண்டு.
இந்தச் சிற்பங்களுக்கு அருகில் தமிழ் வட்டெழுத்துக்களால் ஆன சில கல்வெட்டுகள் உள்ளன. அதில் அரட்டணமி, அஜநந்தி ஆகிய சமண முனிவர்களின் பெயர்கள் உள்ளன.
இதில் அஜநந்தா என்பவர் பெயர் அப்போது பாண்டிய நாட்டில் இருந்த சமணக்கோயில்கள் அனைத்திலும் இருந்துள்ளது. மேலும் 9-ம் ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னன் சடையன்மாறன் பெயரும் தனியாகப் பொறிக்கப்பட்டுள்ளது.





முனைவர் நா.இளங்கோ - களஆய்வு

மேகமலை -ஹைவேவிஸ் -மலைப்பயணம்

முனைவர் நா.இளங்கோ

தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி-8

27-02-2019
தேனி மாவட்டம் சின்னமனூரிலிருந்து சுமார் முப்பது கி.மீ. தூரத்தில் இருக்கிறது மேகமலை. உயர்ந்த மலைகள் மிக ஆழமான பள்ளத்தாக்கு, அழகிய ஏரிப்பகுதிகள் என இயற்கை அழகுக் கொட்டிக் கிடக்கும் இடம் இது.
எட்டுத்திசையும் மலைச்சிகரங்களால் சூழப்பட்ட இயற்கையான பசுமைப் பள்ளத்தாக்கே மேகமலை. மேகமலை தமிழ்நாட்டில் உள்ள மலைவாச தலங்களில் சிறந்த நிலஅமைப்பு கொண்டது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் உள்ள இம்மலை முழுவதும் 'மேகங்களால் சூழப்பட்டு மேகங்களின் தொட்டிலாக விளங்குவதால் மேகமலை' என்று பெயர் பெற்றதுபோலும்.
பசுமையான நிலப்பரப்புடன் வானுயுர்ந்த மரங்களுடன் மிக அடர்த்தியாக காணப்படுகிறது இந்த வனப்பகுதி.
ஆரம்ப காலங்களில் மேகமலை - ஹைவேவிஸ் மலைப்பாதை இங்குள்ள தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனம் (லிப்டன் கம்பெனி) ஒன்றின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த நிறுவனம் இந்தப் பாதையை சரியாகப் பராமரிக்க முடியாததால் தமிழக அரசின் மாவட்ட நிர்வாகத்திடம் சாலைப் பராமரிப்பை ஒப்படைத்தது. தற்போது ஹைவேவிஸ் வரை, அங்கே புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேகமலையை அடுத்து ஹைவேவிஸ் உள்ளது. அங்கே பசுமை பரவிக்கிடக்கும் தேயிலைத் தோட்டங்கள் மிகுதியாக உள்ளன. இங்கிருந்து மணலாறு ஏரியின் தோற்றத்தைக் கண்டு ரசிக்கலாம். மலை முகடுகளுக்கு மத்தியில் ஹைவேவிஸ் அணை உள்ளது. இந்த அணையில் தேக்கப்படும் நீர் மேல்மணலாறு வழியாக இரவங்கலாறு அணைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. ஹைவேவிஸ்ஸில் இருந்து 6 கி.மீ. தொலைவில் மேல்மணலாறு பகுதியில் வட்டப்பாறை என்ற இடம் உள்ளது. இங்கிருந்து வன விலங்குக் கூட்டங்களைக் கண்டு களிக்கலாம். இதற்கு அருகில் வெண்ணியாறு அணை, எக்கோ பாயின்ட் ஆகிய இடங்கள் உள்ளன.
ஹைவேவிஸ்ஸில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள இரவங்கலாறு அணையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கியிருக்கும். ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு அணைகளில் இருந்து இரவங்கலாறு அணைக்குத் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, சுருளி மின் உற்பத்தித் திட்டத்திற்குக் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இரவங்கலாறு அணை அருகில் இரவங்கலாறு அருவி உள்ளது. இந்த அருவியில் ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நீர்வரத்து இருக்கும்.

