Tuesday 21 May 2019

சமணப் பாறைச் சிற்பங்கள்: உத்தமபாளையம்

முனைவர் நா.இளங்கோ

தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி-8

27-02-2019
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்- கம்பம் சின்னமனூர் இடையிலான ஊர்)
இப்பகுதியில் அச்சநந்தி என்ற சமணத்துறவியார் தலைமையில் சமணர்கள் பலர் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் குடியேறினர். 
குடியேறிய சமணத்துறவிகள் இப்பகுதியை சமணப் பள்ளியாகவே மாற்றினார்கள். இப்பகுதியில் உள்ள மலையைக் குடைந்து குடிநீருக்குச் சுணைகளை உருவாக்கி (சுனை இப்பொழுதும் வற்றாமல் நீர்நிரம்பி உள்ளது) இங்கேயே குடிஅமர்ந்தனர்.
இங்கு 23ஆம் தீர்த்தங்கரர் பார்சுவநாதர், 24ம் தீர்த்தரங்கரர் மகாவீரர் ஆகிய இருவரது திருவுருவங்கள் உள்ளன முதல் வரிசையில் ஆறு சிற்பங்களும், இரண்டாம் வரிசையில் எட்டுச் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் நீளம் இருபது அடி. உயரம் பத்து அடியாகும்.
இங்குள்ள பாறைச் சிற்பங்களில் கனகநந்தி, அரிட்டனேமி என்ற பெயரும் 23ம் தீர்த்தங்கரர் பார்சுவநாதர், 24ம் தீர்த்தங்கரர் மகாவீரரின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
பார்சுவநாதர் தலைக்கு மேல்மூன்று பலதலைகள் கொண்ட நாகம் உள்ளது. மகாவீரர் தலைக்கு மேல் முக்குடை செதுக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் வெண்சாமரம் வீசும் பெண் சிற்பங்களும் உண்டு.
இந்தச் சிற்பங்களுக்கு அருகில் தமிழ் வட்டெழுத்துக்களால் ஆன சில கல்வெட்டுகள் உள்ளன. அதில் அரட்டணமி, அஜநந்தி ஆகிய சமண முனிவர்களின் பெயர்கள் உள்ளன.
இதில் அஜநந்தா என்பவர் பெயர் அப்போது பாண்டிய நாட்டில் இருந்த சமணக்கோயில்கள் அனைத்திலும் இருந்துள்ளது. மேலும் 9-ம் ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னன் சடையன்மாறன் பெயரும் தனியாகப் பொறிக்கப்பட்டுள்ளது.





முனைவர் நா.இளங்கோ - களஆய்வு

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...