முனைவர் நா.இளங்கோ - லியாகத் அலி

முனைவர் நா.இளங்கோ - மேகமலை

மேகமலை

மேகமலைப் பயணம்
மேகமலைப் பயணத்தில் நானும் நண்பர் லியாகத் அலியும் உடன் வந்த பேராசிரியர் பழனிவேலு மற்றும் ஓட்டுநர் சித்திக் நால்வரும் இயற்கை அழகை ரசிப்பதோடு மட்டுமல்லாமல் அங்கே தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களோடும் கொஞ்சம் அளவளாவினோம்.
மேகமலையின் தேயிலைத் தோட்டங்கள் தொடக்கத்தில் லிப்டன் கம்பெனி வசம் இருந்தன. அப்போது தொழிலாளர் களுக்குத் தேவையான மருத்துவம், கல்வி, குடிநீர், சாலைப் போக்குவரத்து முதலான அனைத்து வசதிகளையும் கம்பெனி நிர்வாகமே செய்து வந்தது.
பின்னர் நிர்வாகம் பல கைகளுக்கு மாறிவிட்டன. இந்த நிர்வாக மாற்றங்களால் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகளுக்கே திண்டாட வேண்டிய நிலைமையாகி விட்டது. இப்போது எல்லாவற்றிற்கும் அரசை எதிர்ப்பார்க்க வேண்டிய அவல நிலை. நீண்ட போராட்டத்திற்குப் பின் மொத்தம் உள்ள 48 கிமீ மலைப் பாதையில் சுமார் 35 கிமீ சாலை இப்போதுதான் சீரமைக்கப்பட்டுள்ளது என அறிந்தோம்.
மேகமலையில் சிஎஸ்ஐ நடத்தும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளி ஒன்றிற்கு நாங்கள் நால்வரும் சென்றிருந்தோம். தலைமை ஆசிரியை முத்துமணி, இந்தப் பள்ளியில் மிகக் குறைந்த அளவிலேயே பிள்ளைகள் படிப்பதாகச் சொன்னார். அந்தப் பகுதி தொழிலாளர் குடியிருப்பில் சுமார் 200 குடும்பங்கள் இருந்தும் அவர்களில் பல பிள்ளைகள் படிக்க வருவதில்லை என்றே தெரிகிறது.
இந்த இடத்தில் தோழர் லியாகத் அலியின் பின்வரும் பதிவைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்
-----------------------------------------------------------
இந்த குழந்தைகளுக்கும் சேர்த்துத்தான் ஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்கிறார்கள் மேதாவிகள்.
இன்னும் கல்விக்குச் சலுகை காட்ட வேண்டிய நிலை இங்கிருக்க, 25 மாணவர்களுக்குக் குறைவாக இருக்குற பள்ளிக்கூடத்தை மூடுங்கிறியே, அப்படி செஞ்சா இந்த பயபுள்ளைக எந்த இன்டர்நேஷனல் ஸ்கூலுக்குப் போகும்.
---------------------------------------------------------------
முனைவர் நா.இளங்கோ - மேகமலை பள்ளிச் சிறார்களுடன்

மேகமலைக் குடியிருப்பு

மேகமலை

மேகமலையில் சிஎஸ்ஐ (CSI) நடத்தும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளி ஒன்றிற்கு நாங்கள் சென்றிருந்தோம். தலைமை ஆசிரியை இந்தப் பள்ளியில் மிகக் குறைந்த அளவிலேயே பிள்ளைகள் படிப்பதாகச் சொன்னார். அந்தப் பகுதியில் தொழிலாளர் குடியிருப்பில் சுமார் 200 குடும்பங்கள் இருந்தும் அவர்களில் பல பிள்ளைகள் படிக்க வருவதில்லை என்றே தெரிகிறது.
அங்கே வகுப்பறையில் அமர்ந்திருந்த குழந்தைகளோடு கொஞ்சநேரம் பேசினோம். அவர்களுக்குத் தெரிந்த கதை, பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தோம்.
ஒரு பாடல் பாடுங்கள் என்று நான் கேட்டவுடனே குழந்தைகள் குழுவாக ஔவையாரின் "சாதி இரண்டொழிய வேறில்லை" என்ற பாடலைப் பாடினார்கள். (காணொலி இணைத்துள்ளேன்) வேறென்ன சொல்ல.. மகிழ்ச்சி.. மிக மகிழ்ச்சி...
நாளைய இந்தியா இவர்கள்தான்.
இங்கே இரண்டே சாதிதான்.
கல்வி கொடுப்பவர் பெரியோர்.
தடுப்பவர் இழிகுலத்தார்..


முனைவர் நா.இளங்கோ - மேகமலை பள்ளிச் சிறார்களுடன்

முனைவர் நா.இளங்கோ - மேகமலை பள்ளிச் சிறார்களுடன்

ஜென்ஜாரோம் "தொங் ஜென் புத்த ஆலயம் - மலேசியா

ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளிக்குச் சிறப்பு விருந்தினர்களாக எங்களை அழைத்துச் சென்ற இனிய நண்பர் பொன்.பெருமாள் அடுத்ததாக எங்களுக்குக் காண்பித்து மெய்மறக்கச் செய்த இடம் மலேசியா, சிலாங்கூர், ஜென்ஜாரோம் "தொங் ஜென் புத்த ஆலயம்".
இனிய நண்பர்கள் முனைவர் இரத்தின.வேங்கடேசன், பொன்.பெருமாள் இவர்களோடு முனைவர் நா.இளங்கோ. 23-04-2019

முனைவர் நா.இளங்கோ - இரத்தின வேங்கடேசன் - ஜென்ஜாரோம்

முனைவர் நா.இளங்கோ - பொன்.பெருமாள் - ஜென்ஜாரோம்

முனைவர் நா.இளங்கோ - ஜென்ஜாரோம்

முனைவர் நா.இளங்கோ - புத்தர் ஆலயம், ஜென்ஜாரோம்

முனைவர் நா.இளங்கோ - இரத்தின வேங்கடேசன் - ஜென்ஜாரோம்

மலேசிய சிலாங்கூர் மாவட்டம் ஜென்ஜாரோமில் 26 ஏக்கர் பரப்பளவில் தொங்ஜென் புத்தர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கட்டப்பட்ட ஆண்டு 1994. Dong Zen (தொங் ஜென்) என்பதற்கு "கிழக்கின் அமைதியான மனம்" என்பது பொருளாகும்.
இவ்வாலயம் தென் கிழக்கு ஆசியாவின் மிக முக்கியமான பௌத்த ஆய்வு மையமாகவும் பௌத்தம் சார்ந்த வரலாறு மற்றும் கலைகளின் காட்சிக் கூடமாகவும் அமைந்துள்ளது. இவ்வளாகத்தில் அமைந்துள்ள லும்பினி தோட்டமும் பெளத்தச் சிற்பங்களும் தனிச் சிறப்பு பெற்றவைகளாகும்.
இவ்விடத்தை ஆலயம் என்பதா? அழகான தோட்டம் என்பதா? சிற்பக் கலைக்கூடம் என்பதா? ஆவணக் காப்பகம் என்பதா? பௌத்தக் கல்வி ஆய்வு வளாகம் என்பதா? வியப்பில் ஆழ்த்தியது தொங் ஜென் ஆலயம்.
அன்பு நண்பர் பொன்.பெருமாளுக்கு நன்றி! 23-04-2019

முனைவர் நா.இளங்கோ - புத்தர் ஆலயம், ஜென்ஜாரோம்

முனைவர் நா.இளங்கோ - புத்தர் ஆலயம், ஜென்ஜாரோம்

முனைவர் நா.இளங்கோ - புத்தர் ஆலயம், ஜென்ஜாரோம்

புத்தர் ஆலயம், ஜென்ஜாரோம்

தொங் ஜென் புத்த ஆலயம் (மலேசியா, சிலாங்கூர், ஜென்ஜாரோம்) 23-04-2019.
புத்தர் ஆலயம், ஜென்ஜாரோம்

புத்தர் ஆலயம், ஜென்ஜாரோம்

ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி - இலக்கிய நிகழ்ச்சி. 23-04-2019

கோலாலம்பூர் இனிய நண்பர் பொன்.பெருமாள் ஏற்பாட்டில் மலேசியா, சிலாங்கூர் கோலாலங்காட் ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கணேஷ் இராமசாமி தலைமையில், முனைவர் நா.இளங்கோ, முனைவர் இரத்தின.வேங்கடேசன் இருவரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற இலக்கிய நிகழ்ச்சி. (23-04-2019 முற்பகல்)


முனைவர் நா.இளங்கோ - மலேசியா தமிழ்ப் பள்ளி


முனைவர் நா.இளங்கோ - மலேசியா தமிழ்ப் பள்ளி

முனைவர் நா.இளங்கோ - மலேசியா தமிழ்ப் பள்ளி

முனைவர் நா.இளங்கோ - மலேசியா தமிழ்ப் பள்ளி

முனைவர் நா.இளங்கோ - மலேசியா தமிழ்ப் பள்ளி


மலேசியா, சிலாங்கூர் ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளியில் முனைவர் நா.இளங்கோ, முனைவர் இரத்தின.வேங்கடேசன் இருவரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற இலக்கிய நிகழ்ச்சியில் ஸ்ரீதுர்காசினி, நான்காம் வகுப்பு மாணவியின் சுவையான தமிழ்ப் பேச்சு. (23-04-2019 முற்பகல்)
(நல்லதோர் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த இனிய நண்பர் பொன்.பெருமாள் ஐயாவுக்கு நன்றி!)

முனைவர் நா.இளங்கோ - மலேசியா தமிழ்ப் பள்ளி

மலேசியா தமிழ்ப் பள்ளி

சிலோசா கோட்டை - சென்தோசா தீவு சிங்கப்பூர். (22-04-2019)

முனைவர் நா.இளங்கோ

சிலோசா கோட்டை - சென்தோசா தீவு
சிங்கப்பூர். (22-04-2019)
இந்த ஆண்டு சிங்கப்பூர் பயணத்தில் சிலோசா கோட்டை மற்றும் அதன் அருங்காட்சியகத்தைப் பார்க்கும் வாய்ப்பினை இனிய நண்பர் இரத்தின வேங்கடேசன் ஏற்படுத்தித் தந்தார். எங்களோடு முனைவர் இரத்தின. வேங்கடேசன் துணைவியார் தமிழ்மாலை மற்றும் மகன் தமிழ்மாறன் இருவரும் வந்தனர்.
சென்தோசா சிங்கப்பூரின் தெற்கு முனையில் உள்ள ஒரு குட்டித் தீவு ஆகும். இத்தீவின் பழைய பெயர் "புலாவ் பெலகாங் மாடி" இப்பெயரின் பொருள் மரணத் தீவு என்பதாகும். இப்பொழுது அமைதித் தீவு என்று பொருள்படும் "சென்தோசா" என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
தொடக்கத்தில் இத்தீவு பிரிட்டிசாரின் இராணுவத் தளமாகவும் பின்னர் இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய போர்க்கைதிகளின் முகாமாகவும் இருந்தது 1972 முதல் இத்தீவு ஒரு சுற்றுலாத் தளமாக மாற்றம் பெற்றது. இன்றைக்கு சிங்கப்பூர் சுற்றுலா மிக முக்கிய அங்கமாக சென்தோசா தீவு வளர்ச்சி பெற்றுள்ளது.
சென்தோசா தீவில் உள்ள சிலோசா கோட்டையை அடைய தற்போது மிதக்கும் பாலத்தை அமைத்துள்ளனர். அந்தப் பாலத்தில் நடந்து கோட்டையை அடைவதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம்
முனைவர் நா.இளங்கோ - சிங்கப்பூர் சிலோசா கோட்டை

முனைவர் நா.இளங்கோ - சிங்கப்பூர் சிலோசா கோட்டை



முனைவர் நா.இளங்கோ - சிங்கப்பூர் சிலோசா கோட்டை

சிங்கப்பூர் சிலோசா கோட்டை

சிலோசா கோட்டை - சிங்கப்பூர் (22-04-2019)
செந்தோசாவின் அடையாளங்களில் மிக முக்கியமானது இத்தீவில் உள்ள சிலோசா கோட்டை. சிலோசா என்ற சொல்லுக்குப் பாறை என்பது பொருள். சிலோசா கோட்டை 1874இல் கட்டப்பட்டது.
இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிசாரின் ஜப்பானியர்களுக்கு எதிரான இராணுவத் தாக்குதல் கோட்டையாகவும் ஆயுதக் கிடங்காகவும் இருந்த சிலோசா கோட்டை தற்போது 1974 முதல் இரண்டாம் உலகப் போரின் அடையாளங்களைச் சுமந்த போர் நினைவிடமாக மாற்றம் பெற்றுள்ளது. போரில் பயன்படுத்தப் பெற்ற பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகள் இங்கே காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. ஏழு அங்குலத் துப்பாக்கிகள் முதல் 19 அங்குலத் துப்பாக்கிகள் இங்கே இடம் பெற்றுள்ளன.


முனைவர் நா.இளங்கோ - சிங்கப்பூர் சிலோசா கோட்டை

சிங்கப்பூர் சிலோசா கோட்டை

முனைவர் நா.இளங்கோ - சிங்கப்பூர் சிலோசா கோட்டை

முனைவர் நா.இளங்கோ - சிங்கப்பூர் சிலோசா கோட்டை


செந்தோசாவின் அடையாளங்களில் மிக முக்கியமானது சிலோசா கோட்டையும் அதன் போர் நினைவு அருங்காட்சியகமும். எளிதில் பார்க்க முடியாத இரண்டாம் உலகப் போரின் போர்த் தளவாடங்களும் பீரங்கிகளும் அரிய புகைப்படங்களும் இந்த அருங்காட்சி யகத்தில் இடம்பெற்றுள்ளன.

முனைவர் நா.இளங்கோ - சிங்கப்பூர் சிலோசா கோட்டை

 சிங்கப்பூர் சிலோசா கோட்டை

சிங்கப்பூர் சிலோசா கோட்டை

சிங்கப்பூர் சிலோசா கோட்டை

சிங்கப்பூர் சிலோசா கோட்டை

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...